NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
    மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

    மணிப்பூர் சட்டம் ஒழுங்கில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு

    எழுதியவர் Sekar Chinnappan
    Jul 10, 2023
    04:51 pm

    செய்தி முன்னோட்டம்

    உச்ச நீதிமன்றம் சட்டம் ஒழுங்கை இயக்க முடியாது என்றும், அதைச் செய்வது தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் வேலை என்று இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், திங்கட்கிழமை (ஜூலை10), மணிப்பூர் நிலைமை குறித்த ஒரு சில மனுக்களை விசாரித்த போது கூறினார்.

    தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்ஹா அடங்கிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ் வாதத்தை முன்வைத்து பேசியபோது இந்த பதிலை அளித்தனர்.

    குக்கி சமூகத்திற்கு ஆதரவாக மனுவை தாக்கல் செய்துள்ள மூத்த வழக்கறிஞர் கொலின் கோன்சால்வ்ஸ், மணிப்பூரில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர, உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டைக் கோரி வருகிறார்.

    முன்னதாக, மே மாத முதல் மணிப்பூரில் இனக்கலவரத்தில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    supreme court advises petitioner

    மனுதாரர்களுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை

    மணிப்பூரில் நிலவும் அமைதியின்மைக்கு அரசு ஆதரவு வன்முறையே காரணம் என்ற கோன்சால்வ்ஸின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், "மாநிலத்தில் வன்முறையை மேலும் அதிகரிக்க இந்த இடம் பயன்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை" என்றார்.

    மணிப்பூரில் நிலவும் மனிதாபிமான நெருக்கடி குறித்து தாங்கள் விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ள நீதிபதிகள், மனுதாரர்களை ஆக்கபூர்வமான பரிந்துரைகளுடன் திரும்பும்படி கேட்டுக் கொண்டார்.

    இதையடுத்து வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை (ஜூலை 11) மீண்டும் நடக்க உள்ளது.

    முன்னதாக, மாநிலத்தின் தற்போதைய நிலைமை குறித்து தலைமைச் செயலாளர் தாக்கல் செய்த நிலை அறிக்கையை நீதிமன்றம் பதிவு செய்து, அத்தியாவசியப் பொருட்களுக்கு முக்கியமான 10 கிமீ நெடுஞ்சாலையை, தடங்கல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மணிப்பூர்
    உச்ச நீதிமன்றம்
    கலவரம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மணிப்பூர்

    மணிப்பூர் வன்முறை: நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர அமித்ஷா நடவடிக்கை  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் இழப்பீடு இந்தியா
    மணிப்பூர் வன்முறையை விசாரிக்க குழு அமைக்கப்படும்: அமித்ஷா  இந்தியா
    மணிப்பூர் வன்முறை: 140 ஆயுதங்கள் மாநில நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது  மத்திய அரசு

    உச்ச நீதிமன்றம்

    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    திருமண சமத்துவம்: இந்த இக்கட்டான நிலையை உச்சநீதிமன்றத்தால் தீர்க்க முடியுமா? இந்தியா
    விவாகரத்து செய்வதற்கு இனி 6 மாத கட்டாயக் காத்திருப்பு கிடையாது: உச்ச நீதிமன்றம்  இந்தியா
    தமிழ்நாட்டில் மதமாற்றம் செய்யப்படுகிறதா: உச்ச நீதிமன்றத்திற்கு பதிலளித்த தமிழக அரசு இந்தியா

    கலவரம்

    2002 குஜராத் கலவரம்: 17 முஸ்லிம்களைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட 22 பேர் விடுதலை குஜராத்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    மணிப்பூர் வன்முறை: இதுவரை 62 பேர் பலி, 230 பேர் காயம்  இந்தியா
    கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் - சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல்  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025