NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு
    அடுத்த செய்திக் கட்டுரை
    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு
    மாணவிகள் கடந்த மார்ச் 30 மற்றும் 31 தேதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள்: மாணவிகள் எதிர்ப்பு

    எழுதியவர் Sindhuja SM
    Apr 03, 2023
    04:36 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் 5ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    4 ஆசிரியர்கள் மீது மாணவிகள் பாலியல் புகார் அளித்ததை அடுத்து, கல்லூரி 6ஆம் தேதி வரை மூடப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 6ஆம் தேதிக்கு முன்பே கல்லூரி திறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாணவிகள், ஆசிரியர்கள் மீது பாலியல் புகார் அளித்து, கடந்த மார்ச் 30 மற்றும் 31ஆம் தேதிகளில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து, கலாஷேத்ரா கல்லூரிக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வரை விடுமுறை என்று கல்லூரி நிர்வாகம் அறிவித்தது.

    இந்த பாலியல் புகாரின் பேரில் ஒரு ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

    மீதமுள்ள 3 ஆசிரியர்களும் கல்லூரிக்குள் நுழைய கூடாது என்ற உத்தரவு போடப்பட்டது.

    இந்தியா

    கல்லூரி திறக்கப்படுவதற்கு மாணவிகள் எதிர்ப்பு

    இதனையடுத்து, கல்லூரியில் வரும் 5ஆம் தேதி முதல் தேர்வு நடைபெறும் என்று கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதற்கு மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

    புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கும் வரை, மீண்டும் கல்லூரிக்கு வர மாட்டோம் என்று மாணவியர் அறிவித்துள்ளனர்.

    மகளிர் ஆணையம் இது குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும் மாணவிகளிடமும் விசாரணை நடத்தி வருகிறது.

    இதற்கிடையில், மகளிர் ஆணைய தலைவர் இன்று மாலை தலைமைச் செயலாளரை சந்திக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

    மகளிர் ஆணைய தலைவர் குமாரி தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    சென்னை

    சமீபத்திய

    2030 ஆம் ஆண்டுக்குள் இந்த வேலைகளையெல்லாம் ஏஐ எடுத்துக்கொள்ளும்; ஆய்வில் வெளியான புதிய தகவல் செயற்கை நுண்ணறிவு
    கன்னட மொழி சர்ச்சை: தக் லைஃப் படத்தை வெளியிடக் கோரி நீதிமன்ற உதவியை நாடும் கமல்  கமல்ஹாசன்
    கடந்த 10 ஆண்டுகளில் விமான இயக்கத்திற்கான செலவுகள் 40 சதவீதம் குறைவு; IATA தகவல் விமானம்
    தமிழ்நாட்டில் மீண்டும் வாட்டத் தொடங்கிய வெப்பம்; பல மாவட்டங்களில் வெப்பநிலை சதமடித்தது வானிலை அறிக்கை

    தமிழ்நாடு

    தமிழக அரசின் ஆணையால், டபுள் சந்தோஷத்தில் இருக்கும் நடிகர் மோகன் ராம் வைரல் செய்தி
    கோவையில் இனி மது வாங்கினால் கூடுதலாக ரூ.10 செலுத்த வேண்டும் - மாவட்ட ஆட்சியர் கோவை
    ஆசிரியர் தகுதி தேர்வு 2ம் தாளில் 2% ஆசிரியர்கள் கூட தேர்ச்சி பெறவில்லை - அதிர்ச்சி தகவல் பள்ளி மாணவர்கள்
    சென்னை பேருந்தில் செல்லும் ஒருவருக்கு கொரோனா இருந்தால் அது 9 பேரை பாதிக்கும் கொரோனா

    சென்னை

    சென்னை பெரியமேடு மற்றும் மெரினா பகுதிகளில் கஞ்சா விற்பனை - 2 பேர் கைது காவல்துறை
    ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலம் குறித்து வீடியோ வெளியீடு கொரோனா
    தமிழகத்தில் முதன்முறையாக வருகிறது பி.எம். மித்ரா ஜவுளி பூங்கா - விருதுநகரில் அமைகிறது விருதுநகர்
    மீண்டும் தங்கம் விலை அதிகரிப்பு - ஒரே நாளில் ரூ.560 உயர்வு! தங்கம் வெள்ளி விலை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025