டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசு: 50% ஊழியர்களுக்கு 'வீட்டிலிருந்தே வேலை' (WFH) கட்டாயம்
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் நிலவும் கடும் காற்று மாசு காரணமாக, டெல்லி அரசு ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இதன்படி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் தங்களது ஊழியர்களில் 50 சதவீதத்தினரை வீட்டிலிருந்தே வேலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. டெல்லி அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், மாசு அளவை குறைக்க அனைத்து தனியார் மற்றும் அரசு அலுவலகங்களும் இந்த 50% 'Work From Home' விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று அறிவித்துள்ளார். இந்த உத்தரவை மீறும் நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ. 5 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு எச்சரித்துள்ளது.
உத்தரவு
காற்று மாசை கட்டுப்படுத்த புதிய கட்டுப்பாடுகள்
மருத்துவமனைகள், காவல் துறை, மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கல் போன்ற அத்தியாவசியச் சேவைகளில் ஈடுபடும் ஊழியர்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. டெல்லிக்குள் அத்தியாவசியமற்ற கனரக லாரிகள் நுழையத் தடை நீடிக்கிறது. பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. கட்டுமானப் பணிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடைகள் அமலில் உள்ளன. டெல்லியில் காற்றின் தரக் குறியீடு (AQI) தொடர்ந்து 'மிகவும் மோசம்' (Severe+- 460) பிரிவிலேயே நீடிக்கிறது. வாகன புகையை குறைப்பதன் மூலம் மாசைக் கட்டுப்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.