NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை
    கோவையின் புது அடையாளம் - எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை

    கோவையின் புது அடையாளம்-தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை

    எழுதியவர் Nivetha P
    Jan 05, 2024
    01:18 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாநகரில் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை இன்று(ஜன.,5) தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைக்கிறார்.

    கோவை மாநகராட்சி 'ஸ்மார்ட் சிட்டி' என்னும் திட்டத்தின் கீழ் பல்வேறு மேம்பாட்டு பணிகளை செய்து வருகிறது.

    சமீபத்தில் கூட, கோவையில் உள்ள 9 குளங்கள் சீரமைக்கப்பட்டு அழகுப்படுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, அந்த குளங்களின் கரைகளில் வருகை தரும் மக்களுக்காக பொழுதுபோக்கு அம்சங்கள், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவைகளை கோவை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    நிதி 

     247 எழுத்துக்கள் கொண்டு செய்யப்பட்டுள்ள சிலை 

    சுமார் ரூ.1,000 கோடி செலவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு இணைந்து இப்பணிகளை செய்து வருகிறார்கள்.

    அதன்படி, இப்பணிகளுள் ஒன்றாகவே பொள்ளாச்சி சாலையில் கிட்டத்தட்ட 340 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குறிச்சி குளக்கரை பகுதியில் 20 அடி உயரத்தில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    சுமார் 2.5 டன் எடை கொண்ட இந்த திருவள்ளுவர் சிலை இரும்பால் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.

    இந்த திருவள்ளுவர் சிலையானது உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர் மெய் எழுத்து மற்றும் ஆயுத எழுத்து உள்ளிட்ட 247 எழுத்துக்கள் கொண்டு செய்யப்பட்டுள்ளதாம்.

    சிலை 

    'அறம்' என்னும் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை 

    இதுமட்டுமல்லாமல் வேறு சில சொற்கள் கொண்டும் இச்சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    மழை, வெயில் என எதிலும் இச்சிலை சேதமடையாமல், துரு பிடிக்காமல் உள்ள வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.

    திருவள்ளுவர் சிலையில் அவரது நெற்றியில் 'அறம்' என்னும் வார்த்தை பொறிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல் இச்சிலை இரவு நேரங்களில் வண்ண விளக்குகளால் ஜொலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் கவனத்தினை ஈர்க்கும் வகையில் நிறுவப்பட்டுள்ள இச்சிலை இன்று தமிழக முதல்வரால் காணொளி காட்சி மூலம் திறக்கப்படுகிறது.

    இதனையொட்டி, குளக்கரை பகுதிகளில் பராமரிக்கும் பணிகள் அனைத்தும் முழு வீச்சாக மாநகராட்சி ஊழியர்கள் கொண்டு செய்யப்படுகிறது.

    பிரம்மாண்டம் 

    குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள வேறு சில அம்சங்கள் 

    மேலும், இந்த குறிச்சி குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள வேறு சில கலாச்சார சின்னங்கள், ஆடிஸ் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அறிவுசார் மையம், நூலகம் மற்றும் பெரியகுளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள அனுபவ மைய கட்டமைப்பு உள்ளிட்டவைகளும் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

    தினமும் ஏராளமானோர் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இந்த குளக்கரையில், 'செல்பி பாயிண்ட்',

    தமிழர்களின் மரபை பிரதிபலிக்கும் சிலைகள், ஜல்லிக்கட்டு காளை மற்றும் அதனை அடக்கும் வீரர்கள், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை, பரதம் ஆடும் பெண், சிலம்பம் ஆடும் தமிழ் வீரர்கள் உள்ளிட்ட சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது.

    சிறப்புகள் 

    ரூ.52.16 கோடி செலவில் குறிச்சி குளக்கரை சீரமைப்பு 

    ரூ.52.16 கோடி செலவில் இந்த குறிச்சி குளக்கரை மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது அதன் 90% பணிகள் நிறைவடைந்து விட்டது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

    கோவை மாநகராட்சி கீழ் உள்ள உக்கடம் பெரியகுளம், செல்வசிந்தாமணி குளம், குமாரசாமி குளம், கிருஷ்ணாம்பதி குளம், குறிச்சி குளம், வாலாங்குளம், குமாரசாமி குளம், செல்வாம்பதி குளம், சிங்காநல்லூர் குளம் உள்ளிட்ட 9 குளங்களுக்குமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு மேம்பாட்டு பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ட்விட்டர் அஞ்சல்

    திருவள்ளுவர் சிலை 

    #Photos | கோவையில் முதலமைச்சரால் திறந்து வைக்கப்படவுள்ள திருவள்ளுவர் சிலை!#SunNews | #Kovai | #Thiruvalluvar pic.twitter.com/tDwbaLvenB

    — Sun News (@sunnewstamil) January 4, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    மு.க ஸ்டாலின்
    மத்திய அரசு
    மாநில அரசு

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கோவை

    கோவையில் பைக் பின்னால் அமர்வோருக்கும் ஹெல்மெட் கட்டாயம் - இன்று முதல் அமல்  தமிழ்நாடு
    கோவை பெண் ஒட்டுநர் ஷர்மிளாவிற்கு காரினை பரிசாக அளித்த நடிகர் கமல்  கமல்ஹாசன்
    கோவை கிருஷ்ணா கல்லூரியில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 5 பேர் பலி;3 பேர் மீது வழக்கு  தமிழ்நாடு
    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  தற்கொலை

    மு.க ஸ்டாலின்

    மிக்ஜாம் வெள்ள பாதிப்புகளுக்கு சன் குழுமம் சார்பில் 5 கோடி நிதி உதவி ஸ்டாலின்
    2023 - தமிழ்நாடு மாநிலமும் சர்ச்சைகளும் ஓர் பார்வை  செந்தில் பாலாஜி
    மிக்ஜாம் புயலில் சிறப்பாக செயல்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4,000 ஊக்கத்தொகை சென்னை
    நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்  மத்திய அரசு

    மத்திய அரசு

    உத்தரகாண்ட் சில்க்யாரா சுரங்கப்பாதை விபத்து ஏற்பட்டதன் பின்னணி: இந்த நெருக்கடியை எப்படி தவிர்த்திருக்கலாம்? உத்தரகாண்ட்
    மணிப்பூரின் பழமையான ஆயுதக் குழுவான UNLF, அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மணிப்பூர்
    மேலும் 97 தேஜாஸ் விமானங்கள், 156 பிரசாந்த் தாக்குதல் ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய அரசு முடிவு  இந்தியா
    நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடருக்கு முன் அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு நாடாளுமன்றம்

    மாநில அரசு

    வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.2500 - சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு இந்தியா
    மத்திய பிரதேசத்தில் ஆயிரத்தில் சம்பளம் வாங்கும் நபருக்கு கோடியில் வருமான வரி விதிப்பு மத்திய பிரதேசம்
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரேஷன் அட்டை - உச்சநீதிமன்றம் உத்தரவு!  உச்ச நீதிமன்றம்
    ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025