NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு
    பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு
    1/2
    இந்தியா 1 நிமிட வாசிப்பு

    பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 08, 2023
    04:02 pm
    பலாத்காரம் செய்து தலித் பெண்ணின் மீது தீ வைத்த கொடூரம்: ராஜஸ்தானில் பரபரப்பு
    பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசித்து வரும் ஷாகூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் தலித் பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர். 40 சதவீத தீக்காயங்களுடன் பாதிக்கப்பட்ட பெண் ஜோத்பூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் வியாழக்கிழமை நடந்ததாக பச்பத்ரா காவல் நிலைய SHO ராஜேந்திர சிங் கூறியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஷாகூர் என்பவர், அந்த பெண்ணை பலாத்காரம் செய்து, அவர் மீது ஏதோ ரசாயனங்களை ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கு அருகில் வசித்து வந்த ஷாகூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    2/2

    இது ராஜஸ்தானில் சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதற்கு சான்றாகும்: மத்திய இணை அமைச்சர்

    அவர் மீது, இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பட்டியல் சாதி (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பார்மர் தொகுதியின் எம்பியான மத்திய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரி, இந்த சம்பவத்தை கண்டித்து காங்கிரஸ் அரசை கடுமையாக சாடினார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்களில், "இந்த சம்பவம் ராஜஸ்தானில் ஒரு கரும்புள்ளியாகவும், சட்டம்-ஒழுங்கு நிலை மோசமாக இருப்பதற்கு சான்றாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ளார். "பாதிக்கப்பட்ட பெண் விரைவில் குணமடைய வேண்டுகிறேன். இந்த சம்பவம் குறித்து உடனடி நடவடிக்கை எடுத்து, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வட்டார நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டது." என்றும் அவர் கூறி இருக்கிறார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    ராஜஸ்தான்
    இந்தியா

    ராஜஸ்தான்

    ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்'க்கு கொரோனா தொற்று உறுதி கொரோனா
    ராஜஸ்தானில் அந்தரத்தில் இருந்து சுத்திக்கொண்டிருக்கும் பொழுது கீழே விழுந்த ராட்டினம் - அதிர்ச்சி வீடியோ வைரல் செய்தி
    சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி 7,000 கிமீ சைக்கிளில் பயணம் செய்த இளைஞர் இந்தியா
    ராஜஸ்தானில் ஒட்டகத்தை அடித்து கொன்ற கிராம மக்கள் - உரிமையாளரை கொன்றதால் ஆத்திரம் வைரல் செய்தி

    இந்தியா

    திருநர்களை தனி 'சாதி' என்று குறிப்பிட்டிருந்ததால் எழுந்த சர்ச்சை: என்ன நடந்தது திருநர் சமூகம்
    ஐசிஐசிஐ வங்கி கடன் மோசடி: 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் தொழில்நுட்பம்
    ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் : 33 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது இந்திய ஹாக்கி மகளிர் அணி இந்திய அணி
    கியா சொனெட் 2024 - கொடுக்கப்பட்ட புதிய அம்சங்கள் என்னென்ன? கியா
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023