NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியாவில் எங்குமில்லாத தண்டனை; பிரிட்டிஷாரின் திமிர் வரியை எதிர்கொண்ட கோவை மக்கள்; சுவாரஸ்ய பின்னணி
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியாவில் எங்குமில்லாத தண்டனை; பிரிட்டிஷாரின் திமிர் வரியை எதிர்கொண்ட கோவை மக்கள்; சுவாரஸ்ய பின்னணி
    கோவை கண்ணம்பாளையம் திமிர் வரி

    இந்தியாவில் எங்குமில்லாத தண்டனை; பிரிட்டிஷாரின் திமிர் வரியை எதிர்கொண்ட கோவை மக்கள்; சுவாரஸ்ய பின்னணி

    எழுதியவர் Sekar Chinnappan
    Aug 15, 2024
    12:22 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியா 78வது சுதந்திர தினத்தை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) உற்சாகமாகக் கொண்டாடி வரும் நிலையில், பிரதமர் மோடி செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றி மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது 40 கோடி மக்கள் போராடி பெற்ற சுதந்திரத்தை தற்போது 140 கோடி மக்கள் நினைவுகூர்வதாக தெரிவித்தார். இந்நிலையில், சுதந்திரத்திற்கு போராடிய நம் முன்னோர்கள் குறித்த தகவல்கள் பகிரப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், தமிழ்நாட்டில் ஒரு ஊர் மக்களுக்கு பிரிட்டிஷார் திமிர் வரி விதித்தது குறித்த சுவாரஸ்யமான தகவலை இதில் பார்க்கலாம்.

    1942இல் செய் அல்லது செத்துமடி என்ற முழக்கத்துடன் மகாத்மா காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தை முன்னெடுத்த நிலையில், அந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை கண்ணம்பாளையம் பகுதி மக்களுக்கு திமிர் வரி விதிக்கப்பட்டது.

    திமிர் வரி

    பிரிட்டிஷாரின் திமிர் வரி

    வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் கீழ் கோவையில் ரயில் கவிழ்ப்பு, பிரிட்டிஷாரின் ஏரோ ட்ரோமை அழிப்பது என மிகப்பெரிய தொல்லை கொடுக்கப்பட்டது.

    இதில் ஈடுபட்டவர்கள் தலைமறைவான நிலையில், அவர்கள் குறித்து எந்த தகவலையும் மக்கள் தர மறுத்தனர்.

    மக்களை கடுமையாக துன்புறுத்தியும் எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மக்கள் பொருளாதார நெருக்கடியில் இருந்ததை வைத்து, திமிர் வரி என புதிதாக வரி போட்டு, அதை 48 மணி நேரத்திற்குள் செலுத்த வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    எனினும், அதையும் செலுத்தாமல் திமிரோடு பிரிட்டிஷாரை எதிர்த்து அந்த பகுதி மக்கள் போராடினர். இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஒற்றுமையுடன் நாட்டுக்காக போராடியதை அந்த பகுதி மக்கள் தற்போது நினைவுகூர்ந்து வருகின்றனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சுதந்திர தினம்
    இந்தியா
    கோவை
    கோயம்புத்தூர்

    சமீபத்திய

    இனி, நீதித்துறை சேவையில் சேர குறைந்தபட்சம் 3 ஆண்டு வழக்கறிஞர் பயிற்சி தேவை: உச்ச நீதிமன்றம் உத்தரவு உச்ச நீதிமன்றம்
    கடந்த 10 நாட்களில் இந்தியாவில் 164 கோவிட் வழக்குகள் பதிவாகியுள்ளன கோவிட் 19
    2025 ஆம் ஆண்டின் மிகவும் சக்திவாய்ந்த Solar flares பூமியைத் தாக்கும் என நாசா எச்சரிக்கை சூரியன்
    பெங்களூருவில் 12 மணிநேரத்தில் 130 மி.மீ கனமழை: 3 பேர் உயிரிழப்பு - ஆரஞ்சு எச்சரிக்கை வெளியீடு பெங்களூர்

    சுதந்திர தினம்

    பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் மோடி
    தொடர் விடுமுறை எதிரொலி - புதிய அறிவிப்பினை வெளியிட்ட மெட்ரோ நிர்வாகம்  மெட்ரோ
    சுதந்திர தினம் : வெள்ளையரை எதிர்த்து போராடிய முதல் தமிழ் பெண் ஆட்சியாளர் வேலு நாச்சியார் சிவகங்கை
    வெள்ளையர்களின் கொட்டத்தை அடக்கிய பெண் போராளி: யாரிந்த குயிலி? சிவகங்கை

    இந்தியா

    தாஜ்மஹாலில் கங்கை நதியின் புனித நீரை விநியோகித்த இருவர் கைது உத்தரப்பிரதேசம்
    வக்ஃப் வாரியத்தின் வரம்பற்ற அதிகாரத்திற்கு கடிவாளம் போடும் மத்திய அரசு மத்திய அரசு
    இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 2017-18 ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு இன்ஃபோசிஸ்
    வங்கதேசத்தில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் 21 பேர் பலி; இந்தியர்களுக்கு எச்சரிக்கை பங்களாதேஷ்

    கோவை

    மீண்டும் கோவையில் களமிறங்குகிறார் கமல்ஹாசன்  தேர்தல்
    பரபரப்பு வீடியோ: கடன் வழங்கவில்லை என்று நிர்மலா சீதாராமனிடம் மேடையில் ஏறி முறையிட்ட நபர்  இந்தியா
    கோவை ஆயுதப்படை காவலர்களுக்கு தோள்பட்டை கேமரா - மாநகர காவல் ஆணையர்  சிறை
    கோவை மாவட்டம் வால்பாறையில் 20 இடங்களில் குளிக்க தடை  சுற்றுலா

    கோயம்புத்தூர்

    மெட்டா நிறுவன அதிகாரிகள் மீது நடவடிக்கை.. கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவு! மெட்டா
    மேட்டுப்பாளையும் ரயில் நிலையத்தின் 150வது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் தமிழ்நாடு
    சைபர் கிரைம்: பார்ட்-டைம் வேலையால் 16 லட்சத்தை இழந்த கோவை பெண் சைபர் கிரைம்
    தமிழ்நாடு திரையரங்குகள் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பதவியிலிருந்து திருப்பூர் சுப்பிரமணியம் விலகல் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025