NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்
    அடுத்த செய்திக் கட்டுரை
    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்
    தமிழகத்தின் காலை சிற்றுண்டி திட்டம் - தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் நிறைவேற்றம்

    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம்

    எழுதியவர் Nivetha P
    Nov 29, 2023
    08:23 pm

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டமானது மேயர் பிரியா தலைமையில் இன்று(நவ.,29) காலை ரிப்பன் வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு ஆணையாளர் ராதாகிருஷ்ணன், துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இக்கூட்டத்தின் கேள்வி நேரத்தில் கவுன்சிலர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தார் மேயர் பிரியா.

    அதன் பின்னர் இக்கூட்டத்தில் 43 முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

    அதனுள் ஒன்று தான், சென்னை அரசு பள்ளி மாணவர்களுக்கு முதலமைச்சர் காலை உணவு திட்டம் தனியார் நிறுவனங்கள் கொண்டு வழங்குவதற்கான அனுமதி கோரும் தீர்மானம் ஆகும்.

    இதில் சென்னை மாநகராட்சியின் வசமுள்ள மொத்தம் 358 அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார்.

    சென்னை 

    தனியார் நிறுவன ஒப்பந்தத்திற்க்கு சில விதிமுறைகள் வகுக்கப்படுகிறது 

    இந்த திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு ஓராண்டிற்கு காலை உணவு அளிக்க ரூ.19 கோடி செலவாகும் பட்சத்தில் 6,530 மாணவர்கள் இத்திட்டம் மூலம் பயன்பெறுகின்றனர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்நிலையில் இப்பணியை தனியார் நிறுவனம் மேற்கொள்ள இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான ஒப்பந்தத்தை முடிவு செய்ய துணை ஆணையர் சரண்யா அரி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிகிறது.

    மேலும் குறிப்பிட்ட நேரத்தில் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்க வேண்டும். கால தாமதம் ஏற்பட்டால் அபராதம் விதிப்பு,

    சுத்தமாக சமையல் கூடம் பராமரித்தல் வேண்டும், தவறினால் அபராதம், தவறு தொடர்ந்தால் ஒப்பந்தம் ரத்து,

    அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான தரமான உணவு வகைகள் வழங்குதல் உள்ளிட்ட சில விதிமுறைகள் வகுக்கப்படவுள்ளது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

    ட்விட்டர் அஞ்சல்

    சென்னை மாநகராட்சி 

    #BREAKING || சிற்றுண்டி திட்டம்- தனியாருடன் ஒப்பந்தம்"

    காலை சிற்றுண்டி திட்டம் தனியாருக்கு வழங்குவது உள்பட 43 தீர்மானங்கள் சென்னை மாநகராட்சியில் நிறைவேற்றம்#BreakfastScheme #Chennai #ChennaiCorporation #ThanthiTV pic.twitter.com/hs9hVS3T0B — Thanthi TV (@ThanthiTV) November 29, 2023

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    மு.க ஸ்டாலின்
    மேயர் பிரியா

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    மு.க ஸ்டாலின்

    5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ்நாடு வருகிறார் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி கனிமொழி
    அனைத்து பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் குறித்த ஆய்வு - தமிழக அரசு தகவல் தமிழ்நாடு
    தமிழக முதல்வரை சந்தித்து பேசிய இஸ்ரோ தலைவர் சோம்நாத் இஸ்ரோ
    அரசு வழக்கறிஞர்களின் கட்டண விகிதம் 2 மடங்காக உயர்வு - அரசாணை வெளியீடு  தமிழக அரசு

    மேயர் பிரியா

    சென்னை மாநகரின் 4 இடங்களில் பிரம்மாண்ட வாகன நிறுத்தம் அமைக்க முடிவு  சென்னை
    பள்ளிகளை சீரமைக்க சிங்கார சென்னை திட்டத்தின் கீழ் ரூ.50 கோடி ஒதுக்கீடு  சென்னை
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025