LOADING...
எலி மருந்து ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்து வாடிக்கையாளரை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்; வைரலாகும் வீடியோ
எலி மருந்து ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்து வாடிக்கையாளரைக் காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்

எலி மருந்து ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்து வாடிக்கையாளரை தற்கொலையிலிருந்து காப்பாற்றிய பிளிங்கிட் ஊழியர்; வைரலாகும் வீடியோ

எழுதியவர் Sekar Chinnappan
Jan 09, 2026
02:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தின் தலைநகரான சென்னையில், பிளிங்கிட் நிறுவனத்தில் பணிபுரியும் டெலிவரி ஊழியர் ஒருவர், சமயோசிதமாகச் செயல்பட்டு தற்கொலை எண்ணத்தில் இருந்த வாடிக்கையாளர் ஒருவரை காப்பாற்றியுள்ளார். நள்ளிரவில் வந்த ஒரு விசித்திரமான ஆர்டரை டெலிவரி செய்ய மறுத்ததன் மூலம், அவர் ஒரு மிகப்பெரிய விபரீதத்தைத் தடுத்து நிறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆர்டர்

நள்ளிரவில் வந்த விசித்திரமான ஆர்டர்

சென்னையில் பிளிங்கிட் நிறுவனத்தில் டெலிவரி ஊழியராகப் பணியாற்றும் 'டில்லி ரைடர்' என்பவருக்கு, நள்ளிரவு நேரத்தில் மூன்று பாக்கெட் எலிக்கொல்லி மருந்துக்கான ஆர்டர் வந்துள்ளது. பொதுவாக அவசரத் தேவைகளுக்காகவே நள்ளிரவில் மக்கள் ஆர்டர் செய்வார்கள் என்பதால், அவர் முதலில் அதனை டெலிவரி செய்யத் தயாராகியுள்ளார். ஆனால், அந்த ஆர்டரை வழங்கியவரிடம் தொலைபேசியில் பேசியபோது, அவர் அழுதுகொண்டே பேசியது அவருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சாமர்த்தியம்

சாமர்த்தியமாகப் பேசி உயிரைக் காப்பாற்றிய ஊழியர்

சந்தேகமடைந்த டெலிவரி ஊழியர், வாடிக்கையாளரின் முகவரிக்குச் சென்றபோது அங்குள்ள சூழல் சரியில்லை என்பதை உணர்ந்துள்ளார். உடனடியாக அவரிடம், "நீங்கள் ஆர்டர் செய்த பொருள் வரும் வழியில் தொலைந்துவிட்டது" என்று பொய் கூறியுள்ளார். அவர் சோகத்துடன் அதனை ஏற்றுக் கொண்டபோது, அவருக்கு அறிவுரை வழங்கத் தொடங்கியுள்ளார். "வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சனை இருந்தாலும் தற்கொலை எண்ணத்திற்குச் செல்லாதீர்கள்; எலித் தொல்லை என்றால் காலையில் கூட மருந்து வாங்கலாம், நள்ளிரவில் ஏன் ஆர்டர் செய்கிறீர்கள்?" என்று கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Advertisement

பாராட்டு

வைரலாகும் வீடியோ - குவியும் பாராட்டுகள்

இந்தச் சம்பவம் குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ சுமார் 70 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. "இன்றுதான் நான் எதையோ சாதித்த உணர்வு வருகிறது" என்று அவர் அந்த வீடியோவில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். நவீன உலகில் ரேட்டிங் மற்றும் டெலிவரி நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஊழியர்களுக்கு மத்தியில், மனிதாபிமானத்துடன் செயல்பட்ட இவருக்குப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டுக்களைக் குவித்து வருகின்றனர். மேலும், இதுபோன்ற அபாயகரமான பொருட்களை நள்ளிரவில் விநியோகிப்பதை ஆன்லைன் நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Advertisement

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

Advertisement