NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு
    அடுத்த செய்திக் கட்டுரை
    கன்னியாகுமரி  திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு
    புனரமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு

    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022
    04:14 pm

    செய்தி முன்னோட்டம்

    கன்னியாகுமரியில் கடல் நடுவில் இருந்த பாறையில் 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது.

    இச்சிலையை காண ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றலாப்பயணிகள் படகில் பயணம் செய்து கண்டு வருவார்கள்.

    இந்த சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க நான்கு ஆண்டிற்கு ஒரு முறை இதனை பழுது பார்த்து ரசாயன கலவையை சிலை மேல் பூசுவது வழக்கம்.

    2017ம் ஆண்டு கடைசியாக ரசாயனம் பூசப்பட்டது, கடந்தாண்டு இப்பணி நடக்க ஏற்பாடு செய்த நிலையில், கொரோனா பரவலால் இது தடைப்பட்டது.

    இந்நிலையில் தற்போது இந்தாண்டு ரூ.1 கோடி செலவில் இப்பணியானது மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

    பொங்கல் பண்டிகை முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு அனுமதி என எதிர்பார்ப்பு

    சிலையில் ஏற்பட்ட வெடிப்புகள் மீது கலவை பூசப்பட்டு, படிந்துள்ள உப்பினை சுத்தம் செய்ய காகிதக் கூழ் ஒட்டப்பட்டது

    இப்பணியில் முதற்கட்டமாக சிலையை சுற்றி இரும்பு பைப்புகள் கொண்டு சாரங்கள் அமைக்கப்பட்டு, சிலை முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது.

    அதன்பின், சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் உள்ளிட்ட கலவை கொண்டு சிலையில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மீது பூசப்பட்டது.

    இதனையடுத்து சிலையில் படிந்துள்ள உப்பினை சுத்தம் செய்ய காகிதக் கூழ் ஒட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

    இதன் பின்னர் சிலை மீது ரசாயனம் பூசும் பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது,

    தற்போது 145 அடி உயர துக்கு அமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த இரும்பு சாரங்களை பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

    இன்னும் சிலநாட்களில் சாரங்களை பிரிக்கும் பணி நிறைவடையும் பட்சத்தில், பொங்கல் பண்டிகை முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு படகில் சென்று சிலையை காண அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராஜதந்திர MPக்கள் குழுவில் யார் எங்கு செல்கிறார்கள்; நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்! இந்தியா
    கார்த்திக் சுப்புராஜ்- சூர்யாவின் 'ரெட்ரோ' இந்த தேதியில் நெட்ஃபிளிக்ஸில் வெளியாகிறது நடிகர் சூர்யா
    மெக்சிகன் கடற்படைக் கப்பல் நியூயார்க்கின் பிரபல புரூக்ளின் பாலத்தில் மோதி விபத்து நியூயார்க்
    "நாங்களும் அனுப்புவோம்": இந்தியாவைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் மற்ற நாடுகளுக்கு எம்.பி.க்களை அனுப்பவுள்ளதாம்! பாகிஸ்தான்

    தமிழ்நாடு

    "பழைய திட்டத்திற்கு 'நம்ம ஸ்கூல்' என்ற புது பெயர் வைத்த திமுக!": எதிர்க்கட்சித் தலைவர் காட்டம் எடப்பாடி கே பழனிசாமி
    இலவச ரேஷன் திட்டம் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பு! பிரதமர் மோடி
    காங்கிரஸ் பாத யாத்திரையில் கலந்து கொண்ட பங்கேற்ற திமுக எம்.பி கனிமொழி! திமுக
    "நான் ஒரு கிறிஸ்தவன் என்பதில் பெருமைக் கொள்கிறேன்": அமைச்சர் உதயநிதி உதயநிதி ஸ்டாலின்

    தமிழக அரசு

    திருவள்ளூரில் ரூ.1.97 கோடி செலவில் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் - 70 சதவிகித பணிகள் நிறைவு தமிழ்நாடு
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம் தமிழ்நாடு
    தமிழகத்தில் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட 'மக்கள் ஐடி' - தமிழக அரசின் புது திட்டம் தமிழ்நாடு
    8 வழிச்சாலை: அதிமுக செய்தால் தவறு, திமுக செய்தால் சரியா? திமுக
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025