NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு
    சுருக்கம் செய்ய
    அடுத்த செய்திக் கட்டுரை
    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு
    2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு

    எழுதியவர் Sekar Chinnappan
    May 16, 2025
    12:57 pm

    செய்தி முன்னோட்டம்

    எதிர்க்கட்சிகளின் கூட்டணியாக இருக்கும் இந்தியா கூட்டணியின் எதிர்காலத்தை சந்தேகிக்கும் வகையிலும், ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) உள்கட்டமைப்பு வலிமையை எடுத்துக்காட்டும் வகையிலும், மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் பேசிய சமீபத்திய கருத்துக்கள் அரசியல் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

    டெல்லியில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ப.சிதம்பரம், 2029 பொதுத் தேர்தலுக்கு முன்னதாக இந்தியா கூட்டணி தற்போது பலவீனமாக இருப்பதை ஒப்புக்கொண்டார்.

    மேலும், இதை சரிசெய்ய ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பாஜகவின் ஆதிக்கம் 2029க்கு பிறகும் தொடரும் என்று எச்சரித்தார்.

    எனினும், குறைகளை சரிசெய்து, ஒன்றிணைப்பதற்கு இன்னும் கால அவகாசம் இருப்பதால், அதை செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

    பாஜக 

    பாஜகவினர் கருத்து

    பாஜக தலைவர்கள் அவரது கருத்துக்களை விரைவாக விவாதப் பொருளாக்கினர். கட்சியின் செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி ப.சிதம்பரத்தின் உரையின் வீடியோவை வெளியிட்டார்.

    வீடியோவை வெளியிட்டு, இது காங்கிரஸ் கட்சியினர் கூட எதிர்க்கட்சிகளின் எதிர்காலத்தை சந்தேகிக்கிறார்கள் என்பதை நிரூபித்ததாகக் கூறினார்.

    முன்னாள் மத்திய அமைச்சரும் தற்போதைய பாஜக கேரள தலைவருமான ராஜீவ் சந்திரசேகர், இந்தியா கூட்டணியை ஊழல் மீதான அன்பால் ஒன்றுபட்ட வண்ணமயமான தொகுப்பு என்று குறிப்பிட்டார்.

    பாஜகவின் தேர்தல் பலத்தை எதிர்கொள்ள 2023 இல் உருவாக்கப்பட்ட இந்தியா கூட்டணி, குறிப்பாக ஹரியானா மற்றும் பீகார் போன்ற மாநிலங்களில் உள் மோதல் மற்றும் குறைந்த வெற்றியைக் கண்டுள்ளது.

    மாநில தேர்தல்கள்

    கூட்டணியின் வலிமையை சோதிக்கும் மாநில தேர்தல்கள்

    இதற்கிடையே, பீகார் (2025), மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு (2026) மற்றும் உத்தரபிரதேசம் (2027) ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் முக்கிய மாநிலத் தேர்தல்கள் இந்த கூட்டணியின் ஒற்றுமையை சோதிக்கும் களமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சிதம்பரத்தின் கருத்துக்கள் ஒரு மூலோபாய எச்சரிக்கையாக வருகின்றன.

    2029 இல் பாஜக தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இந்த கருத்து எதிர்பார்க்க வைத்தாலும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி காட்சிகள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று வலியுறுத்துகின்றன.

    எனினும், சிதம்பரத்தின் கருத்து குறித்து காங்கிரஸ் தலைமை எந்த கருத்தையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சிதம்பரம்
    காங்கிரஸ்
    பாஜக
    தேர்தல்

    சமீபத்திய

    இந்தியா கூட்டணி வேஸ்ட்; 2029லும் பாஜகவே ஆட்சி அமைக்கும் சூழல் இருப்பதாக ப.சிதம்பரம் பேச்சு சிதம்பரம்
    தடாலடியாக உயர்ந்த தங்கம் விலை; இன்றைய நிலவரம் என்ன? தங்கம் வெள்ளி விலை
    பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்; கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் திறப்பு தாமதமாக வாய்ப்புள்ளதாக தகவல் பள்ளிகள்
    ரூ.1,000 கோடி டாஸ்மாக் பணமோசடி வழக்கில் தமிழகத்தில் 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை டாஸ்மாக்

    சிதம்பரம்

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் இன்று தொடக்கம்  சிதம்பரம் கோவில்

    காங்கிரஸ்

    சமந்தா விவகாரம்: நேரடியாக ராகுல் காந்தி-யை டேக் அறிக்கை வெளியிட்ட நடிகை அமலா சமந்தா
    நாக சைதன்யா-சமந்தா சர்ச்சை: தெலுங்கானா அமைச்சருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் நாகர்ஜுனா  சமந்தா
    ஹரியானாவில் மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக; ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாட்டு கட்சியின் கூட்டணி ஆதிக்கம் தேர்தல் முடிவு
    ஹரியானா வரலாற்றில் முதல் முறை; தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைக்கிறது பாஜக தேர்தல் முடிவு

    பாஜக

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை அண்ணாமலை
    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கு விசாரணையில் முரண்பாடு: சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை அண்ணாமலை
    வருமானவரித் துறையினருக்கு ஷாக்; முன்னாள் பாஜக எம்எல்ஏ வீட்டில் நடத்திய சோதனையில் சிக்கிய முதலைகள் மத்திய பிரதேசம்
    ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிப்பு இடைத்தேர்தல்

    தேர்தல்

    ஒரு நாடு, ஒரே தேர்தல் மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம் என தகவல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஒரே நாடு ஒரே தேர்தல்
    2026 தொடக்கத்திற்குள் பங்களாதேஷில் தேர்தல்; முகமது யூனுஸ் வெளியிட்ட முக்கிய தகவல்  பங்களாதேஷ்
    ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா மக்களவையில் நாளை அறிமுகம்; சட்ட அமைச்சர் அர்ஜுன் மேக்வால் தாக்கல் செய்கிறார் ஒரே நாடு ஒரே தேர்தல்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025