NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம் 
    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம்

    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா திடீர் பணி நீக்கம் 

    எழுதியவர் Nivetha P
    Jun 23, 2023
    02:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை மாவட்டம் வடவள்ளியை சேர்ந்தவர் ஷர்மிளா.

    இவர் தனது சிறுவயதில் இருந்தே வாகனங்களை ஓட்டுவதில் அதீத ஆர்வம் கொண்டவர்.

    அதனால், கடந்த மார்ச் மாதம், இவர் கோவை காந்திபுரத்திலிருந்து சோமானூர் செல்லும் தனியார் பேருந்தில் ஒன்றில் ஓட்டுநராக பணிபுரிய தொடங்கினார்.

    கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் என்பதால் இவருக்கு பல தரப்புகளிலிருந்து பாராட்டு குவிந்தது.

    இந்நிலையில், இன்று(ஜூன்.,23)காலை திமுக பொதுச்செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி ஷர்மிளாவை காந்திபுரம் பேருந்துநிலையத்தில் சந்தித்து பேசியுள்ளார்.

    தொடர்ந்து அவரது பேருந்திலேயே ஏறி பீளமேடுவரை ஷர்மிளாவுடன் உரையாடியப்படி பயணம் மேற்கொண்டுள்ளார்.

    அப்போது, அந்த பேருந்தில் இருந்த பெண் நடத்துநர் அன்னதாய் என்பவர் கனிமொழியிடம் பயணசீட்டு வாங்கும்படி அதிகாரத்தோரணையில் கேட்டார் என்று கூறப்படுகிறது.

    பணி நீக்கம் 

    ஆட்டோ கேப் ஓட்டி பிழைத்துக்கொள்வேன் - ஷர்மிளா 

    தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து அப்பெண் நடத்துநர் பேருந்து உரிமையாளரிடம் புகாரளித்ததாக கூறப்படுகிறது.

    அதன்படி, ஷர்மிளா மற்றும் அவரது தந்தையினை அழைத்துப்பேசிய பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு, "உனது விளம்பரத்திற்காக அனைவரையும் அழைத்து வராதே. யார் பேருந்தில் ஏறினாலும் எனது நடத்துநர் அப்படித்தான் டிக்கெட் கேட்பார்" என்று கூறியுள்ளார்.

    அதற்கு ஷர்மிளா தான் யாரையும் விளம்பரத்திற்காக பேருந்தில் ஏற்றவில்லை என்றும், கனிமொழி வருவது குறித்து 2 நாட்களுக்கு முன்னர் தான் தெரியும் என்றும் பதிலளித்துள்ளார்.

    வாக்குவாதம் அதிகரித்ததையடுத்து, உரிமையாளர் துரைக்கண்ணு 'உனது பெண்ணை கூட்டிகிட்டு வெளியே போ' என்று கூறியுள்ளார்.

    அவமானப்படுத்தப்பட்டு வெளியே வந்த ஷர்மிளா,"என்னால் பேருந்துத்தான் வாங்கமுடியாது. ஆனால் ஆட்டோ, கேப் போன்றவைகளை வாங்கமுடியும். அதனை ஓட்டி நான் பிழைத்துக்கொள்வேன்" என்று கூறியதாக கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    கனிமொழி

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    கோவை

    கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 5 பேரிடம் NIA விசாரணை தமிழ்நாடு
    கோவை லாட்ஜில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கள்ளக்காதல் ஜோடி - இளம்பெண் பலி மாவட்ட செய்திகள்
    ஏப்ரல் மாதத்திற்குள் உருவாக இருக்கும் ஸ்மார்ட் சிட்டிகள் இந்தியா
    தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் - இந்து முன்னணியினர் உள்ளிட்ட 4 பேர் கைது தமிழ்நாடு

    கனிமொழி

    தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் சர்ச்சை பேச்சு - கனிமொழி ஆவேசம் தமிழ்நாடு
    லூர்து பிரான்சிஸ் குடும்பத்தாருக்கு நேரில் சென்று ரூ,1 கோடி காசோலை கொடுத்தார் கனிமொழி  தூத்துக்குடி
    கவிஞர் வைரமுத்து மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என சின்மயி முதலமைச்சருக்கு கேள்வி கோலிவுட்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025