NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை
    அடுத்த செய்திக் கட்டுரை
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை
    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை

    கோவை ஆசிட் வீச்சு சம்பவம் - நீதிமன்ற நுழைவு வாயில்களில் தீவிர சோதனை

    எழுதியவர் Nivetha P
    Mar 24, 2023
    07:35 pm

    செய்தி முன்னோட்டம்

    கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று(மார்ச்.,23) கணவன் மனைவி இடையேயான பிரச்சனையின் காரணமாக மனைவி மீது கணவர் ஆசிட் ஊத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது.

    இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    இதனையடுத்து வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் பணிபுரியும் அலுவலர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் காவல்துறை தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

    நீதிமன்றத்திற்கு வரும் அனைவரையும் தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து நேற்று சம்பவ இடத்தினை நேரில் ஆய்வு செய்த கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸிடமும் கூறப்பட்டதாக தெரிகிறது.

    நேரில் ஆய்வு

    பாதுகாப்பு குறித்து கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல்

    இந்நிலையில் கோவை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தல் படி, இன்று(மார்ச்.,24) கோவை நீதிமன்ற வளாகத்தின் 3 நுழைவு வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    நாதிமன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், காவலர்கள் ஆகியோரை தவிர மற்ற பொது மக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

    அதே போல், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், காவலர்கள் ஆகியோரை தவிர்த்து மற்ற அனைவரும் ஒரே நுழைவு வாயில் வழியாக மட்டுமே உள்ளே சென்று வெளியே வர அனுமதி.

    இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸ் நேரில் சென்று ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    கோவை
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    அனைத்து உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கும் ஒரே அளவிலான ஓய்வூதியம்; உச்ச நீதிமன்றம் உத்தரவு ஓய்வூதியம்
    இனி மெட்ரோ டிக்கெட்டை உபெரிலேயே எடுக்கலாம்; வந்தாச்சு புதிய வசதி மெட்ரோ
    யூடியூபர், மாணவர், பாதுகாவலர் உட்பட 11 'பாகிஸ்தான் உளவாளிகள்' இதுவரை கைது பாகிஸ்தான்
    உளவு பார்க்க யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை சோறு போட்டு வளர்த்த பாகிஸ்தான் ஹரியானா

    கோவை

    ஈஷா யோகா மையம் சென்ற பெண் மர்மமான முறையில் மரணம்! தமிழ்நாடு
    கோவையில் கூலித்தொழிலாளி வீட்டிற்கு ரூ.70 ஆயிரம் கரண்ட் பில் - அதிர்ச்சியடைந்த மின்கட்டண பயனாளர் இந்தியா
    சுபஸ்ரீ மரணம்: ஈஷா யோகா மையம் கண்டனம் தமிழ்நாடு
    உலகளவில் நேரம் தவறாத 20 விமான நிலையங்கள் பட்டியலில் 13வது இடத்தில் கோவை விமான நிலையம் விமான சேவைகள்

    காவல்துறை

    மதுரையில் மாடுகளை திருடிய வடமாநில கும்பல் கைது - சப்-இன்ஸ்பெக்டரை கொல்ல முயற்சி மதுரை
    குடியரசு தின விழாவில் ஜனாதிபதி விருது - தமிழகத்தில் 3 காவலர்களுக்கு அறிவிப்பு குடியரசு தினம்
    குடியரசு தின நிகழ்வில் முதல் முறையாக திருநங்கை போலீசார் பங்கேற்க உள்ளனர் இந்தியா
    அமெரிக்காவில் மீண்டும் ஒரு கறுப்பினத்தவரை காலால் மிதித்து கொன்ற போலீஸ் அமெரிக்கா

    காவல்துறை

    ராகுல் காந்தியின் யாத்திரையில் பாதுகாப்பு குறைபாடு எதுவும் இல்லை: காஷ்மீர் போலீசார் ராகுல் காந்தி
    தேசிய கீதத்திற்கு ஆட்டம் போட்ட இளைஞர்கள்; நடவடிக்கை எடுத்த காவல்துறையினர் உத்தரப்பிரதேசம்
    கிருஷ்ணகிரி எருதுவிடும் விழா கலவரம்-வாலிபரை பூட்ஸ் காலால் எட்டி உதைத்த எஸ்.பி. விளக்கம் காவல்துறை
    தமிழக டிஜிபி பொதுமக்களுக்கு எச்சரிக்கை-'இரிடியம் முதலீடு' என்னும் பெயரில் மோசடி தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025