NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு 
    போக்சோ சட்டத்திற்கு கீழ் சிறுமியை பலாத்காரம் செய்தவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் கர்ப்பத்தை கலைக்கக் கூடாது: நீதிமன்றம் உத்தரவு 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 26, 2023
    04:04 pm

    செய்தி முன்னோட்டம்

    பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுமியின் 28 வார கர்ப்பத்தை கலைக்க பாம்பே உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் பெஞ்ச் அனுமதி மறுத்துள்ளது.

    பிரசவத்தின் இந்த நிலையில் கட்டாயப்படுத்தி குழந்தையை வெளியே எடுத்தாலும் அது உயிருடன் தான் பிறக்கும் என்று மருத்துவர்கள் கருத்து தெரிவித்திருந்ததை அடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

    நீதிபதிகள் ஆர்.வி.குகே மற்றும் ஒய்.ஜி.கோப்ரகடே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் ஜூன் 20ஆம் தேதி அளித்த உத்தரவில், "வலுக்கட்டாயமாகப் பிரசவம் செய்தாலும் குழந்தை உயிருடன் தான் பிறக்கப் போகிறது என்றால், அந்தக் குழந்தையின் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு அதை முழுமையாக வளர்ந்த பிறகு பிறக்க அனுமதிக்கலாம்." என்று தெரிவித்துள்ளனர்.

    கசகிட்

    மூன்று மாதங்களுக்குப் பிறகு ஒரு ஆணுடன் கண்டுபிடிக்கப்பட்ட சிறுமி 

    தனது மகளின் 28 வார கர்ப்பத்தை கலைக்க அனுமதிக்கக் கோரி பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தாக்கல் செய்த மனுவை கடந்த ஜூன் 20ஆம் தேதி நீதிமன்றம் விசாரித்தது.

    இந்த ஆண்டு பிப்ரவரியில் தனது மகள் காணாமல் போனதாகவும், மூன்று மாதங்களுக்குப் பிறகு அவள் ஒரு ஆணுடன் ராஜஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அந்த சிறுமியின் தாயார் தனது மனுவில் கூறியிருந்தார்.

    சிறுமியை பரிசோதித்த மருத்துவ குழு, கர்ப்பத்தை கலைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், குழந்தை உயிருடன் பிறக்கும் என்றும், புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தனர். மேலும், இதனால் அந்த சிறுமியின் உயிருக்கும் பாதிப்பு ஏற்படலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதனையடுத்து, இந்த கருக்கலைப்புக்கு நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா
    மும்பை
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    கல்வி நிதி வழங்க மறுக்கும் மத்திய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தமிழக அரசு
    புக்கர் பரிசு வென்ற முதல் கன்னட பெண் எழுத்தாளர் பானு முஷ்டாக் கர்நாடகா
    175 பில்லியன் டாலர் மதிப்புள்ள 'Golden Dome' பாதுகாப்புத் திட்டத்தை டிரம்ப் வெளியிட்டார்; அதன் சிறப்பம்சங்கள் என்ன? அமெரிக்கா
    தமிழக சிறை விதிகளில் திருத்தம்: கைதிகளின் சாதியை கேட்க தடை தமிழக அரசு

    இந்தியா

    பூரி ரத யாத்திரை இன்று கோலாகலமாக தொடங்கியது  ஒடிசா
    இந்தியாவில் ஒரே நாளில் 36 கொரோனா பாதிப்பு கொரோனா
    மூன்று நாட்களுக்கு முன் இறந்த பாட்டிக்கு சாதனையை அர்ப்பணித்த இந்திய வீரர் தஜிந்தர்பால் சிங் டூர் குண்டு எறிதல்
    ரிசர்வ் வங்கியின் புதிய துணை ஆளுநராக சுவாமிநாதன் ஜானகிராமன் நியமனம் ரிசர்வ் வங்கி

    மும்பை

    மும்பை-டெல்லி விரைவு சாலையின் ஒரு பகுதியை திறந்து வைத்தார் பிரதமர் மோடி டெல்லி
    கூகுள் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது! கூகுள்
    IIT பாம்பேயில் மாணவர் உயிரிழப்பு: சாதிய பாகுபாடுகளால் தற்கொலை செய்து கொண்டாரா இந்தியா
    ரயிலை காணவில்லை: 90 கண்டைனர்களை ஏற்றி சென்ற கூட்ஸ் ரயிலை காணவில்லை இந்தியா

    உயர்நீதிமன்றம்

    மரணதண்டனை மனு விசாரணை: யாசின் மாலிக்கை ஒசாமா பின்லேடனுடன் ஒப்பிட்ட NIA இந்தியா
    ஆடல் பாடல் நிகழ்ச்சிகளுக்கு புதிய உத்தரவு பிறப்பிக்க தேவையில்லை - மதுரை உயர்நீதிமன்றம் தமிழ்நாடு
    சடலங்களுடன் உடலுறவு கொள்வதற்கு எதிராக சட்டம் இயற்றப்பட வேண்டும்: உயர்நீதிமன்றம் இந்தியா
    வனப் பாதுகாப்பு மசோதா தமிழ் மொழியில் வெளியிடப்படும்: மத்திய அரசு  இந்தியா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025