NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
    'பண மதிப்பிழப்பு செல்லும்' தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்

    பண மதிப்பிழப்பு செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Jan 03, 2023
    03:52 pm

    செய்தி முன்னோட்டம்

    நீண்ட நாள் எதிர்பார்க்கப்பட்ட பண மதிப்பிழப்பு வழக்கில் பண மதிப்பிழப்பு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    2016ஆம் ஆண்டு 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

    நாட்டில் கருப்பு பணத்தை மொத்தமாக ஒழிக்கவும், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்கிவிக்கவும் பயங்கரவாத இயக்கங்களுக்கு அளிக்கப்படும் நிதிகளை தடுக்கவும் இந்த பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

    ஆனால், இதனால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டதாக எதிர் கட்சிகள் கூறின.

    இதற்கு எதிராக 57 பேர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    02 Jan 2023

    இன்று வழங்கப்பட்ட தீர்ப்பு!

    இந்த வழக்குகளை நீதிபதி எஸ்.அப்துல் நசீர் தலைமையில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்தனர்.

    இந்த வழக்குகளின் வாதங்களை எல்லாம் விசாரித்த நீதிபதிகள் இன்று அதற்கான தீர்ப்பை வழங்கினர்.

    இந்த தீர்ப்பில் கூறி இருப்பதாவது:

    "பணமதிப்பிழப்பு என்பது பொருளாதார கொள்கை முடிவாகும்.

    அதனால், அந்த நடவடிக்கைகளை திரும்ப பெறுங்கள் என்று இப்போது உத்தரவிட முடியாது.

    ரிசர்வ் வங்கியுடன் சுமார் 6 மாதங்கள் கலந்து பேசி தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.

    எனவே, இந்த நடவடிக்கையில் மத்திய அரசிடம் எந்த ஒரு குறைபாடும் இருப்பதாக தெரியவில்லை.

    அதனால், இந்த 57 மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

    பண மதிப்பிழப்பு செல்லும்.", என்று உத்தரவிட்டுள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    இந்தியா

    நேபாளத்தின் புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து! மோடி
    விலங்குகளைவிட கேவலமாக நடத்தப்படுகிறோம் - ஆப்கான் பெண்கள் வேதனை உலகம்
    இன்று முதல் மதர் டைரி பாலின் விலை ரூ.2 உயர்த்த முடிவு; நடப்பாண்டில் இது 5வது விலையேற்றம் தமிழ்நாடு
    கொரோனா தடுப்பு: மருத்துவமனைகளுக்கு அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு! கொரோனா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025