LOADING...
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது
உளவு பார்த்த DRDO கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த டிஆர்டிஓ கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது

எழுதியவர் Venkatalakshmi V
Aug 13, 2025
09:32 am

செய்தி முன்னோட்டம்

இந்திய பாதுகாப்பு துறைக்கு பெரும் அச்சுறுத்தலாகும் வகையில், பாகிஸ்தானின் ISIக்கு ரகசிய தகவல்களை வழங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட DRDO கெஸ்ட் ஹவுஸ் மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜெய்சால்மரில் செயல்படும் சந்தன் பீல்ட் துப்பாக்கிச்சூடு பயிற்சி மையம் அருகே உள்ள டிஆர்டிஓவின் விருந்தினர் மாளிகையில் மேலாளராகப் பணியாற்றிய மகேந்திர பிரசாத், உத்தரகண்டின் பால்யூன் பகுதியில் பிறந்தவர். தற்காலிக ஒப்பந்தத்திற்காக பணியாற்றிய அவர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாகக் கூறப்படுகிறது. உளவுத்துறையினர் மேற்கொண்ட ரகசிய கண்காணிப்பில், மகேந்திர பிரசாத் சமூக ஊடகங்களை பயன்படுத்தி டிஆர்டிஓ விஞ்ஞானர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு அனுப்பியதை உறுதி செய்துள்ளனர். குறிப்பாக, ஏவுகணை மற்றும் ஆயுத சோதனை தொடர்பான தகவல்களும், அதிகாரிகளின் இயங்கும் தளங்களும் பகிரப்பட்டுள்ளன.

கைது

கைப்பற்றப்பட்ட டிஜிட்டல் ஆதாரங்கள் 

இதையடுத்து, ராஜஸ்தான் மாநில உளவுத்துறையினர் அவரை கைது செய்து, ஜெய்பூரில் உள்ள மத்திய புலனாய்வு விசாரணை மையத்தில் விசாரித்தனர். அவரது கைபேசி உட்பட டிஜிட்டல் சாதனங்களில் மேற்பார்வை நடத்தி முக்கிய ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெய்ப்பூர் சிஐடி இன்ஸ்பெக்டர் விஷ்ணுகாந்த் தெரிவித்ததாவது: "விசாரணையின் போது, பாகிஸ்தான் உளவுத்துறைக்கு மகேந்திர பிரசாத் தகவல் வழங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்துள்ளோம். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மேலதிக விசாரணை நடத்தப்படும்," என்றார். இந்த சம்பவம் பாதுகாப்பு அமைப்புகளில் உளவு உலைச்சல் குறித்து மீண்டும் கவனம் செலுத்தியிருக்கிறது.