NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன் ஜாமீனை நீடித்த டெல்லி உயர்நீதிமன்றம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன் ஜாமீனை நீடித்த டெல்லி உயர்நீதிமன்றம் 
    முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கர்

    முன்னாள் பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா கேத்கரின் முன் ஜாமீனை நீடித்த டெல்லி உயர்நீதிமன்றம் 

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 29, 2024
    01:59 pm

    செய்தி முன்னோட்டம்

    முன்னாள் தகுதிகாண் IAS அதிகாரி பூஜா கேத்கருக்கு கைதுக்கு எதிரான முன் ஜாமீனை செப்டம்பர் 5 வரை டெல்லி உயர்நீதிமன்றம் நீட்டித்தது.

    யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வில் தனது அடையாளத்தைப் போலியாகக் காட்டி மோசடி செய்ததாக பூஜா கேத்கர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

    2022 பேட்ச் அதிகாரியான பூஜா கேத்கர், தனது தனிப்பட்ட ஆடியில் சிவப்பு சைரன், விஐபி தகடுகள் மற்றும் "மகாராஷ்டிர அரசு" ஸ்டிக்கரைப் பயன்படுத்தி தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார்.

    இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பிறகு, அவர் புனேவிலிருந்து வாஷிமுக்கு மாற்றப்பட்டார்.

    ஜூலை 31 அன்று, UPSC அவரது வேட்புமனுவை ரத்து செய்தது மற்றும் கமிஷன் நடத்தும் எதிர்கால தேர்வுகளில் இருந்து அவரைத் தடை செய்தது.

    FIR

    பூஜா கேத்கருக்கு எதிரான யுபிஎஸ்சியின் நடவடிக்கை

    கடந்த மாதம், யுபிஎஸ்சி, பூஜா கேத்கருக்கு எதிராக சிவில் சர்வீசஸ் தேர்வில் முயற்சிகளை அதிகரிக்க அவரது அடையாளத்தைப் போலியாக பயன்படுத்தியாக கூறி கிரிமினல் வழக்குப் பதிவு செய்தது.

    இந்திய தண்டனைச் சட்டம், தகவல் தொழில்நுட்பச் சட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் டெல்லி காவல்துறை எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.

    புதன்கிழமை, பூஜா கேத்கர், தேர்வு மற்றும் நியமனத்திற்குப் பிறகு தன்னை தகுதி நீக்கம் செய்ய UPSC க்கு அதிகாரம் இல்லை என டெல்லி உயர்நீதிமன்றத்தில் வாதிட்டார்.

    தனக்கு எதிரான எந்தவொரு நடவடிக்கையும் மையத்தின் பணியாளர்கள் மற்றும் பயிற்சித் துறை (DoPT) மூலம் மட்டுமே எடுக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

    குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு

    நீதிமன்றத்தில் கேத்கர் கூறியது

    நான்கு பக்க பதிலில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தி மோசடி செய்ததாக யுபிஎஸ்சியின் குற்றச்சாட்டுகளை கேத்கர் மறுத்தார்.

    2012 மற்றும் 2022 க்கு இடையில் தனது முதல் பெயரையோ அல்லது குடும்பப்பெயரையோ மாற்றவில்லை அல்லது கமிஷனுக்கு தனது பெயரை தவறாகக் குறிப்பிடவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார்.

    2019, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆளுமைத் தேர்வுகளின் போது சேகரிக்கப்பட்ட பயோமெட்ரிக் தரவு மூலம் தனது அடையாளம் UPSC ஆல் சரிபார்க்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உயர்நீதிமன்றம்
    டெல்லி
    ஐஏஎஸ்

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    உயர்நீதிமன்றம்

    தபால்துறையில் பணிக்கு விண்ணப்பித்து 28 ஆண்டுகளுக்கு பின்னர் வேலைவாய்ப்பு பெற்ற நபர் தபால்துறை
    மதுரை ஆதீன மடத்திற்கு உரிமை கோரும் நித்தியானந்தா - மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு  மதுரை
    கொசு உற்பத்தி அதிகரிப்பு, தமிழக சுகாதார செயலர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தமிழக அரசு
    மத்திய அரசின் தடையை எதிர்த்து PFI அமைப்பு தாக்கல் செய்த மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்  மத்திய அரசு

    டெல்லி

    கனமழை, மின்வெட்டு, குடிநீர் தட்டுப்பாடு போன்றவையால் திணறும் டெல்லி: இதுவரை 6 பேர் பலி கனமழை
    டெல்லி விமான நிலைய விபத்து: இந்தியா முழுவதிலும் உள்ள விமான நிலையங்களை சோதிக்க உத்தரவு  இந்தியா
    சிபிஐயின் மனுவை ஏற்று அரவிந்த் கெஜ்ரிவாலை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு  அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லியை ஆட்டிப் படைக்கும் கனமழை, வெள்ளம்: 3 பேரின் உடல்கள் மீட்பு  கனமழை

    ஐஏஎஸ்

    தமிழகத்தில் 18 ஐஏஎஸ் அதிகாரிகள் துறை மாற்றம் தமிழக அரசு
    அதிகார துஷ்ப்ரயோகம் செய்த பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியின் சாதி செர்டிபிகேட்டும் போலி? மகாராஷ்டிரா
    துப்பாக்கி கொண்டு மிரட்டியதற்காக, தலைமறைவாக இருந்த பயிற்சி ஐஏஎஸ் பூஜா கேத்கரின் தாய் கைது கைது
    பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி புஜா கேத்கர் மீது யுபிஎஸ்சி நடவடிக்கை எடுத்துள்ளது மத்திய அரசு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025