NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
    அடுத்த செய்திக் கட்டுரை
    செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 
    செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    செம்பரப்பாக்கம் ஏரியிலிருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு - கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை 

    எழுதியவர் Nivetha P
    Nov 28, 2023
    04:23 pm

    செய்தி முன்னோட்டம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி தற்போது தீவிரமடைந்துள்ளது.

    இதன் காரணமாக மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து வருவதால் நீர்நிலைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகி வருகிறது.

    அதன்படி சென்னையிலுள்ள முக்கிய அணைகளின் நீர்மட்டமும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக கூறப்பட்டது.

    இந்நிலையில் 24 அடி உயரம் கொண்ட சென்னை செம்பரப்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 23 அடியினை நெருங்குவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் அணையில் இருந்து இன்று(நவ.,28) 200 கன அடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து தற்போது திருநீர்மலை, அடையாறு, திருமுடிவாக்கம், குன்றத்தூர், சிறுகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கும் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

    மழை 

    காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு 

    மேலும், ஏரிக்கு வரும் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து கூடுதலான உபரி நீர் திறக்கவும் வாய்ப்புள்ளது என்று காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

    முன்னதாக ஏரியில் இருந்து வினாடிக்கு 25 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அது 200 கனஅடியாக உயர்ந்துள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.

    தொடர்ந்து, செம்பரப்பாக்கம் ஏரிக்கு வந்து கொண்டிருந்த நீர் வரத்து வினாடிக்கு 532 கன அடியில் இருந்து 452 கன அடியாக குறைந்துள்ளது என்றும் தகவல்கள் கூறுகிறது.

    இதனிடையே, 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போதைய நீர் இருப்பு 3,195 மில்லியன் கன அடி என்றும் கூறப்படுகிறது.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    சென்னை
    பருவமழை
    ஆட்சியர்
    எச்சரிக்கை

    சமீபத்திய

    செரிமானம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டும் பெருங்காயம் செரிமானம்
    ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்: விவரங்கள் ஐபிஎல் 2025
    30 பயணங்கள் திட்டமிடப்பட்டுள்ளன, 7 மட்டுமே தொடங்கப்பட்டுள்ளன-இந்தியாவின் விண்வெளிப் திட்டங்கள் தாமதவற்கு என்ன காரணம்? விண்வெளி
    பாகிஸ்தானுக்காக 'உளவு பார்த்ததாக' 11 பேர் பிடிபட்டனர்: இந்தியாவில் உளவு பார்த்ததற்கு என்ன தண்டனை?  பாகிஸ்தான்

    சென்னை

    இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை பார்க்க மனைவியுடன் மும்பை சென்ற ரஜினிகாந்த் மும்பை
    சுதந்திரப் போராட்ட வீரரும், மூத்த கம்யூனிஸ்ட் தலைவருமான சங்கரய்யா காலமானார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்
    கூர்நோக்கு இல்லங்கள் - மனநல ஆலோசகரை நியமிக்க முதல்வரிடம் பரிந்துரைத்த நீதிபதி சந்துரு குழு  மு.க ஸ்டாலின்
    பிக்பாஸ் டானியலிடம் நூதன மோசடி- குத்தகைக்கு வீடு வழங்குவதாக ₹17 லட்சத்தை ஏமாற்றிய கும்பல் திரைப்படம்

    பருவமழை

    பருவமழை காலத்தில் ஒரு முறையாவது சென்று பார்க்க வேண்டிய சுற்றுலா தலங்கள்  சுற்றுலா
    41 ஆண்டுகளுக்கு பிறகு தலைநகரில் கொட்டி தீர்க்கும் பருவமழை  டெல்லி
    அரிசி ஏற்றுமதி தடை எதிரொலி: தமிழ்நாட்டில் அதிகரித்த விலை  தமிழ்நாடு
    திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழை எதிரொலி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை மழை

    ஆட்சியர்

    மதுரையில் கிரானைட் குவாரி நடத்த எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டம்  மதுரை
    மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு  தமிழ்நாடு
    கார்த்திகை தீபம் - திருவண்ணாமலையில் 2,500 பேருக்கு மட்டுமே மலையேற அனுமதி  திருவண்ணாமலை
    கோவையில் ப்ளூ வைரஸ் காய்ச்சல் அதிகாரிப்பு; முகக்கவசம் கட்டாயமாக்கபட்டது  தமிழ்நாடு

    எச்சரிக்கை

    தமிழகத்தில் புதுவித சைபர் குற்றம் தொடர்பான புகார்கள் - எச்சரிக்கை விடுக்கும் டிஜிபி சைலேந்திர பாபு சமூக வலைத்தளம்
    அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் கனமழை எச்சரிக்கை!  கேரளா
    காலிமனை பதிவிற்கு நிலத்தின் தற்போதைய புகைப்படம் கட்டாயம் - பதிவுத்துறை உத்தரவு  தமிழ்நாடு
    அரசு விரைவு பேருந்துகளை சாலையோர உணவகங்களில் நிறுத்துவதற்கான நிபந்தனைகள் தமிழ்நாடு
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025