NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்?
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்?
    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த உத்தரவு.. ஏன்?

    எழுதியவர் Prasanna Venkatesh
    Jun 01, 2023
    05:28 pm

    செய்தி முன்னோட்டம்

    சன் குழுமத்தைச் சேர்ந்த கலாநிதி மாறனுக்கு கொடுக்க வேண்டிய ரூ.380 கோடியை அளிக்க வேண்டும் என ஸ்பைஸ்ஜெட் நிறுனத்துக்கு உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

    மேலும், அந்நிறுவனத்தின் சொத்துக்கள் குறித்த உறுதிச்சான்றை நான்கு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தவிட்டிருக்கிறது உயர்நீதிமன்றம்.

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டராக இருந்தவர் கலாநிதிமாறன்.

    தனக்கும் தன்னுடைய கல் ஏர்வேஸ் நிறுவனத்திற்கும் கொடுக்க வேண்டிய கன்வர்டிபிள் வாரண்ட்ஸ் மற்றும் முன்னுரிமைப் பங்குகளை கொடுக்கத் தவறி, தங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியதாக 2017-ம் ஆண்டு ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்திருந்தார் கலாநிதி மாறன்.

    நீதிமன்றத்தில் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ரூ.579.08 கோடியை அவருக்கு செலுத்தியது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம்.

    ஸ்பைஸ்ஜெட்

    மீண்டும் நீதிமன்றப் போராட்டம்: 

    ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் கலாநிதிமாறனுக்கு அளித்த 579.08 கோடி என்பது அவருக்கு அளிக்கை வேண்டிய தொகையின் அசல் மட்டுமே.

    ஆனால், அதற்கான வட்டியை அந்நிறுவனம் கொடுக்கவில்லை என மீண்டும் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது.

    அக்டோபர் 2020-ல் ரூ.242 கோடியாக இருந்த வட்டித் தொகை, கடந்த பிப்ரவரி 2023-ல் ரூ.362 கோடியாகவும், தற்போது ரூ.380 கோடியாகவும் உயர்ந்திருக்கிறது.

    இதனைத் தொடர்ந்து கலாநிதிமாறனுக்கு ரூ.380 கோடியை செலுத்த வேண்டும் என தற்போது உத்தரவிட்டிருக்கிறது டெல்லி உயர்நீதிமன்றம்.

    நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு முன்பே கலாநிதிமாறன் மற்றும் கல் ஏர்வேஸ் நிறுவனத்துடன் சுமூகமான தீர்வை தாங்கள் எட்டியதாக ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சன் டிவி
    டெல்லி

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சன் டிவி

    பொங்கல் விடுமுறையொட்டி சின்னத்திரைக்கு படையெடுக்கும் பொன்னியின் செல்வன் தமிழ் திரைப்படம்

    டெல்லி

    லண்டன் தூதரக தாக்குதல் வழக்கு NIAவுக்கு மாற்றம்  இந்தியா
    இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் இன்று திறந்தது ஆப்பிள்!  ஆப்பிள்
    ஆராத்யா பச்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம் பாலிவுட்
    டெல்லி நீதிமன்றத்தில் துப்பாக்கி சூடு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025