NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
    இந்தியா

    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
    எழுதியவர் Nivetha P
    Mar 23, 2023, 06:37 pm 0 நிமிட வாசிப்பு
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்
    கோவையில் நீதிமன்ற வளாகத்திற்குள் மனைவி மீது ஆசிட் வீசிய கணவர் - வழக்கறிஞர்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்

    கோவை ராமநாதபுரம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார், இவரது மனைவி கவிதா(33). கடந்த 2016ம் ஆண்டு கவிதா பேருந்தில் பயணித்த 10 பவுன் தங்கநகையை திருடிய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தவர். இவர் இதுகுறித்த வாய்தாவிற்காக கோவை நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். கணவர் மற்றும் தனது 2 குழந்தைகளை பிரிந்து வாழும் கவிதாவை சிவகுமார் நீதிமன்ற வளாகத்திற்குள் பின்தொடர்ந்து வந்து சந்தித்து பேசியுள்ளார். அப்போது இருவர் மத்தியில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலில் மறைத்து வைத்திருந்த ஆசிட்டினை எடுத்து சிவகுமார் கவிதாவின் உடல் முழுவதும் பரவலாக ஊற்றியுள்ளார். இதில் அவரது உடல் மற்றும் ஆடைகளும் எரிந்துள்ளது.

    நேரில் ஆய்வு செய்த துணை ஆணையர்

    இதனை தடுக்க முயன்ற அருகில் இருந்த வழக்கறிஞர்கள் சிலர் மீதும் ஆசிட் பட்டு சிறுசிறு காயங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து சிவகுமாரை அங்கிருந்த வழக்கறிஞர்கள் அடித்து பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர். ஆசிட் வீச்சால் படுகாயமடைந்த கவிதா கோவை அரசு மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்த கோவை மாநகர வடக்கு துணை ஆணையர் சந்தீஸ், பிளாஸ்டிக் பாட்டிலில் ஆசிட்டினை மறைத்து வைத்து கொண்டு வந்ததால் அங்கிருந்தோருக்கு சந்தேகம் வரவில்லை. மேலும் இது கணவன் மனைவி இடையே உள்ள தகராறு காரணமாக நிகழ்ந்த சம்பவம் என்று கூறப்படுகிறது. இது குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    காவல்துறை
    கோவை
    காவல்துறை

    காவல்துறை

    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது சென்னை
    பஞ்சாப் காலிஸ்தானி தலைவருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் வெளியீடு இந்தியா
    தமிழகத்தின் முதல் திருநங்கை காவலர் பணியை ராஜினாமா செய்தார் - அதிர்ச்சி காரணம் கோவை
    தமிழ்நாடு பெண் காவலர்களின் நலம் சார்ந்த 9 அறிவிப்புகளை அறிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு

    கோவை

    கோவையில் வாயில் காயத்தோடு அவதிப்பட்டுவந்த யானை உயிரிழப்பு-பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல் மாவட்ட செய்திகள்
    தமிழக பட்ஜெட்டில் கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு மதுரை
    கோவையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தல் கொரோனா
    கோவையில் வெடிகுண்டு புரளி எழுப்பிய நபர் கைது: காரணம் இது தானாம்! சென்னை

    காவல்துறை

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை - பணம் பறிமுதல் தமிழ்நாடு
    தமிழகத்தில் பிளஸ் 1 பொது தேர்வறையில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு பாலியல் தொல்லை - ஆசிரியர் போக்சோவில் கைது தமிழ்நாடு
    புலம்பெயர் தொழிலாளர்களுக்கு அறிவுரை கூறிய நாமக்கல் காவல்துறை தமிழ்நாடு
    கடலூரில் என்.எல்.சி. நிறுவனத்தை எதிர்த்து பாமக முழு அடைப்பு போராட்டம் - 7,000 போலீசார் குவிப்பு கடலூர்

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023