NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

    இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

    எழுதியவர் Sindhuja SM
    Dec 23, 2023
    05:00 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியப் பெருங்கடலில் பயணித்து கொண்டிருந்த ஒரு வணிக கப்பல் மீது இன்று ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டது.

    ஆனால், இதனால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சவுதி அரேபியாவில் உள்ள துறைமுகத்தில் இருந்து மங்களூரு நோக்கி கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற அந்த கப்பலின் பெயர் எம்வி செம் புளூட்டோவாகும்.

    இந்திய பெருங்கடல் வழியாக சென்று கொண்டிருந்த போது அந்த கப்பல் மீது உரிமை கோரப்படாத தாக்குதல் நடத்தப்பட்டது என்று பிரித்தானிய இராணுவத்தின் நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.

    லைபீரியாவின் கொடியை ஏந்திய அந்த கச்சா எண்ணெய் டேங்கர் கப்பல் இஸ்ரேலை சேர்ந்ததாகும்.

    டிஃவ்ஜ்

    போர்பந்தர் கடற்கரை அருகே தீ விபத்து 

    20 இந்தியர் அடங்கிய பணியாளர்கள் அந்த கப்பலில் இருந்தனர் என்றும், இதனையடுத்து இந்திய கடலோர காவல்படையின் கப்பல், தாக்கப்பட்ட கப்பலுக்கு உதவ சென்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போர்பந்தர் கடற்கரையில் இருந்து 217 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது,

    இந்திய பெருங்கக்கடல் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடலோரக் காவல்படை கப்பல், ஐசிஜிஎஸ் விக்ரம், ஆபத்தில் இருந்த வணிகக் கப்பலுக்கு உதவ சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    பாதிக்கப்பட்ட கப்பலுக்கு உதவுமாறு அப்பகுதியில் உள்ள அனைத்து கப்பல்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கியுள்ளதாக பிரித்தானிய இராணுவத்தின் நிறுவனமான ஆம்ப்ரே தெரிவித்துள்ளது.

    இந்த விபத்தால் கப்பலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும் பணியாளர்கள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    கடற்படை

    சமீபத்திய

    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025
    உக்ரைன் போர் நிறுத்தத்திற்கு தயார்: அமெரிக்கா அதிபர் டிரம்ப் உடன் பேசிய ரஷ்யா அதிபர் புடின் ரஷ்யா
    உங்கள் ஏரியாவில் நாளை (மே 21) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    இந்தியா

    இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்கூட்டர் விற்பனை  ஸ்கூட்டர்
    இந்தியாவில் மேலும் 335 பேருக்கு கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 5 பேர் பலி  கொரோனா
    கனடா மற்றும் அமெரிக்காவின் கொலை குற்றசாட்டுகள் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர்  எஸ்.ஜெய்சங்கர்
    கோ பர்ஸ்ட் நிறுவனத்தை வாங்க விருப்பம் தெரிவித்திருக்கும் ஸ்பைஸ்ஜெட் விமான சேவைகள்

    கடற்படை

    வரலாறு படைத்த INS விக்ராந்த்: முதன்முதலில் விகாரந்த் கப்பலில் தரையிறங்கிய ஜெட் இந்தியா
    மீன்பிடி பைபர் படகில் கடத்திவரப்பட்டு கடலில் வீசப்பட்ட மர்ம பொருள்-விசாரணையில் தங்கம் என தகவல் இலங்கை
    ராமேஸ்வர கடலில் வீசப்பட்ட கடத்தல் தங்கக்கட்டிகள்-12 கிலோ தங்கம் பறிமுதல் ராமேஸ்வரம்
    தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படை - மத்தியமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் இலங்கை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025