NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஸ்ரீநகரில் விபத்து: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தததால் 10 பேர் பலி
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஸ்ரீநகரில் விபத்து: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தததால் 10 பேர் பலி
    இந்த பகுதி ஜம்மு மாவட்டத்தின் கத்ராவிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.

    ஸ்ரீநகரில் விபத்து: பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்தததால் 10 பேர் பலி

    எழுதியவர் Sindhuja SM
    May 30, 2023
    12:19 pm

    செய்தி முன்னோட்டம்

    இன்று(மே 30) காலை ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து ஆழமான பள்ளத்தாக்கில் விழுந்ததால் குறைந்தது பத்து பேர் கொல்லப்பட்டனர் மற்றும் சுமார் 55 பேர் காயமடைந்தனர்.

    அமிர்தசரஸில் இருந்து கத்ராவுக்குச் சென்று கொண்டிருந்தபோது, ​​​​ஜம்மு மாவட்டத்தில் உள்ள ஜஜ்ஜார் கோட்லி அருகே அந்த பேருந்து விபத்துக்குள்ளானது.

    இந்த பகுதி ஜம்மு மாவட்டத்தின் கத்ராவிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.

    பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டதாகவும் ஜம்முவின் மூத்த காவல் கண்காணிப்பாளர்(SSP) சந்தன் கோஹ்லி கூறியுள்ளார்.

    "10 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 55 பேர் காயமடைந்துள்ளனர். அனைவரும் வெளியேற்றப்பட்டு, மீட்பு நடவடிக்கை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. SDRF குழுவும் சம்பவ இடத்தில் உள்ளது" என்று SSP கூறி இருக்கிறார்.

    details

    காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்

    காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

    துணை ராணுவக் குழுக்கள் மற்றும் மாநில பேரிடர் மீட்பு நிதியம்(SDRF), மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையில், நிர்ணயிக்கப்பட்ட வரம்பை விட அதிகமான பயணிகளை பேருந்தில் ஏற்றிச் சென்றதாக பேருந்து ஓட்டுநர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

    பேருந்தின் அடியில் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை பரிசோதிக்க கிரேன் கொண்டு வரப்பட்டது என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படையின்(CRPF) உதவி கமாண்டன்ட் அசோக் சவுத்ரி கூறியுள்ளார்.

    "CRPF, காவல்துறை மற்றும் பிற குழுக்களும் இங்கு உள்ளன. ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உடல்களும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. பேருந்தின் அடியில் யாராவது சிக்கியிருக்கிறார்களா என்பதை பார்க்க கிரேன் கொண்டு வரப்பட்டது." என்று அசோக் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    ஜம்மு காஷ்மீர்

    சமீபத்திய

    யூகோ வங்கியின் முன்னாள் தலைவரை அமலாக்கத்துறை கைது செய்தது அமலாக்கத்துறை
    தென்கிழக்கு ஆசியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள்; எந்தெந்த நாடுகளில் அதிக பாதிப்பு கொரோனா
    ரூ.20 கோடி மதிப்புள்ள வைரம் மாயம்: போலி வைரம் நீதிமன்றத்தில் எப்படி வந்தது? போலீசார் தீவிர விசாரணை நீதிமன்ற காவல்
    பாகிஸ்தானுடன் கிரிக்கெட் கிடையாது; ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து விலக பிசிசிஐ முடிவு பிசிசிஐ

    இந்தியா

    எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டும்: நிர்மலா சீதாராமன் வேண்டுகோள்  மோடி
    பாரா துப்பாக்கிச் சுடுதல் உலகக்கோப்பை 2023 : ஒரே நாளில் 2 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா! உலக கோப்பை
    விருதுநகர் மாவட்டத்தில் 104 டாஸ்மாக் கடைகளுக்கு சீல்! விருதுநகர்
    புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் வெளியிடப்படும் நரேந்திர மோடி

    ஜம்மு காஷ்மீர்

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் பனியில் சண்டையிடும் வீடியோ வைரல் பாரத் ஜோடோ யாத்ரா
    காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல் தீவிரவாதிகள்
    ஜோஷிமத் போலவே ஜம்மு காஷ்மீரில் ஒரு புதையும் கிராமம் இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025