NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!
    அடுத்த செய்திக் கட்டுரை
    பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை  முன் வைத்த நீதிபதி!
    நீதிபதி நாகரத்னா

    பண மதிப்பிழப்பு: தனியாளாக தன் கருத்தை முன் வைத்த நீதிபதி!

    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2023
    11:08 am

    செய்தி முன்னோட்டம்

    பணமதிப்பிழப்புக்கு எதிரான 57 மனுக்களுக்கு இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இந்த தீர்ப்பை நீதிபதிகள் அப்துல்நசீர், பி.ஆர்.கவாய், போபண்ணா, ராமசுப்ரமணியம், பி.வி.நாகரத்னா ஆகியோர் சேர்ந்த அரசியல் சாசன அமர்வு வழங்கியது.

    இந்த 5 நீதிபதிகளும் தங்கள் தீர்ப்பை தனித்தனியாக வழங்கினர். கடைசியில், பெரும்பான்மையின் அடிப்படையில் இறுதி தீர்ப்பு முடிவு செய்யப்பட்டது.

    இந்த அமர்வில் இருந்த 4 நீதிபதிகள் ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கினர். அதாவது, பண மதிப்பிழப்பு செல்லும்' என்ற தீர்ப்பே அது.

    4 நீதிபதிகள் எழுதிய தீர்ப்பில், "ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் செயல்பாடுகளில் எந்த குறைபாடுகளும் தெரியவில்லை" என்று கூறப்பட்டிருந்தது.

    ஆனால், நீதிபதி நாகரத்னா மட்டும் இதில் ஒரு முரணான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

    02 Jan 2023

    நீதிபதி நாகரத்னாவின் கருத்து:

    ஒரே அரசாணையின் மூலம் 1000, 500 ரூபாய் நோட்டுகளை மதிப்பிழக்க செய்தது தவறு.

    இது போன்ற முக்கியமான முடிவுகளை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காமல் எடுக்கக்கூடாது.

    மொத்த முடிவும் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் எடுக்கப்படவில்லை.

    பண மதிப்பிழப்பு சட்ட விரோதம் இல்லை. ஆனால், அதை செயல் படுத்திய விதம் சட்டவிரோதமானது.

    98% ரூபாய் நோட்டுகள் திரும்ப பெறப்பட்டுள்ளது. அதனால், எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த பலனும் இல்லை.

    இதனால், ஏற்படும் பிரச்சனைகளை மத்திய வங்கிகள் கவனிக்க தவறிவிட்டன.

    ஆனால், இதெல்லாம் நடந்து முடிந்ததற்கு பின் இனி என்ன செய்ய முடியும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்
    காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்தால், தடைகள் விதிக்கப்படும் என்று மிரட்டும் இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா காசா
    'முழு பாகிஸ்தானையும் தாக்கும் இராணுவத் திறன்களை இந்தியா கொண்டுள்ளது': உயர் ராணுவ அதிகாரி இந்திய ராணுவம்
    IPL 2025: SRH ஹர்ஷல் படேல் 150 ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை ஐபிஎல் 2025

    இந்தியா

    கடன் மோசடி: வீடியோகான் CEO வேணுகோபால் கைது! இந்தியா
    முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் பெயரில் ஒரு நட்சத்திரம்! உலகம்
    நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து! மோடி
    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை உலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025