NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    NewsBytes Tamil
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு
    இந்தியா

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு

    கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு
    எழுதியவர் Nivetha P
    Dec 31, 2022, 04:14 pm 0 நிமிட வாசிப்பு
    கன்னியாகுமரி  திருவள்ளுவர் சிலைக்கு ரூ.1 கோடி செலவில் புனரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு நிறைவு
    புனரமைக்கப்பட்ட திருவள்ளுவர் சிலை

    கன்னியாகுமரியில் கடல் நடுவில் இருந்த பாறையில் 133 அடி உயர சிலை எழுப்பப்பட்டு கடந்த 2000ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அப்போது ஆட்சியில் இருந்த முதல்வர் கருணாநிதியால் திறந்து வைக்கப்பட்டது. இச்சிலையை காண ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றலாப்பயணிகள் படகில் பயணம் செய்து கண்டு வருவார்கள். இந்த சிலை உப்புக்காற்றினால் பாதிக்கப்படாமல் இருக்க நான்கு ஆண்டிற்கு ஒரு முறை இதனை பழுது பார்த்து ரசாயன கலவையை சிலை மேல் பூசுவது வழக்கம். 2017ம் ஆண்டு கடைசியாக ரசாயனம் பூசப்பட்டது, கடந்தாண்டு இப்பணி நடக்க ஏற்பாடு செய்த நிலையில், கொரோனா பரவலால் இது தடைப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தாண்டு ரூ.1 கோடி செலவில் இப்பணியானது மேற்கொள்ளப்பட்டு நிறைவு பெற்றுள்ளது.

    சிலையில் ஏற்பட்ட வெடிப்புகள் மீது கலவை பூசப்பட்டு, படிந்துள்ள உப்பினை சுத்தம் செய்ய காகிதக் கூழ் ஒட்டப்பட்டது

    இப்பணியில் முதற்கட்டமாக சிலையை சுற்றி இரும்பு பைப்புகள் கொண்டு சாரங்கள் அமைக்கப்பட்டு, சிலை முழுவதும் தண்ணீரால் சுத்தம் செய்யப்பட்டது. அதன்பின், சுண்ணாம்பு, கடுக்காய், பனை வெல்லம் உள்ளிட்ட கலவை கொண்டு சிலையில் ஏற்பட்டுள்ள வெடிப்புகள் மீது பூசப்பட்டது. இதனையடுத்து சிலையில் படிந்துள்ள உப்பினை சுத்தம் செய்ய காகிதக் கூழ் ஒட்டப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. இதன் பின்னர் சிலை மீது ரசாயனம் பூசும் பணி செய்து முடிக்கப்பட்டுள்ளது, தற்போது 145 அடி உயர துக்கு அமைக்கப்பட்டு கட்டப்பட்டிருந்த இரும்பு சாரங்களை பிரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இன்னும் சிலநாட்களில் சாரங்களை பிரிக்கும் பணி நிறைவடையும் பட்சத்தில், பொங்கல் பண்டிகை முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு படகில் சென்று சிலையை காண அனுமதி அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    சமீபத்திய
    தமிழ்நாடு
    தமிழக அரசு

    சமீபத்திய

    கேம் பிரியர்களுக்காக வரும் ASUS ROG Phone 7 - என்ன எதிர்பார்க்கலாம்? ஸ்மார்ட்போன்
    ரூ.2 லட்சம் மதிப்பிலான ஜாக்கெட்டை அணிந்திருந்த வட கொரிய அதிபரின் மகள் வட கொரியா
    காஷ்மீருக்கு செல்லும் முதல் ரயில் பாதை டிசம்பரில் திறக்கப்படும்: ரயில்வே அமைச்சர் ஜம்மு காஷ்மீர்
    வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி நடிக்கும் 'விடுதலை' படத்தின் மேக்கிங் வீடியோ வெற்றிமாறன்

    தமிழ்நாடு

    திருச்சியில் ஆன்லைன் ரம்மியில் பணம் இழந்தவர் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலை திருச்சி
    அடுத்த 5 நாட்களுக்கு தொடர் மழை: எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும் புதுச்சேரி
    இதுவரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட தலைவர்கள்: இந்திரா காந்தி முதல் ஜெயலலிதா வரை இந்தியா
    பத்மஸ்ரீ விருது பெற்ற பாம்புப்பிடி வீரர்கள் தமிழக முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர் பத்மஸ்ரீ விருது

    தமிழக அரசு

    தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டிற்கு பாராட்டு தெரிவித்த நடிகர் கார்த்தி கார்த்தி
    டி.எம்.சவுந்தர ராஜன் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் பெயரில் ஒரு சாலை: தமிழக அரசு அறிக்கை கோலிவுட்
    தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களுக்கான தொகுப்பூதியம் உயர்வு தமிழ்நாடு
    தமிழகத்தில் குறவன் குறத்தி ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை - தமிழக அரசு உத்தரவு தமிழ்நாடு

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023