Page Loader
ராணுவத்தைப் பற்றி ட்வீட் செய்ததற்காக ஷெஹ்லா ரஷீத் மீது வழக்கு
ஷெஹ்லா ரஷீத் மீது ராணுவத்துக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக வழக்குத் தொடர அனுமதி

ராணுவத்தைப் பற்றி ட்வீட் செய்ததற்காக ஷெஹ்லா ரஷீத் மீது வழக்கு

எழுதியவர் Sindhuja SM
Jan 10, 2023
06:32 pm

செய்தி முன்னோட்டம்

JNU மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும், AISA உறுப்பினருமான ஷெஹ்லா ரஷீத் மீது வழக்குத் தொடர டெல்லி லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். ஷெஹ்லா ரஷீத் கடந்த 2019ஆம் ஆண்டு ராணுவத்திற்கு எதிராக ட்விட்டரில் பதிவிட்டார். ஆகஸ்ட் 18, 2019 அன்று ஷோராவின் ட்விட்டர் கணக்கில், காஷ்மீர் வீடுகளுக்குள் நுழைந்து இராணுவம் உள்ளூர் மக்களை "சித்திரவதை" செய்வதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது. "ஆயுதப் படைகள் இரவில் வீடுகளுக்குள் நுழைகின்றன, சிறுவர்களை அழைத்துச் செல்கின்றன, வீடுகளைச் சூறையாடுகின்றன, வேண்டுமென்றே ரேஷன்களை தரையில் கொட்டுகின்றன "என்று அவரது ஒரு ட்விட்டர் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய ராணுவம் "ஆதாரமற்றது" என நிராகரித்தது.

வழக்கு

ஷெஹ்லா ரஷீத் மீது வழக்கு

2019ஆம் ஆண்டு, அலாக் அலோக் ஸ்ரீவஸ்தவா என்பவர் இதற்காக அளித்த புகாரின் அடிப்படையில், ஐபிசி பிரிவு 153A இன் கீழ், ஷெஹ்லா ரஷீதிற்கு எதிராக FIR ஒன்று பதிவு செய்யப்பட்டது. தற்போது, இந்த வழக்கை தொடருவதற்கு டெல்லி லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனா ஒப்புதல் அளித்திருக்கிறார். "ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் துணைத் தலைவரும் அகில இந்திய மாணவர் சங்கத்தின் (ஏஐஎஸ்ஏ) உறுப்பினருமான ஷெஹ்லா ரஷீத் மீது ராணுவத்துக்கு எதிராக ட்வீட் செய்ததற்காக வழக்குப்பதிவு செய்ய டெல்லி லெப்டினன்ட் கவர்னர் விகே சக்சேனா அனுமதி அளித்துள்ளார்." என்று டெல்லி எல்-ஜி அலுவலகம் ஒரு அறிக்கையில் கூறி இருக்கிறது.