NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை
    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை

    ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இடைநீக்கம் குறித்து சோனியாகாந்தி தலைமையில் ஆலோசனை

    எழுதியவர் Nivetha P
    Aug 11, 2023
    01:34 pm

    செய்தி முன்னோட்டம்

    மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் மோடி பதிலளிக்கவில்லை என்று எதிர்கட்சிகள் ஒன்றிணைந்து நம்பிக்கையில்லா தீர்மானத்தினை நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கொண்டுவந்தனர்.

    அதன்படி, 3ம்நாள் விவாதமான நேற்று(ஆகஸ்ட்.,10),மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் இதுகுறித்து பேசியதாக தெரிகிறது.

    அதனைத்தொடர்ந்து நேற்று மாலை இக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி பேசுகையில், "எதிர்க்கட்சிகள் கொண்டுவந்துள்ள இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடவுளின் ஆசிர்வாதமாகவே நான் பார்க்கிறேன். மணிப்பூர் விவகாரம் குறித்து அமித்ஷா நேற்றே விரிவான விளக்கத்தினை அளித்துவிட்டார்" என்றும்,

    "மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய மற்றும் மாநிலஅரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. விரைவில் மணிப்பூரில் அமைதி திரும்பும் என உறுதியளிக்கிறேன்" என்றும் கூறியுள்ளார்.

    இந்நிலையில் எதிர்க்கட்சிகள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததால் அவர்கள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது என்றும் அறிவிக்கப்பட்டது.

    இடைநீக்கம் 

    75 ஆண்டுகால வரலாற்றில் முதன்முறையாக நாடாளுமன்றத்தில் நடந்த இடைநீக்க நடவடிக்கை 

    இதனிடையே பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் பேசும்போது இடையில் இடையூறு அளித்தார், தேசத்தின் நற்பெயருக்கு இழுக்கு ஏற்படும் வகையில் அடிப்படையில்லா குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார் என பல குற்றங்களை எடுத்துரைத்து காங்கிரஸ் மக்களவைத்தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

    பின்னர், குரல் வாக்கெடுப்பு நடத்தி அவை நடவடிக்கைகளிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

    தொடர்ந்து, இவ்விவகாரம் குறித்த விசாரணைக்காக சபையின் சிறப்புரிமை குழுவுக்கு தகவல் அனுப்பப்பட்டு, அக்குழு இதற்கான அறிக்கையினை அளிக்கும்வரை எம்.பி.இடைநீக்கம் செய்யப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது.

    75ஆண்டுகால வரலாற்றில் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவரை இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதன்முறையாம்.

    இதனையடுத்து, இதுகுறித்து ஆலோசனை நடத்த நாடாளுமன்ற எம்.பி.க்களுக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக்குழு தலைவர் சோனியா காந்தி இன்று(ஆகஸ்ட்.,11)அழைப்பு விடுத்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சோனியா காந்தி
    மணிப்பூர்
    பிரதமர் மோடி
    எதிர்க்கட்சிகள்

    சமீபத்திய

    பாகிஸ்தான் ஹேக்கர்களின் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சைபர் தாக்குதல்களை இந்தியா எவ்வாறு முறியடித்தது? சைபர் பாதுகாப்பு
    இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது: அதற்கான காரணம் இதோ! தங்க விலை
    செரிமான ஆரோக்கியத்திற்கு உதவும் கொத்தமல்லி: அவற்றின் ஆச்சரியமான நன்மைகளை பற்றி தெரிந்துகொள்வோமா? ஆரோக்கியமான உணவு
    கொடைக்கானலுக்கு ட்ரிப் போக ஐடியாவா? அப்போ இந்த டேட்ஸ்-ஐ மிஸ் பண்ணிடாதீங்க! கொடைக்கானல்

    சோனியா காந்தி

    சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி இந்தியா
    அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்தியர்களைப் பிரிபவர்களே 'ஆன்டி-இந்தியர்கள்': சோனியா காந்தி இந்தியா
    சோனியா காந்தி பிரிவினைக்கு அழைப்பு விடுப்பதாக குற்றச்சாட்டு: தேர்தல் ஆணையத்தை நாடிய பாஜக இந்தியா
    கர்நாடகா முதல்வராகிறார் சித்தராமையா - காங்கிரஸ் தலைமை முடிவு கர்நாடகா

    மணிப்பூர்

    மணிப்பூர் விவகாரம் - மத்திய அரசுக்கு எதிராக INDIA கூட்டணி கட்சிகள் போராட்டம்  பாஜக
    உளவுத்துறை எச்சரிக்கையின் எதிரொலி - சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு தீவிரம்  சென்னை
    மணிப்பூரை அடுத்து மேற்கு வங்கத்தில்: அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள் மேற்கு வங்காளம்
    மணிப்பூர் கலவரம்: பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட மேலும் இரண்டு பெண்கள்  இந்தியா

    பிரதமர் மோடி

    ரூ.6,100 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி தெலுங்கானா
    மகளிர் உரிமைத்தொகை திட்டம் மூலம் சுமார் 1 கோடி மகளிர் பயனடைவர் - மு.க.ஸ்டாலின்  மு.க ஸ்டாலின்
    பதவியேற்ற பிறகு, முதல்முறையாக இந்தியாவிற்கு வருகை தரும் இலங்கை அதிபர்  இலங்கை
    தேசிய ஜனநாயக கூட்டணி கூட்டம்: EPSக்கு அழைப்பு பாஜக

    எதிர்க்கட்சிகள்

    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டம், பெங்களுருவில் கூடும் என சரத் பவார் அறிவிப்பு  பாஜக
    பெங்களுரில் நடைபெற இருந்த எதிர்க்கட்சிகள் கூட்டம் ஒத்திவைப்பு  பெங்களூர்
    அடுத்த எதிர்க்கட்சிகள் கூட்டத்திற்கான மாற்று தேதி அறிவிப்பு  பாஜக
    அடுத்த மாபெரும் எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொள்கிறார் சோனியா காந்தி  காங்கிரஸ்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025