NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்
    அடுத்த செய்திக் கட்டுரை
    சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்
    பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்

    சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண்

    எழுதியவர் Venkatalakshmi V
    Oct 02, 2023
    02:27 pm

    செய்தி முன்னோட்டம்

    கோயம்புத்தூரை சேர்ந்தவர் தீணா சுதா. 33 வயதான இந்த பெண்மணி, ஆன்லைனில் பார்ட்-டைம் வேலை தேடி வந்தார்.

    இந்த நேரத்தில், பிரபல சமூக செயலியான டெலெக்ராமில், ஹோட்டல்களுக்கு ரெவியூ எழுதும் வேலை பற்றிய விளம்பரம் ஒன்றை பார்த்துள்ளார்.

    அதில் குறிப்பிட்டிருந்த விவரங்களும், சலுகைகளும் இவரை ஈர்க்கவே, உடனே அந்த வேலைக்கு அப்ளை செய்துள்ளார் சுதா. சுதா பதிவிடும் ஒவ்வொரு ரெவியூவிற்கும் தகுந்தவாறு சம்பளம் என பேசப்பட்டுள்ளது.

    ஆகஸ்ட் மாதம் இந்த வேளையில் சேர்ந்துள்ளார் சுதா.

    ஆரம்பத்தில் பேசியபடி அவருக்கு சம்பளமும் கிடைத்துள்ளது. இதனால், அந்த கம்பெனி மீது சுதாவிற்கு நம்பிக்கை பிறந்தது.

    card 2

    ஒரே மாதத்தில், 15 லட்சத்திற்கும் மேல் சுருட்டல்

    இந்த நிலையில், சுதாவிடம் அந்த மர்ம நபர், பண முதலீடு பற்றி பேசியுள்ளார். பணத்தை முதலீடு செய்வதால், அவருக்கு மேலும் நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், பணம் இரட்டிப்பாகும் என்பது போலவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.

    இதனை நம்பிய சுதா, அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் பணத்தை முதலீடு செய்ய துவங்கியுள்ளார்.

    ஒரு கட்டத்தில், அவர் 15 லட்சங்களுக்கும் மேல் முதலீடு செய்தும் பலன் இல்லாமல் போகவே, அந்த மர்ம நபரை தொடர்பு கொள்ள முயற்சித்து உள்ளார்.

    முதலீடு செய்த பணத்தை மீண்டும் பெறவும் முயற்சித்த போது தான், தான் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் வங்கி கணக்கில் முதலீடு செய்யவில்லை என்றும், ஒரு மோசடி கும்பலால் தான் ஏமாற்றப்பட்டதையும் உணர்ந்துள்ளார்.

    card 3

    சைபர் கிரைம் போலீசாரின் உதவியை நாடியுள்ள சுதா

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த உடனே கோவை சரக சைபர் கிரைம் போலீசை தொடர்பு கொண்டுள்ளார்.

    ஆகஸ்ட் 7-ஆம் தேதியிலிருந்து, செப்டம்பர் 11 வரை, தன்னிடம் அந்த மோசடி கும்பல்,ரூ.15,74,257 வரை ஏமாற்றியுள்ளதாக புகார் தெரிவித்துள்ளார்.

    அவரிடம் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில், தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவுகள் 420 (ஏமாற்றுதல் மற்றும் நேர்மையற்ற முறையில் சொத்துக்களை வழங்குதல் தொடர்பானது) மற்றும் 66 டி (கணினி வளத்தைப் பயன்படுத்தி நபர் மூலம் மோசடி செய்ததற்கான தண்டனை தொடர்பானது) ஆகியவற்றின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

    காவல்துறையினர், ஆன்லைனில் இது போன்ற மோசடி கும்பல்கள் நடமாட்டம் இருப்பதை பற்றி பலமுறை கூறியும், பல அப்பாவிகள் ஏமாற்றப்படுவது தொடர்கதையாக மாறியுள்ளது வருத்தத்திற்குரியது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    சைபர் பாதுகாப்பு
    கோயம்புத்தூர்

    சமீபத்திய

    ஐபிஎல் 2025க்கு பிறகு எம்எஸ் தோனி விளையாடுவது சந்தேகம்; முன்னாள் எஸ்ஆர்எச் பயிற்சியாளர் கருத்து எம்எஸ் தோனி
    சிந்து நதிநீர் ஒப்பந்தத்தில் பாகிஸ்தானுக்கு அடுத்த அடி; ரன்பீர் கால்வாயின் நீளத்தை இரட்டிப்பாக்க இந்தியா பரிசீலனை சிந்து நதி நீர் ஒப்பந்தம்
    இறந்து பிறந்த குழந்தையை மருத்துவமனை ஃப்ரீசரில் விட்டுச் சென்ற பெண்ணுக்கு சிறை தண்டனை; எங்கே தெரியுமா? தைவான்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய ஏ கிரிக்கெட் அணி அறிவிப்பு; கேப்டனாக அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு இந்திய கிரிக்கெட் அணி

    சைபர் கிரைம்

    சர்வதேச 'Standup against Bullying' தினம்: ஆண்டுதோறும் இரண்டு முறை கொண்டாடப்படுவது எதனால்? மன ஆரோக்கியம்
    இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் உட்பட 16.80 கோடி பேரின் தகவல்கள் திருட்டு! தொழில்நுட்பம்
    ஆன்லைன் மோசடி.. ரூ.12.85 லட்சத்தை இழந்த மென்பொறியாளர்!  தொழில்நுட்பம்
    அரசு இணையதளங்கள் மீது இணையத் தாக்குதல்.. மத்திய அரசு எச்சரிக்கை!  தொழில்நுட்பம்

    சைபர் பாதுகாப்பு

    சமூக வலைத்தளப் பதிவு மூலம் ஆன்லைன் மோசடியில் சிக்கிய டெல்லியைச் சேர்ந்த பெண்! சமூக வலைத்தளம்
    தகவல்களை திருடும் புதிய 'மால்வேர்'.. தற்காத்துக் கொள்வது எப்படி? சைபர் கிரைம்
    கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்பேவேரால் பாதிக்கப்பட்ட செயலிகள்.. அதிர்ச்சியளித்த ரஷ்ய நிறுவனம்! கூகுள்
    சைபர் மோசடிகள் இருந்து பாதுகாத்துக் கொள்ள இலவச கருவிகளை வழங்கியிருக்கும் இந்திய அரசு இந்தியா

    கோயம்புத்தூர்

    மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு! மெட்டா
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025