NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்
    ஆ.ராசா வருமானத்தை விட 579% அதிகமாக சொத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது

    ஆ.ராசாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கைத் தள்ளி வைத்த சிறப்பு நீதிமன்றம்

    எழுதியவர் Sindhuja SM
    Feb 09, 2023
    01:07 pm

    செய்தி முன்னோட்டம்

    திமுக தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் வழக்கு விசாரணையை பிப் 22ஆம் தேதிக்கு சிறப்பு நீதிமன்றம் ஒத்தி வைத்திருக்கிறது.

    கடந்த 2015ஆம் ஆண்டு ஆ.ராசாவின் மீது சொத்து குவிப்பு வழக்கு போடப்பட்டது.

    இந்த வழக்கைப் பதிவு செய்த சிபிஐ, ஆ.ராசாவுக்கு சொந்தமான சென்னை, கோவை, திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தியது.

    7 வருடம் நடந்த இந்த விசாரணைகளின் அடிப்படையில் கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் இதற்கான முதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது.

    இந்த குற்றப்பத்திரிகையில் ஆ.ராசா வருமானத்தை விட 579% அதிகமாக சொத்து வைத்திருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது

    சென்னை

    ஆ.ராசாவின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சிறப்பு நீதிமன்றம்

    579% என்பது கிட்டத்தட்ட 5 கோடியே 53 லட்ச ரூபாய் ஆகும்.

    இந்த வழக்கு சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் இருக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

    கடந்த முறை, சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் போது ஆ.ராசா உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்டுள்ள 5 பேருக்கும் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.

    மீண்டும் இந்த வழக்கின் விசாரணை நேற்று(பிப் 8) சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

    இதற்கு ஆ.ராசாவை தவிர மற்றவர்கள் நேரில் ஆஜராகி இருந்தனர். நாடாளுமன்ற கூட்ட தொடர் நடந்து கொண்டிருப்பதால் ஆஜராவதில் இருந்து ஆ.ராசாவுக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று ஆ.ராசா தரப்பில் கோரப்பட்டிருந்தது.

    இதை ஏற்று கொண்ட நீதிமன்றம் பிப் 22ஆம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்திருக்கிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    திமுக

    சமீபத்திய

    ஐபிஎல்லில் தனது 5வது சதத்தை கே.எல். ராகுல் அடித்தார்: முக்கிய புள்ளிவிவரங்கள் கே.எல்.ராகுல்
    ஹைதராபாத்தில் குண்டுவெடிப்பு சதியா? ஐ.எஸ்.ஐ.எஸ். தொடர்புடைய 2 சந்தேக நபர்கள் கைது  ஹைதராபாத்
    சென்னையில் அதிகாலை முதல் மிதமழை; தமிழகத்தில் இன்று கனமழை எச்சரிக்கை எங்கே? தமிழகம்
    தீவிரமான புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஜோ பைடன்

    தமிழ்நாடு

    கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விழுந்து விபத்து - 4 பேர் பலி இந்தியா
    வெளிமாநிலங்களில் பதுங்கிய ரவுடிகளை கைது செய்ய உத்தரவு - காவல்துறை டி.ஜி.பி. அதிரடி காவல்துறை
    சென்னிமலை முருகன் கோயில் தைப்பூச தேரோட்ட திருவிழா 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம் திருவிழா
    பழனி முருகர் கோயில் கும்பாபிஷேகம் - திண்டுக்கல் முழுவதும் 27ம் தேதி உள்ளூர் விடுமுறை இந்தியா

    திமுக

    இல்லம் தேடி கல்வி போன்ற திட்டங்கள் நடத்தி பலன் இல்லையா? தமிழ்நாடு
    2023ம் ஆண்டு பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து வெளியாகிய பிரத்யேகமான தகவல்கள் தமிழ்நாடு
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! தமிழ்நாடு
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025