NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்
    சென்னையில் குடிநீர் கட்டணம் உயருகிறது

    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்

    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023
    05:39 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியே தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

    ஏரிகளில் இருந்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமும் சென்னைவாசிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது.

    இந்நிலையில், இந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்கு வருடாவருடம் ரூ. 885 கோடி வருவாய் வருவதாக கூறப்படுகிறது.

    அதன்படி குடிநீர் கழிவுநீர் வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலம் ரூ.505 கோடியும், மற்ற உள்ளாட்சிகள், தொழில்சாலைகள், லாரி குடிநீர் வழியாக ரூ.380 கோடியும் வருகிறதாம்.

    வட்டி வசூலிப்பதிலும் மாறுதல்

    கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும்

    மேற்கூறியவாறு மொத்தம் 13.96லட்சம் பேர் வரியும், 9.13லட்சம் பேர் கட்டணமும் செலுத்திவருகிறார்கள்.

    அதன்படி, கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்துமதிப்பீட்டின் அடைப்படையில் 7சதவிகிதமும், கட்டணமாக ரூ.80ம் வசூலிக்கப்படுகிறது.

    இதுவே வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு கட்டணம் மாறுபடும் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கடந்த 2ஆண்டுகளாக கட்டண உயர்வு அறிவிக்கப்படாத நிலையில், இந்த 2023-24 நிதியாண்டில் வீடுகளுக்கு 5சதவிகிதமும், வணிகம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10சதவிகிதம் குடிநீர்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    லாரி குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.

    இந்த கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இனி ஒவ்வொரு வருடமும் கட்டண உயர்வு செய்யப்படும் என்றும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வரியோ கட்டணமோ செலுத்த தவறினால் வட்டி வசூலிப்பதிலும் மாறுதல் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    தமிழ்நாடு

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    சென்னை

    புயல் கரையைக் கடந்துவிட்ட பின்பும் ஆபத்து இருக்கா? தமிழ்நாடு
    சாலை விதிகள் மீறலா? இனி வாட்ஸ்அப்பில் புகைரளிக்கலாம் தமிழ்நாடு
    ஒரு புயலில் இருந்து தமிழகம் மீள்வதற்குள் இன்னொரு புயலா?! வானிலை அறிக்கை
    சென்னையில் இன்று கடும் பனி மூட்டம், வாகன ஓட்டிகள் அவதி தமிழ்நாடு

    தமிழ்நாடு

    ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு! இந்தியா
    தமிழ்நாடு-தமிழகம் சர்ச்சை: என்ன நடக்கிறது ட்விட்டரில்? திமுக
    தஞ்சை திருவையாறில் ஸ்ரீ தியாகராஜர் சுவாமிகளின் 176வது ஆராதனை விழா - வரும் 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு தஞ்சை பெரிய கோவில்
    2 பேருக்கு மறுவாழ்வு அளித்த 18 மாத குழந்தை! இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025