NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்
    சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்

    பெண் பயிற்சி மருத்துவர் பலாத்கார விவகாரம்; சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கிய மேற்குவங்க மருத்துவர்கள்

    எழுதியவர் Sekar Chinnappan
    Oct 06, 2024
    09:46 am

    செய்தி முன்னோட்டம்

    தங்கள் கோரிக்கைகளுக்கு மேற்குவங்க அரசு செவிசாய்க்காத காரணத்தால், கொல்கத்தாவில் உள்ள ஜூனியர் டாக்டர்கள் சனிக்கிழமை (அக்டோபர் 5) மாலை சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.

    முன்னதாக, ஆகஸ்ட் 9 அன்று கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதற்கு நீதி கோரி ஜூனியர் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    நீண்ட நாட்களாக போராட்டம் நடந்துவரும் நிலையில், வெள்ளியன்று, கொல்கத்தாவின் தர்மதாலாவில் உள்ள டோரினா கிராசிங்கில் உள்ள மருத்துவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கினர்.

    மேலும், தங்கள் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க மேற்குவங்க அரசுக்கு 24மணிநேர கெடு வைத்தனர்.

    உண்ணாவிரதம்

    மாநில அரசுக்கு எதிராக தீவிரமடையும் போராட்டம்

    ஜூனியர் மருத்துவர்களின் கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், "மேற்குவங்க மாநில அரசு காலக்கெடுவைத் தவறிவிட்டது. எனவே நாங்கள் சாகும்வரை உண்ணாவிரதத்தைத் தொடங்குகிறோம்." என போராட்டம் நடத்தும் மருத்துவர்கள் அறிவித்துள்ளனர்.

    அவர்கள் மேலும், "இந்த உண்ணாவிரத போராட்டம் எங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடரும். போராட்டத்தின் வெளிப்படைத்தன்மையைக் காக்க, எங்கள் சகாக்கள் உண்ணாவிரதம் இருக்கும் மேடையில் சிசிடிவி கேமராக்களை நிறுவியுள்ளோம்." என்று தெரிவித்தனர்.

    தங்களில் ஆறு பேர் மேடையில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கியுள்ள நிலையில், மற்றவர்கள் பணிக்கு திரும்புவதாகவும், ஆனால், அவர்களும் எதையும் உண்ணமாட்டார்கள் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

    மேலும், தங்களுக்கு ஏதும் நேர்ந்தால், அதற்கு திரிணாமுல் காங்கிரஸ் அரசே பொறுப்பு என அவர்கள் கூறியுள்ளதால், மாநிலத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மேற்கு வங்காளம்
    கொல்கத்தா
    போராட்டம்
    இந்தியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மேற்கு வங்காளம்

    பிரியாணி ஆசை காட்டி தற்கொலை செய்து கொள்ள முயற்சித்தவரை காப்பாற்றிய போலீசார் கொல்கத்தா
    இந்தியா கூட்டணியில் பிளவு: தனித்து போட்டியிட முடிவெடுத்த மம்தா பானர்ஜி மம்தா பானர்ஜி
    இந்தியா முழுவதும் 7 நாட்களுக்குள் CAA நடைமுறைக்கு வரும்: மத்திய அமைச்சர் உத்தரவாதம் குடியுரிமை (திருத்த) சட்டம்
    ஷேக் ஷாஜகானை கைது செய்யுங்கள்: சந்தேஷ்காலி வழக்கில் மேற்கு வங்காளத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம் சந்தேஷ்காலி

    கொல்கத்தா

    இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள போன் திருட்டு சவுரவ் கங்குலி
     ராஜினாமா செய்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் பாஜகவில் சேர போவதாக அறிவிப்பு  பாஜக
    இந்தியாவின் முதல் நீருக்கடியில் உள்ள மெட்ரோவை திறந்து வைத்தார் பிரதமர் மோடி  இந்தியா
    சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு மேற்கு வங்காளம்

    போராட்டம்

    ஜனவரி 12ம்.,தேதி நாடாளுமன்ற முற்றுகை போராட்டம் - இந்தியா கூட்டணியின் மாணவர் அமைப்பு அறிவிப்பு  எதிர்க்கட்சிகள்
    'குஷ்பூ மன்னிப்பு கேட்காவிட்டால் போராட்டம்' - எச்சரிக்கை விடுத்த தமிழக காங்கிரஸ்  மகளிர் ஆணையம்
    மும்பை-பெங்களூர் நெடுஞ்சாலையில் கரும்பு விவசாயிகள் சாலை மறியல்  மகாராஷ்டிரா
    'அரசியல் போராட்டம் தொடரும்' - துவாரகா பிரபாகரன் உரை  தொழில்நுட்பம்

    இந்தியா

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 37 தமிழக மீனவர்களை மீட்க ஜெய்சங்கருக்கு ராகுல் காந்தி கடிதம் ராகுல் காந்தி
    வெளிநாடுகளுக்கு அரிசி ஏற்றுமதிக்கான தடை நீக்கம்; மத்திய அரசு உத்தரவு  மத்திய அரசு
    தேசத்தந்தை காந்தி: வழக்கறிஞராக அவரை பற்றி நீங்கள் அறியாத சில விஷயங்கள் தென்னாப்பிரிக்கா
    கனடாவில் சீக்கிய மகாராஜா ரஞ்சித் சிங்கின் சிலையை சேதப்படுத்திய பாலஸ்தீன ஆதரவாளர்கள் கனடா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025