NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு 
    காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு

    காஞ்சிபுரத்தில் குழந்தை தொழிலாளர்கள் அதிகரிப்பு 

    எழுதியவர் Nivetha P
    Apr 26, 2023
    02:55 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவில் உள்ள தமிழ்நாடு மாநிலத்தில் தொழிலாளர்கள் நலத்துறை சட்டங்களை பலர் மதிக்காமல் செயல்பட்டு வருகிறார்கள்.

    குழந்தை தொழிலாளர்களை பலர் தற்போதும் பணியமர்த்தப்படும் கொடுமை நடந்துக்கொண்டு தான் உள்ளது.

    அதன்படி காஞ்சிபுரத்தில் கடந்த சில மாதங்களிலேயே 3 சம்பவங்களில் குழந்தைத்தொழிலாளர் விவகாரம் தெரியவந்துள்ளது.

    ஆட்சியர் அலுவலகம் அருகேயுள்ள பிரபல உணவகத்தில் வடமாநில தொழிலாளர்கள் 2பேர் மீட்கப்பட்டு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

    அவர்களுள் ஒருவர் 18வயதுக்குட்பட்டவர் என்பது தெரியவந்துள்ளது.

    இதனால் அந்த உணவக உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிகிறது.

    தொடர்ந்து காஞ்சிபுரம் காரை கிராமத்தில் மிக்ஸர்,சேவு செய்யும் கடையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 17வயது சிறுவனும் அவனின் 12வயது தம்பியும் தனது பெற்றோர் வாங்கிய கடனை அடைக்க அந்த கடையில் பணி செய்துவந்தது தெரியவந்துள்ளது.

    பணி

    பல்வேறு இடங்களில் ரெய்டு நடத்த நடவடிக்கை 

    மேற்கூறப்பட்டுள்ள அந்த சம்பவம் குறித்தும் தற்போது தொழிலாளர் நலத்துறை விசாரணை நடந்து வருகிறது.

    மேலும் காஞ்சிபுர மாவட்டம் பாலுச்செட்டிசத்திரம் அருகே கோடீஸ்வரன் என்பவர் வீடு கட்டி வருகிறார்.

    இந்நிலையில் நேற்று(ஏப்ரல்.,25) அங்கு போர்வெல் போட பணியாளர்கள் வந்துள்ளார்கள்.

    அவர்களுள் சத்தீஸ்கர் மாநில சிறுவன் மேக்நாத்(15) என்பவனும் இருந்துள்ளான்.

    இவன் வேலையின்போதே இரும்பு பைப் தலையில் விழுந்து அங்கேயே உயிரிழந்தான்.

    இதன் மூலம் குழந்தை தொழிலாளர்கள் காஞ்சிபுரத்தில் அதிகம் இருப்பது அப்பட்டமாக தெரிகிறது.

    இதனால் தற்போது குழந்தை தொழிலாளர்களை மீட்டெடுக்க தொழிலாளர்கள் நலத்துறை பல்வேறு இடங்களில் ரெய்டுகள் நடத்த வேண்டும் என்னும் கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    இந்தியா
    மாவட்ட செய்திகள்

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    தமிழ்நாடு

    பட்டு வேட்டி, சட்டை அணிந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி  ஆர்.என்.ரவி
    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் அறிவிப்பு  சேகர் பாபு
    திருப்பூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.81 லட்சம் மோசடி - வங்கி மேலாளர் உள்பட 3 பேர் கைது  திருப்பூர்
    331 கோடியில் 745 கோவில்களின் திருப்பணிகள் நடைபெறும் -அமைச்சர் சேகர்பாபு  சேகர் பாபு

    இந்தியா

    'போடியம் முதல் போராட்டம் வரை' : டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் மீண்டும் போராட்டம் இந்திய அணி
    இந்தியாவில் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?  ஆப்பிள்
    5 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று - புதிய வழக்குகள் ரத்து!  கொரோனா
    130 மில்லியன் டாலர்கள் மதிப்புடைய கடன் பத்திரங்களை திரும்பப் பெறுகிறது அதானி துறைமுகம்!  பங்குச்சந்தை செய்திகள்

    மாவட்ட செய்திகள்

    பொள்ளாச்சியில் 60 முறை சிறைக்கு சென்றவர் 61வது முறையாக சிறைக்கு செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது கோவை
    ஒரு கிராமமே ஒன்றாக திருப்பதிக்கு செல்லும் அதிசயம் திருப்பதி
    ராமநாதபுரம் பரமக்குடியில் 9ம் வகுப்பு மாணவி கூட்டு பலாத்காரம் - 5 பேர் கைது ராமநாதபுரம்
    அன்பு ஜோதி ஆசிரம விவகாரம்-தமிழக டிஜிபி'க்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் விழுப்புரம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025