NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு 
    வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு

    வெறும் 19 லட்சத்திற்கு ஏலம் போகவுள்ள தாவூத் இப்ராஹிமின் பரம்பரை வீடு 

    எழுதியவர் Venkatalakshmi V
    Jan 05, 2024
    12:54 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியும், மும்பை குண்டுவெடிப்பிற்கு காரணமான நிழல் உலக தாதாவுமான தாவூத் இப்ராஹிமின் பரம்பரை சொத்துக்கள் நான்கு இன்று ஏலம் விடப்படவுள்ளது.

    அதுவும் வெறும் 19 லட்சத்திற்கு மட்டுமே ஏல விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தாவூத் இப்ராஹிம் மும்பைக்கு வருவதற்கு முன்னர், மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மும்பாகே என்ற கிராமத்தில் பிறந்தார்.

    அந்த கிராமத்தில் அவரின் குடும்பத்தினருக்கு சொந்தமான ஒரு வீடும், சில விளைநிலங்களும் தான் தற்போது ஏலம் விடப்படவுள்ளது.

    இந்த சொத்துக்களை வாங்க விருப்பம் தெரிவித்தவர்கள் பட்டியலில் சிவசேனாவின் முன்னாள் உறுப்பினர் அஜய் ஸ்ரீவத்சவாவும் ஒருவர்.

    இவர் ஏற்கனவே 2020-இல் தாவூத் இப்ராஹிமிற்கு சொந்தமான பங்களா ஒன்றை ஏலத்தில் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    card 2

    சனாதன தர்ம பாடசாலை அமைக்க திட்டம்

    அந்த பங்களாவில், சனாதன தர்ம பாடசாலை அமைக்க திட்டமிட்டுள்ளாராம் அஜய் ஸ்ரீவத்சவா.

    தாவூத் இப்ராஹிமின் சொத்துக்களை வாங்க எதற்காக அஜய் முனைப்பாக உள்ளார் என கேட்டதற்கு, அப்போது தான் மக்கள் மனதில், தாவூத் மீதுள்ள பயம் விலகும் என காரணம் தெரிவித்துள்ளார்.

    இதற்கிடையே, கடத்தல் மற்றும் அந்நிய செலாவணி மோசடி சட்டத்தின் கீழ், மஹாராஷ்ட்ராவிலுள்ள தாவூத் இப்ராஹிமின் சொத்துக்கள் அத்தனையும் அரசு கைப்பற்றி உள்ளது.

    கடந்த 9 ஆண்டுகளில், தாவூதிற்கு தொடர்புடைய பங்களா, ஹோட்டல் உட்பட 11 சொத்துக்கள் ஏலம் விட்டுள்ளது மகாராஷ்டிரா அரசு.

    அதில், நட்சத்திர அந்தஸ்துடைய ஹோட்டல் ரூ.4.53 கோடிக்கும், ஆறு அபார்ட்மெண்டுகள் ரூ.3.53 கோடிக்கும், ஒரு விருந்தினர் மளிகை ரூ.3.52 கோடிக்கும் ஏலம் போனது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தாவூத் இப்ராஹிம்
    மும்பை

    சமீபத்திய

    ஜூன் 3 ஆம் தேதி டாடா ஹாரியர் EV அறிமுகம்: என்ன எதிர்பார்க்கலாம்? டாடா மோட்டார்ஸ்
    மாம்பழம், பப்பாளி, வாழைப்பழம்- சாப்பிட மட்டுமல்ல, பளபளப்பான சருமத்திற்கான மாஸ்க்காகவும் பயன்படுத்தலாம் சரும பராமரிப்பு
    ஐபிஎல் 2025: ஜெய்ப்பூரில் பஞ்சாப் கிங்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்தது பஞ்சாப் கிங்ஸ்
    'ஆபரேஷன் சிந்தூர்' பதிவு தொடர்பாக அசோகா பல்கலைக்கழக பேராசிரியர் கைது  ஹரியானா

    தாவூத் இப்ராஹிம்

    தாவூத் இப்ராஹிம் உடல்நலனை பற்றி சோட்டா ஷகீல் வெளியிட்ட தகவல் பாகிஸ்தான்

    மும்பை

    'இன்றே விசாரணை' - நடிகர் விஷால் கொடுத்த புகாருக்கு மத்திய அரசு பதில் விஷால்
    மும்பை குண்டுவெடிப்பில் தேடப்படும் குற்றவாளி ராணா நாடு கடத்தப்படுவதில் மேலும் தாமதம் அமெரிக்கா
    பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பிறந்தநாள்- நள்ளிரவில் வாழ்த்துச் சொல்ல வீட்டின் முன் கூடிய ரசிகர்கள்  நடிகர்
    சீல்டா-ராஜ்தானி எக்ஸ்பிரஸில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட முன்னாள் ராணுவ வீரர் கைது ரயில்கள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025