NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்: 24ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் 
    அடுத்த செய்திக் கட்டுரை
    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்: 24ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் 
    நாடு முழுவதும் 9 'வந்தே பாரத்' ரயில் சேவைகளை துவக்கி வைக்கிறார் பிரதமர் மோடி

    நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில்: 24ஆம் தேதி துவக்கி வைக்கிறார் பிரதமர் 

    எழுதியவர் Nivetha P
    Sep 20, 2023
    06:11 pm

    செய்தி முன்னோட்டம்

    இந்திய நாட்டின் வந்தே பாரத் ரயில் சேவையானது கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரியில் டெல்லி-வாரணாசி இடையே பிரதமர் மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.

    இந்த ரயிலின் அதிவேகம், குளிர்சாதன வசதி, போன்ற சேவைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்தது.

    இதனால் நாடு முழுவதும் இந்த ரயில் சேவையினை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்நிலையில் இம்மாதம் 24ம் தேதியன்று இந்தியா முழுவதும் 9 'வந்தே பாரத்' ரயில்களின் சேவைகளை பிரதாமர் மோடி காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    அதனுள் நெல்லை-சென்னை, சென்னை-விஜயவாடா, காசர்கோடு-திருவனந்தபுரம் உள்ளிட்ட 3 வந்தே பாரத் ரயில்கள் தென்னக ரயில்வே கோட்டத்திற்கானது என்பது குறிப்பிடவேண்டியவை.

    ரயில் 

     தென்னக ரயில்வே மேலாளரான பத்மநாபன் ஆனந்த் நேரில் ஆய்வு 

    அதன்படி நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்தில் துவங்கவுள்ளது.

    தற்போது அதற்கான முன்னேற்பாடுகளை தென்னக ரயில்வே மேலாளரான பத்மநாபன் ஆனந்த் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

    அதன்பின் செய்தியாளர்களிடம் பேசுகையில், "பிரதமர் மோடி 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் இந்த ரயில்களின் சேவைகளை துவக்கி வைக்கவுள்ளார். இந்த வந்தே பாரத் ரயில் நெல்லையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு மதியம் 1.50க்கு சென்னை எழும்பூர் வந்தடையும்" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், நெல்லையில் இருந்து சேவை துவங்கவுள்ளதால், சென்னையில் இருந்து அந்த ரயில்களை கொண்டு செல்ல தொழில்நுட்ப குழு இன்று(செப்.,20)சென்னைக்கு வரவுள்ளது.

    நாளை(செப்.,21) இந்த ரயில்கள் நெல்லைக்கு கொண்டு சேர்க்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    பிரதமர் மோடி
    வந்தே பாரத்
    இந்தியா

    சமீபத்திய

    யாரு சாமி இவரு! அமேசான் வேலையை விட்டுவிட்டு பாடகராக மாறிய ஐஐஎம் பட்டதாரி டிரெண்டிங்
    ஐஓஎஸ் பயனர்களுக்கு ஏஐ மூலம் ப்ரொபைல் படங்களை உருவாக்கும் அம்சத்தை வெளியிட்டது வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    வேற லெவல் சம்பவம்; நடிகர் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டிரெய்லர் வெளியானது கமல்ஹாசன்
    மனைவியுடன் வாக்குவாதத்தால் ஆற்றில் குதித்து காணாமல் போன கணவர்; காப்பாற்றப் போனவர் சடலமாக மீட்பு லக்னோ

    பிரதமர் மோடி

    இந்தியா-அமெரிக்கா போர் விமான இன்ஜின் ஒப்பந்தம்: அமெரிக்க பாராளுமன்றம் ஒப்புதல் இந்தியா
    "இந்தியாவின் அறிவியல் முயற்சிகள் தொடரும்": பிரதமர் மோடி இஸ்ரோ
    'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி இந்தியா
    பிரதமர் மோடி 9 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுப்பு எடுக்கவில்லை இந்தியா

    வந்தே பாரத்

    இந்திய ரயில்வேயில் புரட்சியை ஏற்படுத்தும் வந்தே பாரத் ரயில் பற்றி சில சுவாரஸ்ய தகவல்கள் ஆட்டோமொபைல்
    டிஜிட்டல் மயமாகும் இந்தியா ரயில்வே! 80%க்கும் அதிகமான ரயில் டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன ரயில்கள்
    அதிவேக மற்றும் சொகுசு ரயில்களில், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும்: இந்திய ரயில்வே அறிவிப்பு ரயில்கள்
    ஆசியாவின் முதல் ஹைட்ரஜன் அதிவேக ரயில், சீனாவில் அறிமுகம்: அதன் சிறப்பம்சங்கள் இதோ ரயில்கள்

    இந்தியா

    பொது வருங்கால வைப்புநிதியில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி பெற முடியுமா? முதலீடு
    இந்தியாவில் மேலும் 72 பேருக்கு கொரோனா பாதிப்பு கொரோனா
    ஒரே மருத்துவமனையில் 3 மாதங்களுக்குள் 179 பச்சிளம் குழந்தைகள் பலி: காரணம் என்ன? மகாராஷ்டிரா
    இந்தியாவுக்குள் ஊடுருவ பயங்கரவாதிகளுக்கு உதவிய பாகிஸ்தான் ராணுவம்: மறைமுகமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதால் சர்ச்சை  பாகிஸ்தான்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025