
கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க!
செய்தி முன்னோட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள கொடைக்கானல், 'மலைகளின் இளவரசி' என அழைக்கப்படுவது போல், இங்கு இயற்கை எழில் கொஞ்சும் இடங்களை காணக்கூடியது.
இந்நிலையில், சுற்றுலாப் பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் பாராசூட் சாகச நிகழ்ச்சி மே 16 முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிகழ்ச்சி, மாநில சுற்றுலாத் துறை மற்றும் ஒரு தனியார் நிறுவனத்தின் ஒத்துழைப்பில் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாராசூட் சாகசத்தை சுற்றுலாப் பயணிகள் அனுபவிக்கலாம்.
ஒரு பயணத்திற்கு ரூ.200 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில், 15 முதல் 60 வயது வரை உள்ள இருபாலரும் பங்கேற்கலாம்.
சுற்றுலாத்துறை
தமிழ்நாடு சுற்றுலாத்துறையின் முன்னெடுப்பு
இந்த சாகச பயணத்தின் மூலம் பயணிகள் வானில் பறந்தபடியே கொடைக்கானலின் இயற்கை அழகை ரசிக்க முடியும்.
தற்போது, தமிழ்நாடு சுற்றுலாத் துறை அதிகாரிகள் பாராசூட்டில் பறந்து நேரடி ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை எவ்வளவு தூரம் பறக்கச் செய்யலாம், காற்றின் திசை, பாதுகாப்பு மற்றும் அனுபவ தரம் ஆகியவை குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.
மேலும், இதே நேரத்தில் தோட்டக்கலைத் துறையுடன் இணைந்து 62-வது மலர் கண்காட்சியும் மற்றும் கோடை விழாவும் விரைவில் நடைபெறவுள்ளதால், கொடைக்கானல் சுற்றுலா பயணிகளால் மேலும் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக சென்னை, பொள்ளாச்சி என நடத்தப்பட்ட பாராச்சூட் சாகச நிகழ்வு தற்போது கோடைவிடுமுறையை கோடையில் கழிக்க வரும் சுற்றுலாவாசிகளுக்காக திட்டமிடப்பட்டிருப்பது வரவேற்பை பெற்றுள்ளது.