NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்!
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்!
    கனிமொழியின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்!

    எழுதியவர் Venkatalakshmi V
    Jun 03, 2025
    10:40 am

    செய்தி முன்னோட்டம்

    ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையைத் தொடர்ந்து இந்தியாவின் ராஜதந்திர திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து கட்சி குழுக்கள் பல நாடுகள் உலக நாடுகளுக்கு பயணப்பட்டுள்ளது.

    அதில் ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளுக்கு அனைத்துக் கட்சிக் குழுவை வழிநடத்திச் சென்றுள்ளார் திமுக எம்பி கனிமொழி.

    இந்தக் குழுவில் சமாஜ்வாதி கட்சி எம்பி ராஜீவ் குமார் ராய், பாஜகவின் பிரிஜேஷ் சவுதா, ஆம் ஆத்மியின் அசோக் மிட்டல், ஆர்ஜேடியின் பிரேம் சந்த் குப்தா மற்றும் முன்னாள் தூதர் மஞ்சீவ் சிங் பூரி ஆகியோர் உள்ளனர்

    அப்போது ஸ்பெயினில் அவரிடம், இந்தியாவின் தேசிய மொழி குறித்து கேட்கப்பட்டது.

    இந்தியாவின் தேசிய மொழி 'வேற்றுமையில் ஒற்றுமை' என்று பதிலளித்த கனிமொழியின் இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #WATCH | While addressing the Indian diaspora, #DMK MP #Kanimozhi said the national language of India is not one tongue, but unity in diversity.@KanimozhiDMK pic.twitter.com/mvRmICWPfZ

    — The Federal (@TheFederal_News) June 3, 2025

    பதில்

    தேசிய ஒற்றுமையை பறைசாற்றிய கனிமொழியின் பதில்

    "இந்தியாவின் தேசிய மொழி ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மை. இந்த பிரதிநிதிகள் குழு உலகிற்கு கொண்டு வரும் செய்தி இதுதான், அதுதான் இன்றைய மிக முக்கியமான விஷயம்," என்று மாட்ரிட்டில் உள்ள இந்திய புலம்பெயர்ந்தோர் உறுப்பினரின் கேள்விக்கு பதிலளித்த அவர் கூறினார்.

    மொழி தொடர்பாக, குறிப்பாக தேசிய கல்விக் கொள்கை (NEP) 2020 இல் உள்ள மும்மொழி கொள்கை தொடர்பாக, தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே சமீபத்தில் ஏற்பட்ட கடுமையான மோதலின் பின்னணியில், இந்தக் கேள்வியும் அவரது பதிலும் வருகின்றன.

    பயங்கரவாதம்

    "காஷ்மீர் பாதுகாப்பை  நாங்கள் உறுதி செய்வோம்"

    பயங்கரவாதம் குறித்த கேள்விக்கு, "நமது நாட்டில் நிறைய செய்ய வேண்டியுள்ளது, அதையே நாம் செய்ய விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, நாம் திசைதிருப்பப்படுகிறோம். பயங்கரவாதத்தை நாம் சமாளிக்க வேண்டும், போர் என்பது முற்றிலும் தேவையற்றது" என்று அவர் மேலும் வலியுறுத்தினார்.

    இந்தியா ஒரு பாதுகாப்பான இடம் என்றும், காஷ்மீர் பாதுகாப்பாக இருப்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் கனிமொழி மேலும் கூறினார்.

    "இந்தியர்களாகிய நாம், இந்தியா பாதுகாப்பானது என்ற செய்தியை தெளிவுபடுத்த வேண்டும். அவர்கள் என்ன வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் நம்மைத் தடம் புரளச் செய்ய முடியாது. காஷ்மீர் ஒரு பாதுகாப்பான இடமாக இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்," என்று அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கனிமொழி
    ஆபரேஷன் சிந்தூர்
    திமுக

    சமீபத்திய

    இந்தியாவின் தேசிய மொழி என்ன என்று ஸ்பெயினில் கேட்டவருக்கு MP கனிமொழி அளித்த நச் பதில்! கனிமொழி
    பென்ட்லியின் மிகவும் சக்திவாய்ந்த எஸ்யூவி வெளியாகியுள்ளது: விவரங்கள் இதோ எஸ்யூவி
    வக்ஃப் சொத்துக்களை பதிவு செய்வதற்கான மத்திய அரசின் வெப்சைட் இந்த வாரத்தில் தொடங்கப்படவுள்ளது வக்ஃப் வாரியம்
    தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை 3 டிகிரி அதிகரிக்க வாய்ப்பு தமிழ்நாடு

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்  கோவை

    ஆபரேஷன் சிந்தூர்

    ஆப் சிந்தூரில், கராச்சியைத் தாக்க இந்திய கடற்படை தயாராக இருந்தது: துணை அட்மிரல் இந்தியா
    விராட் கோலி ரெஃபரென்ஸ்; ஆபரேஷன் சிந்தூர் விளக்கத்தில் கிரிக்கெட்டை ஒப்பிட்டு பேசிய இந்திய DGMO கிரிக்கெட்
    'ஆபரேஷன் சிந்தூர்' தாக்குதலில் தனது போர் விமானங்களுக்கு சேதம் ஏற்பட்டதாக ஒப்புக்கொண்ட பாகிஸ்தான் போர்
    இது போருக்கான சகாப்தம் அல்ல.. ஆனால்.. பிரதமர் மோடி உரையின் முக்கிய அம்சங்கள் பிரதமர் மோடி

    திமுக

    "அரசின் அலட்சியத்தை காட்டுகிறது": கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய இறப்புகள் குறித்து TVK தலைவர் விஜய் கண்டனம் தமிழக வெற்றி கழகம்
    கள்ளக்குறிச்சி விவகாரம்: திடீர் உண்ணாவிரத போராட்டத்தில் குதித்த அதிமுக அதிமுக
    மறைந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங்கிற்கும், இயக்குனர் பா.ரஞ்சித்திற்கும் என்ன உறவு? தமிழ்நாடு
    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக முன்னிலை  தமிழகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025