NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்
    ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்
    1/2
    இந்தியா 0 நிமிட வாசிப்பு

    ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    01:07 pm
    ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்
    ஆ.ராசா வருமானத்தை விட 579% அதிகமாக சொத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது

    திமுக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் வழக்கு விசாரணையை பிப் 22ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆ.ராசாவின் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கைப் பதிவு செய்த சிபிஐ, ஆ.ராசாவுக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது. 7 வருடம் நடந்த இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் இதற்கான முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது. இந்த குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா வருமானத்தை விட 579% அதிகமாக சொத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது

    2/2

    ஆ.ராசாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம்

    579% என்பது கிட்டத்தட்ட 5 கோடியே 53 லட்ச ரூபாய் ஆகும். இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த முறை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது. மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நேற்று(பிப் 8) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. இதற்கு ஆ.ராசாவை தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர். நாடாளுமன்ற கூட்ட தொடர் நடந்து கொண்டிருப்பதால் ஆஜராவதில் இருந்து ஆ.ராசாவுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ஆ.ராசா தரப்பில் கோரப்பட்டிருந்தது. இதை ஏற்று கொண்ட நீதிமன்றம் பிப் 22ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    தமிழ்நாடு
    திமுக

    தமிழ்நாடு

    தமிழ்நாடு-மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வரும் 18ம் தேதி வருகை தருகிறார் இந்திய ஜனாதிபதி மதுரை
    தமிழக அரசு - ஆவினில் இனி காலி பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நிரப்பப்படும் இந்தியா
    தமிழகத்தில் சங்கராபுரம் கோயில் கோமாதாவிற்கு வளைகாப்பு நடத்திய கிராம மக்கள் மாவட்ட செய்திகள்
    வேங்கைவயல் வழக்கில் முன்னேற்றம் இருக்கிறது: சிபிசிஐடி தகவல் வேங்கை வயல்

    திமுக

    பட்டியலின இளைஞரை தகாத வார்த்தைகளில் பேசிய திமுக பஞ்சாயத்து தலைவர் கைது மாவட்ட செய்திகள்
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    தமிழ்நாட்டின் பெயரை மாற்ற பரிந்துரைக்கவில்லை: ஆளுநர் விளக்கம் இந்தியா
    திமுக-பாஜக சண்டைக்குள் சிக்கி கொண்ட தல-தளபதி தமிழ்நாடு
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023