NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்
    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்

    தமிழகத்தில் மீண்டும் ஒரு NEET மரணம்; மகன் இறந்த சில மணிநேரத்திலேயே தந்தையும் உயிரிழந்த சோகம்

    எழுதியவர் Venkatalakshmi V
    Aug 14, 2023
    12:27 pm

    செய்தி முன்னோட்டம்

    மருத்துவப்படிப்பிற்கென அறிமுகப்படுத்தப்பட்ட நீட் தேர்விற்கு, தமிழகத்தில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    NEET தேர்வு, மாணவர்களுக்கு கூடுதல் மனஉளைச்சலை ஏற்படுத்தும் எனவும், பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள், NEET தேர்விற்கு பணம் செலவு செய்து பயிற்சி எடுக்க முடியாது எனவும் கூறப்பட்டது.

    இதனால், அனைத்து சமூகத்தினருக்கும், பொதுவான தேர்வுமுறை மட்டுமே வேண்டும், நீட் தேர்வை ஒழிக்க வேண்டும் என பல காட்சிகள் கூக்குரலிட்டு வருகின்றன.

    இந்த நிலையில், ஆண்டுதோறும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல், பல மாணவர்கள் மனஅளவில் பாதிக்கப்படுகின்றனர். ஒரு சிலர் தற்கொலை போன்ற முடிவுகளையும் எடுக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.

    இந்த சூழலில், சென்னை குரோம்பேட்டை குறிஞ்சி நகரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் 19 மாணவர் NEET தேர்வில் தோற்றதால், உயிரை மாய்த்துக்கொண்டார்.

    card 2

    மகனை தொடர்ந்து தந்தையும் மரணம்:

    ஜெகதீஸ்வரன், 2 வருடமாக நீட் தேர்வில் தேர்ச்சி பெறமுடியவில்லை. இருப்பினும், மீண்டும் 3-வது முறையாக நீட் தேர்வு எழுதி, எம்.பி.பி.எஸ். சீட் வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடு இருந்துள்ளார்.

    ஆனால் இம்முறையும் தோல்வி அடைந்ததால், விரக்தியில் தூக்கிட்டு கொண்டார்.

    இதனை தொடர்ந்து, மகன் இறந்த துக்கம் தாளாமல், அவரின் தந்தையும் இன்று தூக்குமாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

    இந்நிலையில், இவர்கள் இறப்பு குறித்து முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளார், "மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணமே #NEET பலி பீடத்தின், கடைசி மரணமாக இருக்கட்டும்! அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்." எனக்கூறியுள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    முதல்வர் அறிக்கை

    மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணமே #NEET பலி பீடத்தின், கடைசி மரணமாக இருக்கட்டும்! அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அறிவுமிகு மாணவக் கண்மணிகளே, தன்னம்பிக்கை கொள்ளுங்கள். உயிரை மாய்த்துக் கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மன்றாடிக்… pic.twitter.com/BsavDQK1a4

    — M.K.Stalin (@mkstalin) August 14, 2023
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    நீட் தேர்வு
    தமிழகம்
    சென்னை
    தற்கொலை

    சமீபத்திய

    நானியின் 'HIT 3' Netflix இல் வெளியாகிறது, இந்த தேதியில்! நெட்ஃபிலிக்ஸ்
    எல்லைக்கு அருகிலுள்ள விமான நிலையங்களில் செயல்படும் விமானங்களுக்கு கட்டாய பாதுகாப்பு உத்தரவுகளை வழங்கிய DGCA விமான நிலையம்
    இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான இந்திய டெஸ்ட் அணியை அறிவித்த பிசிசிஐ  பிசிசிஐ
    இந்தியாவின் புதிய டெஸ்ட் கேப்டனாக ஷுப்மான் கில் நியமனம்: விவரங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள்  ஷுப்மன் கில்

    நீட் தேர்வு

    நீட் நுழைவுத் தேர்வுக்கு தேதிகள் அறிவிப்பு! இந்தியா
    பிபிசி ஆவணப்படம் மற்றும் அதானி பிரச்சனைகளைப் பற்றி பட்ஜெட் கூட்டதொடரில் பேச இருக்கும் திமுக எம்பிகள் பட்ஜெட் 2023
    நீட் தேர்வு விலக்கு குறித்து இன்னும் 2 தினங்களில் விளக்கம் - மா.சுப்ரமணியம் சென்னை
    அதிமுக ஆட்சிக்கால நீட் தொடர்பான 'ரிட்' மனு வாபஸ் - தமிழக அரசு அதிமுக

    தமிழகம்

    முக்கிய பிரமுகர்கள் வருகையின் போது தடையில்லா மின்சாரம் வழங்க உத்தரவு தமிழ்நாடு
    பாலியல் வழக்கு: முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டு சிறை தண்டனை தமிழ்நாடு
    பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் டிஜிபிக்கு ஜாமீன்  தமிழ்நாடு
    கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் தமிழக மாவட்டங்களின் பட்டியல் தமிழ்நாடு

    சென்னை

    மகளிர் உரிமை தொகைக்கான விண்ணப்பங்கள் விநியோகம் - சென்னை ஆணையர் விளக்கம்  மு.க ஸ்டாலின்
    நடிகர் யோகி பாபுவுக்கு 'தல' தோனி கேக் ஊட்டிவிடும் வீடியோ வைரல்  யோகி பாபு
    மகளிர் உரிமை தொகை திட்டம் - 2 கட்டங்களாக நடத்தப்படவுள்ள விண்ணப்பப்பதிவு முகாம்கள்  தமிழ்நாடு
    வண்டலூர் உயிரியல் பூங்கா கட்டணம் இரட்டிப்பாக உயர்வு  சுற்றுலா

    தற்கொலை

    கோவை சரக டி.ஐ.ஜி விஜயகுமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை  கோவை
    கோவை DIG தற்கொலைக்கான காரணம் இதுதான்: டிஜிபி சங்கர் ஜிவால் விளக்கம் கோவை
    முந்தைய நாளே தற்கொலைக்கு தயாரான கோவை டிஐஜி - பரபரப்பு தகவல்  கோவை
    கோவை டி.ஐ.ஜி.விஜயகுமார் தற்கொலை வழக்கு - 8 பேருக்கு சம்மன்  காவல்துறை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025