NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டிரைவர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டிரைவர் 
    கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் இருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் டிரைவர் 

    எழுதியவர் Sindhuja SM
    Jun 05, 2023
    09:59 am

    செய்தி முன்னோட்டம்

    கடந்த வெள்ளிக்கிழமை ஒடிசாவில் பெரும் விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவர் விபத்துக்குப் பிறகும் சுயநினைவுடன் தான் இருந்தார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    "அப்போது அவர் சுயநினைவுடன் தான் இருந்தார். கிரீன் சிக்னல் கிடைத்தது என்று மட்டுமே அவரால் சொல்ல முடிந்தது. அதன் பிறகு, அவரது உடல்நிலை மோசமாகி, இப்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்." என்று ரயில்வே வாரியத்தின் செயல்பாடு மற்றும் வணிக மேம்பாட்டிற்கான உறுப்பினர் ஜெய வர்மா கூறியுள்ளார்.

    முதற்கட்ட விசாரணையின் படி, கோரமண்டல் எக்ஸ்பிரஸின் டிரைவர் மீது எந்த தவறும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

    details

    பலத்த காயமடைந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸின் ஓட்டுநர்

    கோரமண்டல் எக்ஸ்பிரஸின் லோகோ பைலட்டாக இருந்த ஜி.என்.மோஹன்ட்டி மற்றும் உதவி லோகோ பைலட்டாக இருந்த ஹஜாரி பெஹரா ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.

    "பின்னால் இருந்து ஏதோ அசாதாரண சத்தம் கேட்பதாக யெஸ்வந்த்பூர் டிடி என்னிடம் கூறினார் . ஏதோ இடையூறு வருவதை அவர் உணர்ந்தார். அது என்னவென்று அவருக்குப் புரியவில்லை. ஏ1 கோச்சுக்குப் பிறகு இரண்டு ஜெனரல் கோச்சுகளும் ஒரு கார்டு கோச்சும் இருந்தது. கடைசி இரண்டு பெட்டிகள் தடம் புரண்டன" என்று ஜெய வர்மா கூறி இருக்கிறார்.

    ஒடிசாவின் பாலசோரில் கடந்த வெள்ளிக்கிழமை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டதால் 270 பேர் பலியாகினர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    இந்தியா

    சமீபத்திய

    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி
    தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கு இதுவரை வந்த விண்ணப்பங்கள் எவ்வளவு? அமைச்சர் கோவி செழியன் வெளியிட்ட தகவல் பொறியியல்
    3 வயது சிறுமி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் விடுவிப்பு; உச்ச நீதிமன்றம் தீர்ப்பு உச்ச நீதிமன்றம்
    தீவிரவாதத்தை ஊட்டி வளர்த்ததன் விளைவு; ஒரு இந்திய மாநிலத்தை விட குறைவான ஜிடிபி கொண்ட பாகிஸ்தான் பாகிஸ்தான்

    இந்தியா

    பாஜக இந்திய அரசியலமைப்பின் மீது தாக்குதல் நடத்துகிறது: அமெரிக்காவில் ராகுல் காந்தி ராகுல் காந்தி
    நேபாள பிரதமர் 4 நாள் பயணமாக இன்று இந்தியா வருகிறார் பிரதமர்
    பிரிஜ் பூஷனை கைது செய்ய போதுமான ஆதாரம் இல்லை: டெல்லி காவல்துறை  டெல்லி
    மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி நரேந்திர மோடி
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025