சென்னை ஆருத்ரா விவகாரம் - பாஜக நிர்வாகிகள் ஆஜராக சம்மன்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் சென்னை அமைந்தகரையை தலைமையிடமாக கொண்டு திருவள்ளூர்,திருவண்ணாமலை, போன்ற பல இடங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்நிறுவனத்தில் 1லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.36ஆயிரம் வட்டி வழங்கப்படும் என்ற மோசடி விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
அதனை நம்பி கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 9,255பேரிடம் ரூ.2,438கோடி பெற்று மோசடி செய்துள்ளார்கள் என்று செய்திகள் வெளியானது.
இதனை தொடர்ந்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தியதில் பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரீஸை கைது செய்துள்ளார்கள்.
மேலும் இதில் தொடர்புடைய 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிதி மோசடி
மாவட்ட அளவில் 30 பேர் கொண்ட தனிப்படை
ஏற்கனவே இதில் சம்பந்தப்பட்ட 10 பேரை போலீசார் கைது செய்துள்ளார்கள்.
இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய மற்றவர்களை பிடிக்க பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி ஆசியம்மாள் தலைமையில் மாவட்ட அளவில் 30 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாஜக விளையாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிஷிடம் மேற்கொண்ட விசாரணையில் தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்தது தெரியவந்துள்ளது.
இதனையடுத்து பணம் பெற்ற பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அலெக்ஸ் மற்றும் ராணிப்பேட்டை பாஜக நிர்வாகி டாக்டர் சுதாகர் ஆகியோரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.