LOADING...
சென்னையில் பிட்புல், ராட்வீலர் வளர்க்கத் தடை: மீறினால் ₹1 லட்சம் அபராதம்
சென்னையில் பிட்புல், ராட்வீலர் வளர்த்தால் ரூ.1 லட்சம் அபராதம்

சென்னையில் பிட்புல், ராட்வீலர் வளர்க்கத் தடை: மீறினால் ₹1 லட்சம் அபராதம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 19, 2025
03:15 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையில் அண்மைக்காலமாக வளர்ப்பு நாய்கள் பொதுமக்களைத் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி, ஆக்ரோஷமான நாய் இனங்களான பிட்புல் மற்றும் ராட்வீலர் ஆகியவற்றைச் சென்னையில் புதிதாக வாங்கி வளர்க்கவும், அவற்றுக்குப் புதிய உரிமம் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறி புதிதாக இந்த நாய்களை வாங்குபவர்களுக்கு ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.

விதிமுறைகள்

ஏற்கனவே வளர்ப்பவர்களுக்கான விதிமுறைகள்

இந்தத் தடை உத்தரவு வரும் டிசம்பர் 20 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. ஏற்கனவே பிட்புல் அல்லது ராட்வைலர் நாய்களை முறையாக உரிமம் பெற்று வளர்த்து வருபவர்கள், அவற்றை அப்புறப்படுத்தத் தேவையில்லை. ஆனால், அந்த நாய்களைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது கண்டிப்பாகக் கழுத்துப்பட்டை மற்றும் வாய்க்கவசம் அணிவித்திருக்க வேண்டும். இந்த விதிமுறையை மீறும் உரிமையாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்படும்.

உரிமம்

பொதுவான செல்லப்பிராணி உரிமம் மற்றும் அபராதம்

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் நாய் அல்லது பூனை வளர்க்கும் அனைவரும் வரும் டிசம்பர் 14 ஆம் தேதிக்குள் (கடைசித் தேதி முடிந்துவிட்டது) ஆன்லைன் மூலம் உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்பது ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உரிமம் பெறாத செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு ₹5,000 அபராதம் விதிக்கப்படும். மேலும், பொது இடங்களில் நாய்களைச் சங்கிலி இல்லாமல் தன்னிச்சையாக விடவோ அல்லது பொது இடங்களை அசுத்தப்படுத்தவோ அனுமதி இல்லை. மீறினால் ₹500 அபராதம் வசூலிக்கப்படும். இதற்காக மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

Advertisement