NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்கு
    டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

    கிண்டி மருத்துவமனையில் டாக்டரை கத்தியால் குத்திய இளைஞர் மீது 5 பிரிவுகளில் வழக்கு

    எழுதியவர் Venkatalakshmi V
    Nov 13, 2024
    06:49 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டர் பாலாஜி மீது கத்தியால் தாக்குதல் நடத்திய விக்னேஷ் என்ற இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அவர் மீது கொலை முயற்சி, ஆபாசமாக பேசுதல், மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 307, 506(II) உள்ளிட்ட பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு மருத்துவ பாதுகாப்பு சட்டத்தின் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த சம்பவம் தொடர்பாக, கிண்டி அரசு மருத்துவமனை உதவி பேராசிரியரும், மருத்துவக் கல்வி இயக்குநரகத்தின் கூடுதல் இயக்குநருமான டாக்டர் சேதுராஜன் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர்.

    போராட்டம்

    காலவரையற்ற போரட்டத்தை அறிவித்த மருத்துவர்கள், செவிலியர்கள், பின்னர் வாபஸ் 

    டாக்டர் பாலாஜி மீது நடத்திய தாக்குதலை கண்டித்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மருத்துவர்களுக்கும், மருத்துவமனைக்கும் இரு அடுக்கு பாதுகாப்பு, விபத்து பிரிவில் உள்ள மருத்துவர்களுக்கு துப்பாக்கி ஏந்துதல் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும் என பல கோரிக்கைகளை வைத்து காலவரையற்ற போராட்டத்தில் இறங்கினர்.

    எனினும் தமிழக அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட்டதால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

    காரணம்

    எதற்காக விக்னேஷ் மருத்துவரை தாக்கினார்?

    தன்னுடைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தாய்க்கு சரியான சிகிச்சை வழங்கப்படவில்லை என்று விக்னேஷ் டாக்டர் பாலாஜியை கத்தியால் குத்தினார்.

    குத்தி விட்டு, மருத்துவமனையை விட்டு வெளியே சென்ற போது, அங்கு இருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை மடக்கி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    போலீசாரின் விசாரணையின் பின்னர், விக்னேஷை கைது செய்து, அவர் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து விக்னேஷின் தாயார்,"என் மகன் செய்ததை சரி என்று சொல்லவில்லை. ஆனால், டாக்டர் ஆங்கிலத்தில் ஆபாசமாக திட்டுவார். நோட்டை தூக்கி வீசியடித்தார். நான் டாக்டரா, நீ டாக்டரா என்று அடிக்கடி கேட்பார். எனக்கே கடும் கோபம்தான். எனக்கு என்ன நோய் என்பதை சரியாக கூறாமல் என்ற கோபம் தான் என் மகனுக்கு" எனக்கூறியுள்ளார்.

    கண்டனம்

    மருத்துவர் மீதான தாக்குதல் குறித்து எதிர்க்கட்சிகள் கண்டனம்

    ''அரசு ஊழியர்கள், வியாபாரிகள், பொது மக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சியாக தி.மு.க., அரசு உள்ளது,'' என த.வெ.க., தலைவரும் நடிகருமான விஜய் கூறியுள்ளார்.

    குற்ற நிகழ்வுகளைத் தடுக்காமல், ஒவ்வொரு முறையும், நடவடிக்கை எடுப்போம் என்று பெயரளவில் மட்டுமே முதல்வர் கூறுவது, பொதுமக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருப்பதாக பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

    தமிழகத்தில் தி.மு.க. ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு கிடையாதா? என பா.ம.க., தலைவர் அன்புமணி கேள்வி எழுப்பி உள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    அரசு மருத்துவமனை
    மருத்துவம்
    கொலை

    சமீபத்திய

    இந்தியா-பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம் மே 18 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது இந்தியா
    தமிழ்நாட்டில் SSLC பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி விகிதம் 93.80% தமிழ்நாடு
    'Thug Life' படப்பிடிப்பு தளத்தில் கமலிடம் 'தக் லைஃப் மொமெண்ட்' காட்டிய சிம்பு; அவரே பகிர்ந்த சுவாரசிய தகவல் கமல்ஹாசன்
    மாணவர்கள் கவனத்திற்கு, SSLC மற்றும் பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு பொதுத்தேர்வு

    சென்னை

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்தது; தமிழகத்தில் மழை தொடருமா? காற்றழுத்த தாழ்வு நிலை
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 18) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் பேருந்துகள்
    உங்கள் ஏரியாவில் நாளை (அக்டோபர் 19) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள் மின்தடை

    அரசு மருத்துவமனை

    தூத்துக்குடி விஏஓ கொலை வழக்கு - 2 மாதத்தில் விசாரித்து முடிக்க மதுரை கிளை உயர்நீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    கொடைக்கானலில் பெண்ணிடம் பாலியல் சில்மிஷம் செய்த காங்கிரஸ் பிரமுகர் கைது  கொடைக்கானல்
    உலக செவிலியர் தினம் - மெழுகுவர்த்தி ஏந்தி செவிலியர்கள் உறுதிமொழி  பிறந்தநாள்
    கள்ளச்சாராய விவகாரம் - முக்கிய குற்றவாளி கைது  விழுப்புரம்

    மருத்துவம்

    உலகின் முதல் முழு கண் மாற்று அறுவை சிகிச்சை அமெரிக்காவில் வெற்றிகரமாக நிறைவேற்றம் அறுவை சிகிச்சை
    இனி 12ம் வகுப்பில் அறிவியல் பாடங்களை படிக்கவில்லை என்றாலும் மருத்துவப் படிப்பில் சேரலாம்! நீட் தேர்வு
    சிகிச்சை செலவை 100 மடங்கு வரை குறைக்கும் நான்கு புதிய இந்திய மருந்துகள் கண்டுபிடிப்பு நோய்த்தடுப்பு சிகிச்சை
    நம் வாழ்வை மாற்றக்கூடிய சில ஆயுர்வேத பழக்கவழக்கங்கள் ஆயுர்வேதம்

    கொலை

    தாய், மனைவி மற்றும் குழந்தைகளை விதவிதமாக கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொண்ட நபர்: உத்தரபிரதேசத்தில் பரபரப்பு  உத்தரப்பிரதேசம்
    லண்டனில் இந்திய பெண் கத்தியால் குத்தி கொலை: ஒருவர் மீது வழக்கு பதிவு  லண்டன்
    கர்நாடகாவில் காதலிக்க மறுத்த பக்கத்து வீட்டு பெண்ணை கத்தியால் குத்திக் கொன்றவர் தப்பி ஓட்டம்  கர்நாடகா
    பிளாட்பாரத்தில் இடம் பிடிப்பதில் தகராறு; தலையில் கல்லை போட்டு ஒருவர் கொலை மதுரை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025