Page Loader
திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்
திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

திகார் சிறையிலிருந்து வெளியே வந்தார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்

எழுதியவர் Sekar Chinnappan
Sep 13, 2024
07:05 pm

செய்தி முன்னோட்டம்

டெல்லியில் உள்ள ரூஸ் அவென்யூ நீதிமன்றம் ஜாமீன் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு விடுதலை ஆணை பிறப்பித்ததை அடுத்து திகார் சிறையில் இருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) விடுவிக்கப்பட்டார். முன்னதாக, அவரது முன்கூட்டிய விடுதலைக்காக, சிறப்பு தூதுவர் மூலம் விடுதலை வாரண்டை அனுப்புவதற்கான கோரிக்கையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. சஞ்சய் சிங் போன்ற ஆம் ஆத்மியின் மூத்த தலைவர்கள் உட்பட ஏராளமான ஆதரவாளர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் கெஜ்ரிவாலை வரவேற்றனர். விடுதலையான பிறகு, இந்த ஆதரவாளர்களிடம் பேசிய அவர், பாஜக தன்னை வீழ்த்த முயன்றதாகவும், ஆனால் அவர் 100 மடங்கு வலுவாக உருவெடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும், தன்னுடைய ஒவ்வொரு துளி ரத்தமும் தேசத்துக்கானது என்றார்.

ட்விட்டர் அஞ்சல்

வெளியே வந்த பிறகு அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு