
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி விருது 2022 - முதலிடம் பிடித்த கோவை
செய்தி முன்னோட்டம்
இந்திய ஸ்மார்ட் சிட்டி விருது போட்டி மத்திய வீட்டு வசதி நகர்ப்புற உறவுகளுக்கான அமைச்சகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த விருதுக்கான கடந்தாண்டு போட்டியில் 100 ஸ்மார்ட் சிட்டி நகரங்கள் பங்கேற்றனர், இதில் சென்னை மாநகரமும் அடங்கும்.
இதன்படி, இந்திய ஸ்மார்ட் சிட்டி விருதுகள் 2022ல் கோவை மாநகராட்சி முதலிடம் பிடித்துள்ளது என்று அண்மையில் செய்திகள் வெளியாகியுள்ளன.
சுற்றுசூழல் கட்டமைப்பு பிரிவில் கோவை இந்தாண்டிற்கான மத்திய அரசு வழங்கும் சுமார்ட் சிட்டி விருதினை வென்றுள்ளது.
மத்திய அமைச்சகத்தின் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மாதிரி சாலை மறுசீரமைப்பு பணிக்காக கோவை இந்த விருதினை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
கோவை மாநகராட்சி
கோவை மாநகராட்சிக்கு ஒன்றிய அரசு விருது!#SunNews | #Coimbatore | #SmartCity pic.twitter.com/qjfLsHl2P7
— Sun News (@sunnewstamil) August 25, 2023