NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 
    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை 

    எழுதியவர் Nivetha P
    May 17, 2023
    04:31 pm

    செய்தி முன்னோட்டம்

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழப்போர் எண்ணிக்கையானது தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் இது குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் காவல்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

    அதன் படி இந்த கூட்டத்தில், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்வோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சிறப்பாக செயல்படும் அதிகாரிகளை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் நியமிக்க வேண்டும்.

    கள்ளச்சாராயம், போதை பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை தோறும் மாவட்ட ஆட்சியர்கள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    ஆலோசனை 

    மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 கட்டணமில்லா எண் 

    மேலும், இதுகுறித்த புகார்களை பொதுமக்களிடம் பெற்று உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    தொழிற்சாலைகளில் மெத்தனால் மற்றும் எரிசாராயத்தின் பயன்பாட்டினை கண்காணித்து, மெத்தனாலை விஷ சாராயம் காய்ச்ச பயன்படுத்தாமல் இருப்பதினை உறுதி செய்யவேண்டும்.

    அதே போல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளின் வாட்ஸ் அப் எண்ணிற்கும் இதுகுறித்த புகார்களை தெரிவிக்கலாம்.

    மதுவிலக்கு குறித்து தகவலளிக்க 10581 என்னும் கட்டணமில்லா எண் மக்கள் பயன்பாட்டிற்காக இருப்பதினை அவர்களுக்கு தெரியவைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.

    இதனை தொடர்ந்து இந்த கள்ளச்சாராய விவகாரம் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து ஒவ்வொரு திங்கட்கிழமையும் முதல்வர் அலுவலகத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    விழுப்புரம்
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    மு.க ஸ்டாலின்

    ஆன்லைன் ரம்மி தடை சட்டம் தமிழக அரசின் அரசிதழலில் வெளியீடு - தண்டனைகள் குறித்த விவரம் தமிழ்நாடு
    விருத்தாசலத்தில் 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மு.க.ஸ்டாலின்  திமுக
    சேலம் காவிரி ஆற்றி 4 மாணவர்கள் மூழ்கி பலி! சோக சம்பவம்  தமிழ்நாடு
    அமித்ஷா குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியதில் என்ன தவறு? - முதல்வர் மு.க.ஸ்டாலின்  உதயநிதி ஸ்டாலின்

    விழுப்புரம்

    விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நரிக்குறவர் கூட்டம் தர்ணா போராட்டம் - வீசப்பட்ட அடையாள அட்டைகள் தமிழ்நாடு
    விழுப்புரத்தில் அனுமதியின்றி நடத்திய ஜோதி ஆசிரமம் - கொடுமை அனுபவித்தவர்கள் மீட்பு தமிழ்நாடு
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் - 9 பேர் கைது, 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு தமிழ்நாடு
    விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்: சிபிசிஐடிக்கு மாற்றம் தமிழ்நாடு

    காவல்துறை

    சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபருக்கு எச்சரிக்கை  சென்னை
    மேற்குவங்கத்தில் பழங்குடியின பெண் பலாத்கார கொலை வழக்கு - 144 தடையினை மீறி காவல்நிலையத்தில் தீ வைப்பு  மேற்கு வங்காளம்
    சத்தீஸ்கர் தாக்குதல்: உயிரிழந்த 10ல் 5 போலீஸார் மாவோயிஸ்டுகளாக இருந்தவர்கள்  இந்தியா
    சென்னை வடக்கு கடற்கரை பகுதியில் கஞ்சா விற்பனை - 5 பெண்கள் கைது  சென்னை

    காவல்துறை

    கேரளா மாநிலத்தில் பெண் எஸ்.ஐ.அதிரடி கைது  கேரளா
    வெறுப்பு பேச்சுகள் பற்றி உச்ச நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இந்தியா
    சென்னை தாம்பரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து  சென்னை
    இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பெருகும் ஆதரவு; ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகும் #DisRespectOfARRahman ஏஆர் ரஹ்மான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025