NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்
    இந்தியா

    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்

    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்
    எழுதியவர் Nivetha P
    Jan 19, 2023, 05:39 pm 1 நிமிட வாசிப்பு
    சென்னையில் குடிநீர் கட்டணம் உயர்வு - வீடுகளுக்கு 5 சதவிகிம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10 சதவிகிம்
    சென்னையில் குடிநீர் கட்டணம் உயருகிறது

    சென்னையில் மொத்தம் 9.91 லட்சம் குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் உள்ளது. சென்னை குடிநீர் வாரியம் மூலம் 15 மண்டலங்களில் குழாய் மற்றும் லாரி வழியே தினமும் 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. ஏரிகளில் இருந்தும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலமும் சென்னைவாசிகளுக்கு குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், இந்த குடிநீர் மற்றும் கழிவுநீர் இணைப்புகள் மூலம் சென்னை குடிநீர் வாரியத்திற்கு வருடாவருடம் ரூ. 885 கோடி வருவாய் வருவதாக கூறப்படுகிறது. அதன்படி குடிநீர் கழிவுநீர் வரிகள் மற்றும் கட்டணங்கள் மூலம் ரூ.505 கோடியும், மற்ற உள்ளாட்சிகள், தொழில்சாலைகள், லாரி குடிநீர் வழியாக ரூ.380 கோடியும் வருகிறதாம்.

    கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் நடைமுறைக்கு வரும்

    மேற்கூறியவாறு மொத்தம் 13.96லட்சம் பேர் வரியும், 9.13லட்சம் பேர் கட்டணமும் செலுத்திவருகிறார்கள். அதன்படி, கழிவுநீர் வரியாக ஆண்டு சொத்துமதிப்பீட்டின் அடைப்படையில் 7சதவிகிதமும், கட்டணமாக ரூ.80ம் வசூலிக்கப்படுகிறது. இதுவே வணிகம் சார்ந்த கட்டடங்களுக்கு கட்டணம் மாறுபடும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பாதிப்பால் கடந்த 2ஆண்டுகளாக கட்டண உயர்வு அறிவிக்கப்படாத நிலையில், இந்த 2023-24 நிதியாண்டில் வீடுகளுக்கு 5சதவிகிதமும், வணிகம் மற்றும் தொழில்சாலைகளுக்கு 10சதவிகிதம் குடிநீர்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. லாரி குடிநீர் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி ஒவ்வொரு வருடமும் கட்டண உயர்வு செய்யப்படும் என்றும், குறிப்பிட்ட காலகட்டத்தில் வரியோ கட்டணமோ செலுத்த தவறினால் வட்டி வசூலிப்பதிலும் மாறுதல் கொண்டுவரப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    ஆயிரக்கணக்கான தலித் பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்கிய 'சிறுதானிய மனிதர்' இந்தியா
    ராமநாதபுரத்தில் உயிரை பணையம் வைத்து கடற்பாசிகளை சேகரிக்கும் மீனவ பெண்கள் ராமநாதபுரம்
    மகளிர் ஐபிஎல் 2023 இறுதிப்போட்டி : முதல் பட்டத்தை வெல்லப்போவது யார்? மகளிர் ஐபிஎல்
    மேற்கு வங்கத்தில் இருக்கும் ஒரு 'பேய்' ரயில்வே ஸ்டேஷன் 42 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கிறது! வைரல் செய்தி

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    சென்னை

    சென்னை கலாஷேத்ரா மாணவிகளின் பாலியல் தொல்லை விவகாரம் - விசாரணை நடத்த டிஜிபி உத்தரவு தமிழக காவல்துறை
    தமிழக சுற்றுலா வளர்ச்சி கழக பொருட்காட்சி-சென்னை மெட்ரோ ரயில் அரங்கு 3ம் இடம் பிடித்துள்ளது சுற்றுலாத்துறை
    சென்னையில் ஜி20 நிதித்துறை சார்ந்த கருத்தியல் மாநாடு இந்தியா
    சென்னையில் புதைவட மின்கம்பிகளை விரைந்து முடிப்பது குறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023