NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி 
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி 
    இந்தியா

    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி 

    எழுதியவர் Nivetha P
    September 10, 2023 | 02:20 pm 1 நிமிட வாசிப்பு
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி 
    பட்டுக்கோட்டையில் வீட்டிலேயே பிரசவம் பார்த்ததால் தாய், சேய் இருவரும் பலி - க்ரைம் ஸ்டோரி

    தமிழ்நாடு-தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே வீட்டிலேயே பிரசவம் பார்த்த காரணத்தினால் தாய்-சேய் இருவரும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. பட்டுக்கோட்டை சுண்ணாம்பு தெருவினை சேர்ந்தவர் செந்தில்(48),அவரது மனைவி வசந்தி(38). இவர்களுக்கு ஏற்கனவே 3 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகள் உள்ள நிலையில் 6வது முறை வசந்தி கர்ப்பம் தரித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று(செப்.,10)அதிகாலை வசந்திக்கு பிரசவவலி ஏற்பட்டுள்ளது. தனது கணவரின் வருமானம் போதாமல் குடும்பம் வறுமையிலுள்ள நிலையில் இந்த குழந்தையையும் வளர்த்து ஆளாக்குவது மிககடினம் என்று கருதிய வசந்தி, மருத்துவமனைக்கு செல்லாமல் வீட்டிலேயே தனக்குத்தானே பிரசவம் பார்த்துக்கொண்டதாக தெரிகிறது. அதன்படி வசந்திக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்த நிலையில் வாளிக்குள் வைத்து மூடி வைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    அதிக ரத்த போக்கு காரணமாக உயிரிழந்த தாய் 

    இதற்கிடையே வசந்திக்கு ரத்தப்போக்கு அதிகமாகிக்கொண்டே போன நிலையில் அவர் தனக்கு மயக்கம் வருவதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளார். அவர்கள் உடனே வசந்தியை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் வசந்தி ஏற்கனவே அதிக ரத்தப்போக்கு காரணமாக உயிரிழந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவரது உடலை எந்த தகவலும் மருத்துவமனையில் அளிக்காமல் அவரது உறவினர்கள் வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறை சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இறந்த வசந்தி மற்றும் அவரது குழந்தையின் உடல்களை பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனராம். வறுமை காரணமாக தாயே குழந்தையின் கழுத்தை கயிற்றால் அறுத்து கொலை செய்ததாக கூறப்படும் நிலையில், எது உண்மை என்பது பிரேதப்பரிசோதனை அறிக்கை வந்தப்பின்னரே உறுதியாகும் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    குழந்தைகள்
    கர்ப்பம்
    கொலை
    காவல்துறை
    காவல்துறை

    குழந்தைகள்

    5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு தரக்கூடாத உணவுகள் குழந்தை பராமரிப்பு
    ஸ்டெம் செல்ஸ் மூலம் 11 மாத குழந்தைக்கு எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை சென்னை
    அரசு ஊழியர்களுக்கு 1 வருடத்திற்கு மகப்பேறு விடுமுறை - சிக்கிம் மாநில முதல்வர் அறிவிப்பு  சிக்கிம்
    பாலில் கலப்படம் உள்ளதா என்பதனை கண்டறிய சில வழிமுறைகள்  ஊட்டச்சத்து

    கர்ப்பம்

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு  செங்கல்பட்டு

    கொலை

    பல்லடம் கொலை சம்பவத்தில் உயிரிழந்தோர் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு கைது
    பல்லடம் கொலை சம்பவம்: CCTV -யில் சிக்கிய முக்கிய குற்றவாளி வெங்கடேஷ் காவல்துறை
    மத்திய அமைச்சர் வீட்டில், இளைஞர் சுட்டுக்கொலை காவல்துறை
    பெங்களூரு: 'லிவ் இன்' காதலியை குக்கரால் அடித்து கொன்ற நபர் கைது  பெங்களூர்

    காவல்துறை

    பாலியல் பலாத்கார வழக்கு - சீமான் நேரில் ஆஜராக காவல்துறை அழைப்பாணை  காவல்துறை
    ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது  ஆந்திரா
    7 முறை கருக்கலைப்பு புகார் எதிரொலி:  விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனை நாம் தமிழர்
    அயர்லாந்தில் இருந்து ரூ.9,000 கோடி பணம் வருவதாக கூறி தொழிலதிபர்களிடம் பணம் பறிப்பு - க்ரைம் ஸ்டோரி  க்ரைம் ஸ்டோரி

    காவல்துறை

    திருவண்ணாமலை கிரிவலப்பாதை - குற்றப்பின்னணியுள்ள சாமியார்களை கண்டறியும் பணி திருவண்ணாமலை
    பள்ளி பேருந்தில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாணவன் போக்சோவில் கைது டெல்லி
    ராஜஸ்தானில் பெண்ணை நிர்வாணப்படுத்தி இழுத்து சென்ற கணவர் கைது - அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தான்
    அருந்ததியர் இன மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கு - சீமானுக்கு சம்மன் நாம் தமிழர்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023