NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு 
    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு

    செங்கல்பட்டு அரசு மருத்துவமனை - தவறான சிகிச்சை காரணமாக பெண் குழந்தையின் கை முறிவு 

    எழுதியவர் Nivetha P
    Jul 15, 2023
    11:40 am

    செய்தி முன்னோட்டம்

    செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர், கொடூர் பகுதியினை சேர்ந்தவர் துரை(30), அவரது மனைவி ஜெயஸ்ரீ(28).

    கொடூர் பகுதியிலேயே துரை மளிகை கடை ஒன்றினை நடத்தி வந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

    இதனிடையே ஜெயஸ்ரீ கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாகியுள்ளார்.

    இதனையடுத்து கர்ப்பமான ஜெயஸ்ரீ கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டுள்ளார் என்று தெரிகிறது.

    இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ஜெயஸ்ரீக்கு பிரசவ வலி ஏற்பட்ட காரணத்தினால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனை பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அதனை தொடர்ந்து அவருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை பெண் குழந்தை பிறந்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது.

    இதனை தொடர்ந்து, பிரசவத்தின் பொழுது, குழந்தையின் வலது கை செயலிழந்த நிலையில் இருந்ததாகவும், இடது கையில் முறிவு ஏற்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

    சிகிச்சை 

    அலட்சியம் காட்டிய மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை 

    மேலும், குழந்தையின் தலையில் இருந்து தொடர்ந்து 3 நாட்களாக ரத்தம் வழிந்த நிலையில் இருந்துள்ளது.

    இது குறித்து மருத்துவரிடம் கூறியும், அவர்கள் சரியான பதிலும் அளிக்காமல், குழந்தையை பரிசோதனையும் செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாக ஆத்திரம் கொண்ட ஜெயஸ்ரீயின் உறவினர்கள் நேற்று(ஜூலை.,14) செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அறைக்கு சென்றுள்ளனர்.

    ஆனால் அவர் அங்கு இல்லாத காரணத்தினால் மருத்துவமனை மேலாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து, தவறான சிகிச்சையளித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரிடம் புகாரளித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    செங்கல்பட்டு
    மருத்துவக் கல்லூரி

    சமீபத்திய

    பாகிஸ்தானுக்கு பின்னடைவு; சூராப் நகரத்தைக் கைப்பற்றியதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் அறிவிப்பு பலுசிஸ்தான்
    ஜூன் 1, 2025 முதல் இந்த ஸ்மார்ட்போன்களில் எல்லாம் வாட்ஸ்அப் ஆப் செயல்படாது; எந்தெந்த போன் தெரியுமா? வாட்ஸ்அப்
    திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக மதுரையில் முதல்வர் ஸ்டாலினுக்கு பேரணி மூலம் பிரமாண்ட வரவேற்பு மு.க.ஸ்டாலின்
    பாடுவதற்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என பின்னணிப் பாடகி சின்மயி உறுதி சின்மயி

    செங்கல்பட்டு

    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த மருத்துவர் - போராட்டத்தில் பயிற்சி மாணவர்கள்  போராட்டம்
    மருத்துவ மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த மருத்துவர் பணியிடை நீக்கம்  போராட்டம்

    மருத்துவக் கல்லூரி

    150 மருத்துவக் கல்லூரிகளிடம் இருந்து அங்கீகாரம் பறிக்கப்படலாம் இந்தியா
    மருத்துவ மாணவிகள் ஹிஜாப் அணிய ஐஎம்ஏ தலைவர் டாக்டர் சுல்பி நுஹு எதிர்ப்பு கேரளா
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025