காரின் பிரேக்கிற்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்திய ஓட்டுநர் - பலியான பாதசாரி
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அதிவேகமாக காரினை ஒட்டி வந்த ஜெயக்குமார் என்பவர், அவ்வழியே நடந்துச்சென்ற பழனி என்பவர் மீது பயங்கரமாக மோதியுள்ளார். இதில் பழனி சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்த சிசிடிவி பதிவுகள் வெளியான நிலையில், காவல்துறை ஜெயக்குமாரை கைது செய்துள்ளது. அதன்பின்னர் ஜெயகுமாரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், பிரேக்'க்கு பதில் ஆக்சிலேட்டரை அழுத்தியதால் கார் கட்டுப்பாடு இழந்து விபத்து ஏற்பட்டது என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இந்நிலையில் சென்னை காவல் ஆணையர் இதுகுறித்து கூறுகையில், 'இந்த விபத்து மிகவும் வேதனையளிக்கும் ஒன்றாகும்' என்று கூறியுள்ளார். மேலும், எல்-போர்டு ஓட்டுநர் ஜெயகுமாருக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் கூறியுள்ளார்.