NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சுற்றுசூழலை பாதுகாக்க இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் தவிர்க்க வேண்டுமென ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சுற்றுசூழலை பாதுகாக்க இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் தவிர்க்க வேண்டுமென ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்
    சபரிமலை ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது

    சுற்றுசூழலை பாதுகாக்க இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் தவிர்க்க வேண்டுமென ஐயப்ப பக்தர்களுக்கு வேண்டுகோள்

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 07, 2024
    10:06 am

    செய்தி முன்னோட்டம்

    திருவிதாங்கூர் தேவசம் போர்டு, சபரிமலை வரும் பக்தர்களிடத்தில், இருமுடி கட்டில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளது.

    சபரிமலை பக்தர்கள் இருமுடி கட்டில் எடுத்து வரும் நெய் தேங்காய், தேங்காய், அரிசி, பன்னீர், சாம்பிராணி, கற்பூரம், மஞ்சள் போன்ற பொருட்களை அய்யப்பனுக்கு அர்ப்பணிக்கும்போது, நெய் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்துகின்றனர்.

    18 படிகள் ஏறும் போது, தேங்காய்கள் உடைக்கப்படுகின்றன. அதேபோல அரிசி, பாயசம் வழிபாட்டு கவுண்டர்களில் நன்கொடையாக வழங்க முடியும்.

    ஆனால், சாம்பிராணி, பன்னீர், கற்பூரம், மஞ்சள் போன்ற பொருட்கள் பூஜைக்கு பயன்படுத்தப்படுவதில்லை.

    வேண்டுகோள்

    பூஜை பொருட்கள் குறித்து ஏற்கனவே வேண்டுகோள் விடுத்த மேல் சாந்தி

    இதனை தொடர்ந்து தந்திரி மற்றும் மேல் சாந்தி போன்றோர் பக்தர்களுக்கு இவற்றை கோவிலுக்கு கொண்டு வராமல் இருக்க வேண்டுமென தெரிவித்து வருகின்றனர்.

    இருப்பினும், பல பக்தர்கள் இவை கொண்டு வந்து, மாளிகைப்புறம் அருகே விட்டு செல்கின்றனர்.

    பின்னர், கனரக இயந்திரங்களால் இவை எடுத்துச் சென்று காட்டுப் பகுதியில் எரிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுசூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவும் பொதுமக்களும், தேவசோம் போர்டும் வருத்தம் தெரிவித்தது.

    இதன் தொடர்ச்சியாக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு, வரும் சீசனில் சபரிமலை செல்லும் பக்தர்களிடத்தில் கற்பூரம், சாம்பிராணி, பன்னீர் போன்ற பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அறிவித்துள்ளது.

    சபரிமலைக்கு பக்தர்களுக்காக ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

    ட்விட்டர் அஞ்சல்

    Twitter Post

    #sabarimala #sabarimalai #Ayyappan சபரிமலைக்கு வரும் பக்தர்கள் இருமுடிக் கட்டில் பத்தி, பன்னீர், கற்பூரம் கொண்டு வரவேண்டாம்: தந்திரி கண்டரர் ராஜீவரர் வேண்டுகோள் - https://t.co/DhwtaYk5s6 pic.twitter.com/8kiYCPFQKl

    — Dinakaran (@DinakaranNews) November 7, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சபரிமலை

    சமீபத்திய

    'மாமன்' பட வெற்றிக்காக ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்டதை அறிந்ததும் கோபப்பட்ட நடிகர் சூரி சூரி
    கிடுகிடுக்க வைக்கும் அமெரிக்கா-பாகிஸ்தான் நிறுவனங்களின் கிரிப்டோகரன்சி ஒப்பந்தம்; சர்ச்சையில் சிக்கிய டிரம்ப்-அசிம் முனீர் தொடர்பு அமெரிக்கா
    NDA கூட்டணியில் ஓ.பி.எஸ்., மற்றும் இ.பி.எஸ். இருவரும் தொடர்கிறார்கள்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நயினார் நாகேந்திரன்
    துருக்கி மற்றும் அஜர்பைஜானுடன் எந்த வணிக உறவும் கிடையாது; அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு முடிவு வர்த்தகம்

    சபரிமலை

    சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று முதல் துவக்கம்  கேரளா
    சபரிமலை: நிமிடத்திற்கு 80-85 பேர் சாமி தரிசனம்  கேரளா
    சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் - ஐயப்பனை தரிசிக்காமல் வீடு திரும்பும் பக்தர்கள் காவல்துறை
    சபரிமலை: 2 மணி நேரத்தில் முடிய வேண்டிய தரிசனம், 20 மணி நேரத்திற்கு மேல் ஆவது எதனால்? கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025