NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்
    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் கண்டனம்

    டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் கைது - முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

    எழுதியவர் Nivetha P
    May 29, 2023
    12:52 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்தியாவின் மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் மற்றும் பாஜக எம்பி.,யுமான பிரிஜ் பூஷன் சிங் பாலியல் புகாரில் சிக்கியுள்ளார்.

    இவரை கைது செய்ய கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இது குறித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாத நிலையில் நேற்று(மே.,28) புதிய பாராளுமன்றத்தினை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

    இந்த விழாவின் போது, 'மஹிளா மகாபஞ்சாயத்' என்னும் பெயரில் போராட்டம் நடத்த வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முடிவெடுத்துள்ளனர்.

    ஆனால், இதற்கு காவல்துறை அனுமதி தர மறுத்துள்ளது.

    எனினும் இவர்கள் காவல்துறை மறுப்பினை மீறி பாராளுமன்றம் நோக்கி பேரணியாக செல்ல முயற்சி செய்துள்ளார்கள் என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    எதிர்ப்பு

    புதிய பாராளுமன்ற திறப்பு விழா போது போராட்டம் நடத்த முயற்சி 

    இதனால் அவர்களை போலீசார் கைது செய்ததையடுத்து, அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஏற்பட்டது.

    இந்த சம்பவத்திற்கு பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "பாஜக பாராளுமன்ற உறுப்பினர்மீது மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகாரளித்து போராடி வரும் நிலையில் அந்த கட்சியின் தலைமை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை".

    "ஆனால் புதிய பாராளுமன்ற திறப்புவிழாவின் போது போராட்டத்தில் ஈடுபட்ட அவர்களை தூக்கியும், இழுத்து சென்றும் கைது செய்தது கண்டிக்கத்தக்கது".

    "இது செங்கோல் முதல்நாளே வளைந்துவிட்டது என்பதையே காட்டுகிறது".

    "குடியரசு தலைவர், அனைத்து எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்புகளையும் மீறி நடக்கும் இந்த விழாவில் அராஜகமும் அரங்கேறுவது தான் அறமா?" என்று பதிவு செய்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    டெல்லி
    காவல்துறை
    காவல்துறை

    சமீபத்திய

    70 வயது முதியவரின் வயிற்றில் இருந்து 8,000க்கும் மேற்பட்ட பித்தப்பைக் கற்கள் அகற்றம் மருத்துவம்
    தேசிய கல்விக்கொள்கையை ஏற்க மறுத்ததால் தமிழக அரசுக்கு நிதி கட்; சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் சென்னை உயர் நீதிமன்றம்
    ஆர்சிபி அணியின் கேப்டன் ஆனார் ஜிதேஷ் சர்மா; ரஜத் படிதார் இம்பாக்ட் வீரராக வைக்கப்பட்டது ஏன்? ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
    அதிகரிக்கும் கொரோனா பரவல்; பூஸ்டர் தடுப்பூசி செலுத்த எய்ம்ஸ் மருத்துவர் வலியுறுத்தல் கொரோனா தடுப்பூசிகள்

    மு.க ஸ்டாலின்

    ரம்ஜான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்  தமிழ்நாடு
    பரனூர் தொழுநோய் மறுவாழ்வு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு!  ஸ்டாலின்
    உதயநிதி, சபரீசனிடம் இருந்து என்னைப் பிரிக்க முயற்சிக்கிறார்கள்: ஆடியோ சர்ச்சை பற்றி பேசிய PTR  தமிழ்நாடு
    ஜூன் 5ம் தேதி தமிழ்நாடு வருகிறார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு  சென்னை

    டெல்லி

    ஊழல் வழக்கில் மணீஷ் சிசோடியாவுக்கு எதிரான புதிய ஆதாரம் கிடைத்துள்ளதாக தகவல் இந்தியா
    டெல்லி மெட்ரோவில் 'ஆபாசமாக' உடை அணிந்து சென்ற பெண் பேட்டி இந்தியா
    இண்டிகோ: போதையில் விமான அவசர கதவை திறக்க முயற்சித்த விமான பயணி இந்தியா
    ஏர் இந்தியா விமானத்தில் விமான பணியாளர்களை தாக்கிய பயணி ஏர் இந்தியா

    காவல்துறை

    திருநெல்வேலி பற்களை பிடுங்கிய விவகாரம் - மேலும் 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு  சிபிசிஐடி
    மல்யுத்த வீரர்களின் போராட்டத்தில் போலீஸ் வன்முறை நடந்ததாக குற்றச்சாட்டு  இந்தியா
    வேங்கைவயல் விவகாரம் - மேலும் 10 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை நடத்த உத்தரவு  தமிழ்நாடு
    திருவாரூரில் பல கோடி மதிக்கத்தக்க ஐம்பொன் சிலைகள் மீட்பு - 2 பேர் கைது  தமிழ்நாடு

    காவல்துறை

    மணிப்பூரில் கலவரம்: வன்முறையாளர்களை பார்த்தவுடன் சுடுவதற்கு உத்தரவு  இந்தியா
    சிறுமிகளுக்கு கன்னித்தன்மை சோதனை - தமிழக தலைமை செயலாளருக்கு நோட்டீஸ்  தமிழ்நாடு
    ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு  தூத்துக்குடி
    திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை - முக்கிய குற்றவாளி துப்பாக்கி முனையில் கைது  திருவண்ணாமலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025