NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / "கௌமுத்ரா மாநிலங்கள்" கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்
    அடுத்த செய்திக் கட்டுரை

    "கௌமுத்ரா மாநிலங்கள்" கருத்துக்கு வருத்தம் தெரிவித்த திமுக எம்பி செந்தில்குமார்

    எழுதியவர் Srinath r
    Dec 06, 2023
    04:18 pm

    செய்தி முன்னோட்டம்

    ஹிந்தி மொழி பேசும் இந்தியாவின் இதய மாநிலங்களை, "கௌமுத்ரா மாநிலங்கள்" என நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டதற்கு வருத்தம் தெரிவித்து, தன் கருத்தை திமுக எம்பி செந்தில்குமார் திரும்ப பெற்றுக்கொண்டார்.

    தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஜம்மு காஷ்மீர் இட ஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மசோதா மீது, திமுகவைச் சேர்ந்த தர்மபுரி எம்பி செந்தில்குமார் நேற்று உரையாற்றினார்.

    அப்போது, "பாஜக கௌமுத்ரா மாநிலங்கள் என அழைக்கப்படும் ஹிந்தி மொழி பேசும் மாநிலங்களில் மட்டும் வெல்ல முடியும். தென்னிந்தியாவில் வெல்ல முடியாது" என பேசியிருந்தார்.

    இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் வலுத்த நிலையில், நாடாளுமன்றத்திற்கு வெளியில், தான் பேசியது புண்படுத்தி இருந்தால் அடுத்தமுறை அந்த சொல்லை பயன்படுத்தவில்லை என கூறியிருந்தார்.

    2nd card

    தான் பேசியதை திரும்ப பெற்றுக் கொண்டார் எம்பி செந்தில்குமார்

    இந்நிலையில் இன்று, நாடாளுமன்ற மக்களவையில் பேசிய செந்தில்குமார், தன் வார்த்தையை அவை குறிப்பில் இருந்து நீக்க கேட்டுக்கொண்டார்.

    "நேற்று நான் கவனக்குறைவாக பேசியது, உறுப்பினர்கள் மற்றும் மக்களின் உணர்வுகளை புண்படுத்தியிருந்தால், அதை நான் திரும்பப் பெற விரும்புகிறேன்."

    "மேலும் அந்த வார்த்தைகளை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதற்காக நான் வருந்துகிறேன்" என தெரிவித்தார்.

    இதற்கு பதில் அளித்த மக்களவை சபாநாயகராக இருந்த கிரித் பிரேம்ஜிபாய் சோலங்கி, இந்த வார்த்தைகள் ஏற்கனவே அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாகவும், இது முடிந்து போன விஷயம் என்றும், அதற்கு நீங்கள் வருந்த வேண்டும் எனவும், செந்தில்குமார் இடம் தெரிவித்தார்.

    எம்பி செந்தில்குமார் கடந்த ஆண்டும் இதே போல், "கௌமுத்ரா மாநிலங்கள்" என்ற சொல்லை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    திமுக
    பாஜக
    காங்கிரஸ்
    நாடாளுமன்றம்

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    திமுக

    உதயநிதி ஸ்டாலினின் தலைக்கு 10 கோடி ரூபாய் பரிசு அறிவித்த மத போதகர்: என்ன நடக்கிறது? உதயநிதி ஸ்டாலின்
    செந்தில் பாலாஜியை பதவி நீக்க அறிவுறுத்தும் உயர் நீதிமன்றம் தமிழக அரசு
    'சனாதன தர்ம' கருத்து: உதயநிதி ஸ்டாலின், பிரியங்க் கார்கேவிற்கு எதிராக FIR பதிவு  காங்கிரஸ்
    'உதயநிதி ஸ்டாலின் சனாதனம் குறித்து பேசியதற்கு தகுந்த பதில் அளிக்க வேண்டும்': பிரதமர் மோடி  உதயநிதி ஸ்டாலின்

    பாஜக

    பாஜக தலைவர்களுடன் ஒன்றாக கிரிக்கெட் போட்டியை கண்டுகளித்த காங்கிரஸ் முதல்வர் ஒருநாள் உலகக்கோப்பை
    பாஜகவில் இருந்து திடீரென நடிகை கெளதமி விலகியதற்கான காரணம் என்ன?  கெளதமி
    மக்களவையில் கேள்வி கேட்க லஞ்சம்; திரிணாமுல் காங்கிரஸ் எம்பிக்கு நெறிமுறைக்குழு சம்மன் திரிணாமுல் காங்கிரஸ்
    மஹுவா மொய்த்ரா குறித்த விவரங்களைக் கேட்டு, மத்திய அமைச்சகங்களுக்கு நெறிமுறைக் குழு கடிதம் திரிணாமுல் காங்கிரஸ்

    காங்கிரஸ்

    ஐந்தாண்டுகளுக்கு பின் தமிழகம் வந்த சோனியா காந்தி- முக்கியமான அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்ப்பு முதல் அமைச்சர்
    இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ்.கில் காலமானார்  டெல்லி
    தேர்தல் நடக்க இருக்கும் மிசோரத்தில் ராகுல் காந்தி பாதயாத்திரை மிசோரம்
    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் இந்தியா

    நாடாளுமன்றம்

    ஒரே நாடு ஒரே தேர்தல்: ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஆய்வுக்குழுவை அமைத்தது மத்திய அரசு மத்திய அரசு
    நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    செப்டம்பர் 18ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தொடர் மக்களவை
    நாடாளுமன்ற ஊழியர்களுக்கு இந்திய பாணியில் விதவிதமான சீருடை அறிமுகம்  புதிய நாடாளுமன்றம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025