NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி 
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி - க்ரைம் ஸ்டோரி

    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி 

    எழுதியவர் Nivetha P
    Sep 10, 2023
    02:20 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழ்நாடு-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த காரணத்தினால் தாய்-சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

    பட்டுக்கோட்டை சுண்ணாம்பு தெருவினை சேர்ந்தவர் செந்தில்(48),அவரது மனைவி வசந்தி(38).

    இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 6வது முறை வசந்தி கர்ப்பம் தரித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இந்நிலையில் இன்று(செப்.,10)அதிகாலை வசந்திக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது.

    தனது கணவரின் வருமானம் போதாமல் குடும்பம் வறுமையிலுள்ள நிலையில் இந்த குழந்தையையும் வளர்த்து ஆளாக்குவது மிககடினம் என்று கருதிய வசந்தி, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டதாக தெரிகிறது.

    அதன்படி வசந்திக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் வாளிக்குள் வைத்து மூடி வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    க்ரைம் 

    அதிக ரத்த போக்கு காரணமாக உயிரிழந்த தாய் 

    இதற்கிடையே வசந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாகிக்கொண்டே போன நிலையில் அவர் தனக்கு மயக்கம் வருவதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார்.

    அவர்கள் உடனே வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

    ஆனால் வசந்தி ஏற்கனவே அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து அவரது உடலை எந்த தகவலும் மருத்துவமனையில் அளிக்காமல் அவரது உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.

    இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இறந்த வசந்தி மற்றும் அவரது குழந்தையின் உடல்களை பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனராம்.

    வறுமை காரணமாக தாயே குழந்தையின் கழுத்தை கயிற்றால் அறுத்து கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், எது உண்மை என்பது பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்தப்பின்னரே உறுதியாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    குழந்தைகள்
    கர்ப்பம்
    கொலை
    காவல்துறை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    குழந்தைகள்

    உங்கள் குழந்தைகளின் லஞ்ச் பாக்சில் நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் உணவு குறிப்புகள்
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  ஊட்டச்சத்து
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  சிக்கிம்
    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை சென்னை

    கர்ப்பம்

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு

    கொலை

    டெல்லி இளம்பெணின் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்க கோரிக்கை  இந்தியா
    காதலியின் உடலை துண்டுதுண்டாக வெட்டி குக்கரில் அவித்த காதலன்: மும்பையின் கொடூர கொலை வழக்கு  இந்தியா
    மும்பை கொடூர கொலை: குற்றம்சாட்டப்பட்டவருக்கு HIV பாசிட்டிவ் இந்தியா
    தாயின் உடலுடன் காவல்துறையில் சரணடைந்த மகள்: பெங்களூரில் பரபரப்பு  இந்தியா

    காவல்துறை

    என்.எல்.சி.-கடலூரில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்காலிக நிறுத்தம்  காவல்துறை
    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகு கவிழ்ந்து விபத்து - 26 பேர் பலி  பிலிப்பைன்ஸ்
    என்.எல்.சி.க்கு எதிர்ப்பு தெரிவித்து முற்றுகை போராட்டம் - அன்புமணி ராமதாஸ் கைது  பாமக
    கிருஷ்ணகிரி பட்டாசு விபத்தில் பலி எண்ணிக்கை 7ஆக உயர்வு  தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025