பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு அடுத்த பரனூரில் உள்ள அரசு தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் ஆய்வு மேற்கொண்டார். முதலமைச்சர் திட்டதின் கீழ் கள ஆய்விற்காக விழுப்புரம் மாவட்டம் செல்லும் வழியில், பரனூர் மறுவாழ்வு மையத்திற்கு சென்றுள்ளார். அங்குள்ள முதியவர்களிடம் குறைகளை கேட்டபின் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார். மேலும், அங்கு மறுவாழ்வு மையத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்திக் தரக்கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டவுடன், உடனடியாக நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்குமாறு அரசு அலுவலர்களுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.