NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்
    பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்

    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல்

    எழுதியவர் Venkatalakshmi V
    May 23, 2025
    10:32 am

    செய்தி முன்னோட்டம்

    போக்குவரத்து விதிமீறல்களுக்கு போலீசார் அனுப்பும் அதிகாரப்பூர்வ 'சலான்' குறுஞ்செய்திகளை போல, போலி செயலி வாயிலாக பொதுமக்களிடம் பணத்தை சூறையாடும் புதிய வகை சைபர் மோசடிகள் நடைபெற்று வருவதாக சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

    சமீப காலமாக, வாகன ஓட்டிகளின் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு 'பரிவாஹன்' செயலியின் பெயரில் போலியான சலான் மற்றும் அபராதம் செலுத்தும் லிங்க் அனுப்பி, வங்கி கணக்கிலிருந்து பணம் திருடப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    விபரங்களுக்கு அனுப்பப்படும் மெசேஜ்களில் வாகனத்தின் புகைப்படம், விதிமீறிய இடம், நேரம் மற்றும் அபராத தொகை உள்ளிட்ட விபரங்கள் வழங்கப்படுகின்றன.

    ஆனால், உண்மையில் இது போலியான செயலியை நிறுவ வைக்க வாட்ஸ்அப்பில் அனுப்பப்படும் மோசடி முயற்சி என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

    விவரங்கள்

    பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென சைபர் க்ரைம் போலீசார் அறிவுறுத்தல்

    பொதுமக்கள், போலியான செயலிகளை பதிவிறக்கம் செய்து வங்கி விவரங்களை உள்ளிடும்போது, மோசடி நபர்கள் அவர்களது வங்கி கணக்கிலிருந்தே பணத்தை திருடி வருகின்றனர்.

    இதுபோன்ற பல புகார்கள் தற்போது கோயம்புத்தூர் சைபர் கிரைம் பிரிவிற்கு வந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதைத்தொடர்ந்து, சைபர் போலீசார் முக்கிய எச்சரிக்கைகள் வெளியிட்டுள்ளனர்.

    அதன்படி,

    வாட்ஸ்ஆப்பில் வரும் பெயர் தெரியாத செயலிகளின் லிங்குகளை அணுகக்கூடாது

    மோசடியான செயலிகளை பதிவிறக்கம் செய்யக்கூடாது.

    விதிமீறல் அபராதம் செலுத்த வேண்டுமெனில், அரசின் அதிகாரப்பூர்வ 'பரிவாஹன்' செயலியை (Play Store / App Store மூலம்) பயன்படுத்தவேண்டும்.

    வங்கி விவரங்களைத் தரும் போது மிகுந்த சற்று கவனமாக இருக்க வேண்டும்.

    மக்கள் எச்சரிக்கையாக இருந்து, தங்களது தனிப்பட்ட தகவல்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சைபர் கிரைம்
    கோவை
    போக்குவரத்து
    போக்குவரத்து காவல்துறை

    சமீபத்திய

    'பரிவாஹன்' போலி செயலி மூலம் புதிய மோசடி, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க சைபர் கிரைம் போலீசார் அறிவுறுத்தல் சைபர் கிரைம்
    முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் பேத்தி கார் விபத்தில் உயிரிழப்பு விபத்து
    மீண்டும் பங்களாதேஷில் ஆட்சி கவிழும் அபாயம்; ராஜினாமா செய்வதாக இடைக்கால தலைவர் யூனுஸ் மிரட்டல்  பங்களாதேஷ்
    ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மாணவர்களை சேர்க்க செக் வைத்த டிரம்ப்: இந்திய மாணவர்களின் நிலை என்னவாகும்? பல்கலைக்கழகம்

    சைபர் கிரைம்

    ஆன்லைன் மோசடிகளை கண்டுபிடித்து தவிர்ப்பது எப்படி? ஆலோசனைகளை வழங்குகிறது கூகுள் கூகுள்
    "இருங்க பாய்..": கிரைம் பிரான்ச் DCக்கே மோசடி கால் செய்து வகையாக மாட்டிய மோசடி கும்பல் சைபர் பாதுகாப்பு
    மொபைல் மால்வேர் தாக்குதல்களுக்கு உலகிலேயே அதிகம் இலக்கு வைக்கப்பட்ட நாடு இந்தியா மொபைல்
    ரூ.99,000 இழந்த சோகம்; முன்னாள் மிஸ் இந்தியா அழகியிடம் கைவரிசை காட்டிய டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியாளர்கள் இந்தியா

    கோவை

    கோவை மற்றும் மதுரையில் மெட்ரோவிற்கான நிலம் கையகப்படுத்தும் பணி பிப்ரவரியில் துவங்கும் மெட்ரோ
    உங்கள் ஏரியாவில் நாளை (டிசம்பர் 27) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை
    தி.மு.க.,வை தோலுரித்து காட்டப்போகிறோம்: 7 முறை தன்னைத்தானே சாட்டையால் அடித்து போராட்டம் நடத்திய அண்ணாமலை அண்ணாமலை
    உங்கள் ஏரியாவில் நாளை (ஜனவரி 3) மின்தடை இருக்கிறதா என தெரிந்துகொள்ளுங்கள்  மின்தடை

    போக்குவரத்து

    Airshow 2024: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம், பாதுகாப்பு அதிகரிப்பு சென்னை
    ஆயுத பூஜை தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு படையெடுத்த மக்கள்; சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஆயுத பூஜை
    பொதுமக்களிடையே எத்தனால், ஃப்ளெக்ஸ் எரிபொருட்களை ஊக்குவிக்க வேண்டும்: கட்காரி வேண்டுகோள் நிதின் கட்காரி
    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 16,500 சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டம் பேருந்துகள்

    போக்குவரத்து காவல்துறை

    அரியலூர் மாவட்டத்தில் சிறுவர்கள் ஓட்டிய 25 வாகனங்கள் பறிமுதல் மாவட்ட செய்திகள்
    வாகன ஸ்கிராப்பிங் 11,000 வாகனங்கள் ரத்து - வெளியிட்ட அரசு! சாலை பாதுகாப்பு விதிகள்
    சென்னையில் மீண்டும் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் - 16 பைக்குகள் பறிமுதல்  சென்னை
    FASTag-ல் கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.10.. நீதிமன்றத்தின் மூலம் ரூ.8,000 இழப்பீடு! பெங்களூர்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025