NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / பணப்பதுக்கல் சர்ச்சை; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    பணப்பதுக்கல் சர்ச்சை; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு
    நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

    பணப்பதுக்கல் சர்ச்சை; நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது விசாரணை நடத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு

    எழுதியவர் Sekar Chinnappan
    Mar 23, 2025
    10:51 am

    செய்தி முன்னோட்டம்

    தீ விபத்துக்குப் பிறகு நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் அதிக அளவு பணம் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, அவரது வீட்டில் விசாரணை நடத்த இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார்.

    விசாரணை முடியும் வரை, நீதிபதி வர்மா நீதித்துறைப் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாய் இந்த விவகாரம் குறித்து அறிக்கை சமர்ப்பித்ததைத் தொடர்ந்து விசாரணை தொடங்கப்பட்டது.

    விசாரணைக் குழுவில் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.எஸ். சந்தவாலியா மற்றும் கர்நாடக உயர்நீதிமன்றத் நீதிபதி அனு சிவராமன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    பின்னணி

    பணம் கைப்பற்றப்பட்டதாக சர்ச்சை

    மார்ச் 14 அன்று நீதிபதி வர்மாவின் லுட்யன்ஸின் டெல்லி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து சர்ச்சை எழுந்தது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் கணிசமான அளவு பணத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் தொடர்பாக தவறான தகவல்கள் பரவி வருவதாக உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியதுடன், மார்ச் 20 அன்று உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூட்டத்திற்கு முன்பே விசாரணை தொடங்கப்பட்டதை உறுதிப்படுத்தியது.

    2021இல் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி வர்மா, முக்கிய வரிவிதிப்பு மற்றும் நிறுவன வழக்குகளைக் கையாண்டுள்ளார்.

    உச்ச நீதிமன்றத்தின் உள் விசாரணை செயல்முறை அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்கும்.

    எனினும், அவரை பணியிலிருந்து நீக்க நாடாளுமன்றத்தில் ஒரு பதவி நீக்கத் தீர்மானம் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    உச்ச நீதிமன்றம்
    டெல்லி
    உயர்நீதிமன்றம்

    சமீபத்திய

    'ராஜதந்திரமற்ற செயல்களுக்காக' பாகிஸ்தான் தூதரை இந்தியா வெளியேற்றியது இந்தியா
    இ-பாஸ்போர்ட்கள் என்றால் என்ன, இந்தியாவில் அதை எவ்வாறு பெறுவது? பாஸ்போர்ட்
    மாருதி சுஸுகியின் அரினா இப்போது 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது மாருதி
    ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆகக் குறைந்தது பணவீக்கம்

    உச்ச நீதிமன்றம்

    பங்களாதேஷ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கியது செல்லும்; 1971 ஒப்பந்தத்தை உறுதி செய்தது உச்ச நீதிமன்றம் அசாம்
    தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட் பரிந்துரைத்த அடுத்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா யார்? இந்தியா
    ஈஷா யோகா மையத்தில் சிறுவர்கள் சிறை வைக்கப்பட்டிருப்பதாக புகார்: வழக்கை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம் ஈஷா யோகா
    ஓடிடி மற்றும் ஸ்ட்ரீமிங் தளங்களை கண்காணிக்க ஆணையம்; மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம் ஓடிடி

    டெல்லி

    12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணியில் விராட் கோலி சேர்ப்பு; ரஞ்சி கோப்பையில் விளையாடுகிறாரா? விராட் கோலி
    டெல்லியில் ஆயுஷ்மான் பாரத் திட்டம்: இடை நிறுத்திய உச்ச நீதிமன்றம் உச்ச நீதிமன்றம்
    ராகுல் காந்திக்கு திடீர் உடல் நலக்குறைவு; முஸ்தபாபாத் பேரணியை ரத்து செய்தார்  ராகுல் காந்தி
    திடீரென மூடப்படும் FIITJEE பயிற்சி மையங்கள்; பெற்றோர்கள் அதிர்ச்சி; பின்னணி என்ன? கல்வி

    உயர்நீதிமன்றம்

    சந்தேஷ்காலி வழக்கு: ஷேக் ஷாஜகானை சிபிஐயிடம் ஒப்படைக்க வங்காள அரசுக்கு உயர்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு மேற்கு வங்காளம்
    மதுரை கள்ளழகர் வைபவம்: உயர் நீதிமன்ற மதுரைக்கிளை பிறப்பித்த அதிரடி உத்தரவு மதுரை
    நீண்ட காலமாக லிவ்-இன் உறவில் இருக்கும் பெண்ணுக்கு, பிரிந்த பிறகு ஜீவனாம்சம் பெற உரிமை உண்டு: நீதிமன்றம் மத்திய பிரதேசம்
    'என்கிரிப்ஷனை உடைத்தால் இந்தியாவை விட்டு வெளியேறிவிடுவோம்': உயர்நீதிமன்றத்தில் வாட்ஸ்அப் வாதம் வாட்ஸ்அப்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025